படிப்பில் கவனமில்லாத குழந்தைகளுக்கு பரிகாரம்
ரவி சங்கரன்:-
படிப்பில் கவனமில்லாத குழந்தைகளுக்கு பரிகாரம்
----------------------------------------------------------------------------
படிப்பில் கவனம் இல்லாத குழந்தைகளுக்கு தினமும் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட கொடுத்தால். சில நாட்களில் அவர்களுக்கு படிப்பில் கவனம் உண்டாகும்.
_________________________________
கணவன்-மனைவி சண்டை தீர பரிகாரம்
------------------------------------------------------------
கணவன்-மனைவி இருவரும் இடுப்பில் சிவப்பு நிற அரைஞான் கயிறு கட்டிக்கொண்டால்,கணவன்-மனைவியிடையே உள்ள பிணக்குகள் நீங்கும்.
___________________________________
உத்யோகம் அல்லது தொழில் அமைய பரிகாரம்
-----------------------------------------------------------------------
நீங்கள் யாரை குருவாக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களோ அவருக்கு ஒரு மஞ்சள் வேஷ்டி+துண்டு,( குரு பெண்ணாக இருந்தால் மஞ்சள் சேலை) மற்றும் ஒரு பாத ரட்சை(செறுப்பு) இவைகளை அவருக்கு தானமாக அளித்து அவரிடம் ஆசி பெற நல்ல உத்யோகமோ அல்லது தொழிலோ அமையும்.
ருண,ரோக,சத்ரு பீடை நீங்க பரிகாரம்
-------------------------------------------------------
நாம் குருவாக ஏற்றுக்கொண்டவரின் கால்களை நீரினால் சுத்தம் செய்து ,பாதத்தில் மஞ்சள் குங்குமமிட்டு பூஜை செய்து ஆசி பெற ருண,ரோக,சத்ரு பீடைகள் நம்மை விட்டு நீங்கும். குருவின் பாதங்களுக்கு நல்லெண்ணெய் தேய்த்து விட்டால் நம் பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு நீங்கும்.
Comments
Post a Comment