கிரக பலம் அறியும் சூட்சுமம் 1

கிரக பலம் அறியும் சூட்சுமம் 1
===========================
லக்ன சுபர் மற்றும் அசுபரை நிர்ணயம் செய்தல். அதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது அருள் அணி பொருள் அணி.
அருள் அணி
----------------------
குரு
சூரியன்
செவ்வாய்
சந்திரன்
பொருள் அணி
------------------------
சுக்கிரன்
புதன்
சனி
அருள் அணி கிரகம் லக்ன அதிபதியாக வந்தால், பொருள் அணி கிரகங்கள் லக்ன பாவியாக (அ) காரகத்துவ எதிரியாக வரும்.
லக்ன பாவிகளின் பலத்தை (உச்சம், பகை, நீச்சம்) ராசி கட்டத்திலும், ஆதிபத்திய பாவத்தை
கிரகத்தின் காரகத்துவ பலத்தை ராசி கட்டத்திலும், ஆதிபத்திய பலன்களை பாவ கட்டத்திலும் ஆராய வேண்டும்.
கிரக பார்வை பற்றிய சூட்சுமம் 2
============================
ஒரு கிரகம் தன் காரகத்துவ பலன்களை தன் பார்வையில் வெளிபடுத்தும். கிரகத்தின் பார்வை அது பெற்றுள்ள காரக பலம் பொறுத்தே வெளிப்படும். உச்சம் பெற்ற கிரகத்தின் பார்வை அருவி போலவும், ஆட்சி பெற்ற கிரகத்தின் பார்வை, அமைதியான நீரூற்று போலவும், நட்பு பெற்ற கிரக பார்வை, ஆர்பாட்டமில்லாத சுனை போலவும் இருக்கும். நீச்சம் பெற்ற கிரகம் பார்வை பலமில்லை. சுப கிரகத்தின் பார்வை சுபத்தையும், அசுப கிரகத்தின் பார்வை அசுப பலனையும் தரும். இங்கு ஆதிபத்தியம் கணக்கில் வராது. பார்க்கும் கிரகத்தின் காரகத்துவம், பார்க்கப்படும் கிரகத்தின் காரகதுவத்தை பாதிக்கும் (பரிமாறிக் கொள்ளும்). ஏனெனில் அங்கு காரக பரிமாற்றம் நிகழும்.
உதாரணமாக, குரு சனியை பார்த்தால் தன் சுப காரகத்தை சனிக்கு வழங்கும், அதே சமயம் குரு தன் சுப காரகதுவத்தை சிறிது இழக்கும். இந்த பரிமாற்றம் கிரகத்தின் காரக பலத்தை (ஆட்சி, உச்சம், நீச்சம்) பொருத்தது பார்வை பரிமாற்றம் காரகத்துவ பரிமாற்றமே என்பதை நினைவில் கொள்க. குரு ராஜ கிரகம் (பெரிய கிரகம்) என்பதால், அதன் காரகத்துவம் அடுத்த ராஜகிரகமான (பெரிய கிரகம்) சனியை தவிர வேறு எந்த கிரகத்தாலும், பாதிக்கபடுவதில்லை.
சூட்சுமம் 3
==========
ஒரு கிரகம் உச்சம் பெற்றால், அதன் மூல திரிகோண வீட்டின் ஆதிபத்தியம், உச்சம் பெறும் கிரக காரகதன்மையால் பாதிப்படையும்.
உதாரணம்:
மேச லக்னம், செவ்வாய் 10 உச்சம் பெற்றால், அதன் மூல திர்கோண வீடான மேஷம் (லக்னத்தின்) ஆதிபத்தியம் பாதிப்படையும். ஆதாவது கடினமாக ஓய்வுன்றி உழைப்பால் (10 பாவம்) ஜாதகரின் உடல் (லக்னம்) பாதிக்கப்படும்.
வக்கிரம் பற்றிய சூட்சுமம் 4
========================
வக்கிரம் பெறும் கிரகம், லக்ன தொடர்பு அறுபட்டு, அது பாவ ஆதிபத்திய சுதந்திரம் அடையும். அதனால் அக்கிரகம் அதிக காரகத்துவ பலம் பெறும். அதனால் வக்கிரம் பெற்ற கிரகம் ஆதிபத்திய பலனை விட்டு விட்டு, தன் காரகதத்துவ பலனையே அதிகம் வெளிபடுத்தும். அதனால் வக்ரம் கிரகம் அமரும் வீட்டின் பலன்கள் ஜாதகருக்கு சரியாக கிடைக்காது அல்லது தாமதப்படும். தான் பெற்ற ஆதிபத்திய பலன்களை மாற்றி செய்யும் வக்கிரம் பெற்ற கிரகங்கள்.
அதனால் ஆட்சி பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் மத்திம பலத்துடனும், உச்சம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால், நீச்ச பலம் பெற்ற நிலையிலும், நீச்சம் பெற்ற கிரகம் வக்கிரம் பெற்றால் உச்ச பலம் பெற்ற நிலையிலும் செயல்படும். வக்கிரத்தில் காரகதுவமே அதிகம் வெளிப்படும் ஏனெனில் ஆதிபத்திய சுதந்திரம் பெற்றதே காரணம்.
வக்கிரம் காரகத்துவ பலம் பற்றி பேசுவதால், சுப கிரகங்கள் வக்கிரம் நன்மை என்றும், அசுப கிரக வக்கிரம் தீமை என்றும் கூறபடுகிறது.

