சூரியாதி யோகங்கள்
By/Siddhayogi Sivadasanravi
சூரியாதி யோகங்கள்
பாரம்பரிய ஜோதிட முறையில் சூரியனை மையமாக வைத்து சில யோகங்கள் கூறப்பட்டுள்ளன. அவைகளைக்காண்போம்.
வாசி யோகம்
“வாசி” என்றால் “வருவது” என்று பொருள். ஜாதகத்தில் சூரியன் நின்ற ராசிக்கு 12 ல் நிற்கும் கிரகம் சூரியனை நோக்கி வரும் கிரகமாகும். இதன் காரணத்தினாலேயே ஜாதகத்தில் சூரியனுக்கு 12ல் கிரகங்கள் நின்றால் அது வாசி யோகம் என அழைக்கப்படுகிறது.
வேசி யோகம்
“வேசி” என்றால் “போவது” என்று பொருள். ஜாதகத்தில் சூரியன் நின்ற ராசிக்கு 2 ல் நிற்கும் கிரகம் சூரியனை விட்டு விலகிப்போகும் கிரகமாகும். இதன் காரணத்தினாலேயே ஜாதகத்தில் சூரியனுக்கு 2ல் கிரகங்கள் நின்றால் அது வேசி யோகம் என அழைக்கப்படுகிறது.
உபயசாரி யோகம்
“உபயசாரி” என்றால் “இரு புறமும் சஞ்சரிப்பது” என்று பொருள். ஜாதகத்தில் சூரியன் நின்ற ராசிக்கு இரு புறமும் (2-12ல்) கிரகங்கள் நின்றால் அது உபயசாரியோகம் என அழைக்கப்படுகிறது. உபயசாரி யோகத்திற்கு மற்றொரு பெயர் கர்த்தரி யோகமாகும.
------+-++++++++++++++++++++++
் சந்திராதி யோகங்கள்
அனபா யோகம்
“பம்” என்றால் ராசி என்று பொருள். “அனபம்” என்றால் முன் ராசி (12வது ராசி) என்று பொருள். சந்திரனுக்கு 12ல் கிரகம் இருந்தால் அது அனபா யோகம் எனப்படும்.
சுனபா யோகம்
“சுனபம்” என்றால் பின் ராசி(2வது ராசி) என்று பொருள். சந்திரனுக்கு 2ல் கிரகமிருந்தால் அது சுனபா யோகம் எனப்படும்.
த்ருதரா யோகம்
“த்ரு” என்றால் “இரு பக்கம்” என்று பொருள். ”தரா” என்றால் “தராசு” என்று பொருள். தராசுக்கு இரு தட்டுகள் இருப்பது போல் சந்திரனுக்கு இரு புறமும் கிரகமிருந்தால் அது த்ருதரா யோகம் எனப்படும்.
கேமத்ரும யோகம்
“கேம” என்றால் “இல்லை” என்று பொருள். “த்ரும” என்றால் இரு பக்கம் என்று பொருள். “கேமத்ரும” என்றால் இரு பக்கமுமில்லை என்று பொருள்.சந்திரனுக்கு இரு பக்கமும் கிரகம் இல்லாமல் இருந்தால் அது கேமத்ரும யோகம் எனப்படும்.
அதி யோகம்
சந்திரனுக்கு 6-7-8 ல் கிரகங்கள் இருந்தால் அது அதி யோகம் எனப்படுகிறது. சந்திரனுக்கு 6ல் நிற்கும் கிரகம் ,சந்திரன் நின்ற வீட்டிற்கு 12 ம் வீட்டைப்பார்க்கும். சந்திரனுக்கு 7 ல் நிற்கும் கிரகம் சந்திரனை நேர்ப்பார்வையாக பார்க்கும். சந்திரனுக்கு 8 ல் நிற்கும் கிரகம் ,சந்திரன் நின்ற வீட்டிற்கு 2 ம் வீட்டைப்பார்க்கும்.
மேற்கண்ட யோகங்களை ஆய்வு செய்தால் ஒரு விசயம் புரியும். அதாவது சந்திரன் நின்ற ராசிக்கு 12-1-2 அல்லது 6-7-8 ல் ஏதாவது ஒரு கிரகம் இருந்தால் அது நல்லது. அவ்வாறு இருந்தால் சந்திரன் மூலம் ஒரு யோகத்தை ஜாதகன் அனுபவிப்பான
*************-*-**-**********-*-----
வியாபாரத்தில் வெற்றி தரும் குறியீடு
ஆதி சங்கரர் அருளிய சௌந்தர்ய லஹரியில் வரும் 32 வது ஸ்லோகத்திற்குரிய யந்திரத்தை வியார நிறுவனங்களில் வைத்திருந்தால் வியாபாரம் விருத்தியடையும் எனக்கூறப்பட்டுள்ளது. அந்த எந்திரம் கீழே தரப்பட்டுள்ளது. அந்த யந்திரத்தை உற்று நோக்கியபோது ஒரு பெரிய உண்மையை புரிந்துகொள்ள முடிந்தது. அந்த யந்திரம் இரு கைகள் இணைவது போன்ற தோற்றத்தில் அமைந்துள்ளது. கைபேசி தயாரிப்பு நிறுவனமான "நோக்கியா" இந்த குறியீட்டை தெரிந்தோ,தெரியாமலோ பயன்படுத்தி வியாபரத்தில் வெற்றியடைந்துள்ளது. இது போல் நம்ம ஊர் கூட்டுறவு வங்கிகளும் இந்த குறியீட்டை பயன்படுத்தி வருகின்றன. நமது நாட்டின் தேசிய கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியும்,தன் கட்சிக்கு பின்னடைவு வந்த காலத்தில் தன் கட்சியின் சின்னமாக கை சின்னத்தை பயன்படுத்தி பின்னடைவுகளை சரி செய்துள்ளது.காலையில் எழுந்தவுடன் தன் உள்ளங்கைகளை பார்த்து வந்தால் அன்றைய தினம் நாம் ஈடுபடும் விவகாரங்களில் வெற்றியடையலாம் என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலன மார்வாடி கடைகளில் கைகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளதைக்காணலாம். இந்து மதக்கடவுள் சின்னங்களும் கைகளைக்கொண்டு ஏதாவது ஒரு முத்திரைக்காட்டுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் ஒன்று கூடும்போது கைகுலுக்குவதோ அல்லது கைகளால் கட்டித்தழுவிக்கொள்வதோ வழக்கமாக உள்ளது. இதன் மூலம், கைகள் மக்களை இணைக்கும் சின்னமாக உள்ளதை புரிந்துகொள்ளலாம்.
Comments
Post a Comment