ஜோதிட சூட்சுமம் 5
================
கிரகம் பெறும் சாரம் பொறுத்து அமர்ந்த கிரகத்தின் பலன் வெளிப்படும். ஆதாவது பாவம் என்பது கோப்பை (அ) டம்ளர் (பாவம்) எனில், அந்த பாவத்தில் இருந்து கிரகம் பெறும் அதிபத்திய பலன் சாரம் (straw) மூலமே. இவை கிரக காரகதுவத்தை பொறுத்து பெறப்படும்.
1. சாரம் கொடுத்தவன் அமர்ந்த கிரகத்தின் நண்பன் எனில்
2. ஒரே அணிகள் எனில்,
3. சாரம் கொடுத்தவன் அசுபன் எனினும், தன் பாவத்திற்கு மறைந்து விட்டான் எனில்
சாரம் பெற்ற நட்சத்திர பண்புகளுக்கு ஏற்ப, நற்பலன்கள் நடைபெறும். எனவே நட்சத்திர குணங்களை அறிந்திருத்தல் அவசியம்.
உதாரணமாக, 7 அதிபதி சாரம் பெறும் நடசத்திர குணாதிசயங்கள், வாழ்க்கை துணைக்கு அமையும். சாரம் கொடுத்தவர் 7 அதிபதியின் நண்பராக இருந்தாலும், லக்ன நண்பராக இருத்தல் அவசியம். அப்பொழுதே சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
ஜோதிட சூட்சுமம் 6
===================
சூரியனில் இருந்து சுக்கிரன் 43 பாகை விலகி இருந்தாலும், சுக்கிரன் 8 பாகைக்குள் நெருங்கி இருந்தாலும், புத்திரபேறு பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்படும். பால் சுரப்பிக்களுக்கு மிதமான வெப்பம் அவசியம் என்பதை ஜோதிடம் அழகாக அறிவுறுத்துகிறது.
ஜோதிட சூட்சுமம் - 7
=================
மூலதிரிகோணம் பற்றிய விளக்கம்
-------------------------------------------------------
மூல திரிகோணம் என்றால் என்ன? - மூலதிரிகோணம் என்ற கிரகத்தின் காரக வலிமை கூறும் இடமாக நம் ஜோதிட நூல்கள் விவரிகின்றன. அவை எவ்வாறு அப்படி வகுக்கப்பட்டன என்பதை கூறும் பதிவு இதுவாகும்.
விளக்கம்-மூல திரிகோணம் என்பது ஒரு கிரகம் தன் கதிர் வீச்சுகளை நிலையாகவோ அல்லது அடர்த்தியாகவோ புவியின் மீது செலுத்தும் இடம் என்பதே என் ஆராய்ச்சியின் முடிவு. அதனால் அவை நிச்சயம் ஆட்சி பெற்ற வீடாகவோ அல்லது உச்சம் பெற்ற வீடாகவோ இருக்க வேண்டும்.
மூல திரிகோண சூட்சுமங்கள்
-----------------------------------------------
செவ்வாய்
-----------------
காலசக்கர தத்துவத்தில், செவ்வாய் ஆட்சி பெறும் வீடான மேஷம் மற்றும் விருச்சகம் இரண்டும் ஆட்சி வீடுகள், இதில் முதல் வரும் வீடு மேஷம். அங்கு நிலை பெறும் சூரியன் உச்சம் பெற்று செவ்வாய் கதிர் வீச்சுகளை தருவதால், மேஷமே செவ்வாயின் மூல திர்கோண வீடு.
சந்திரன்
---------------
கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்றாலும், ரிஷபத்தில் இருந்தே அதிக கதிர்வீச்சுகளை புவி மீது பிரதிபலிப்பதால், சந்திரனுக்கு ரிஷபமே மூல திரிகோண வீடு. மேலும், சந்திரன் நீச்சம் பெறும் விருச்சகத்தில் சூரியன் நிலை பெற்று சந்திரன் ரிஷபத்தில் இருக்கும் போது, பிரகாசமான நிலவை ரிஷப ராசியில் கார்த்திகை தீபம் அன்று காணலாம்.
சுக்கிரன்
--------------
ரிஷபத்தில் உச்சம் பெற்று சந்திரன் மூலதிரிகோண வீடாக இருப்பதால், சுக்கிரனின் அடுத்த வீடான துலாமே மூல திரிகோண வீடு. ஐப்பசி மாதத்தில் அதிகம் காம எண்ணங்கள் தோன்றுவதை சுக்கிரனின் அதிக கதிர்வீச்சு விழுகிறது என்று யூகிக்கலாம்.

சூரியன்
-------------
யாருடைய சொந்த வீடுகளையும் எடுத்து கொள்ளாமல், தன் சிம்ம வீட்டையே சூரியன் மூல திரிகோணமாக எடுத்து கொண்டுள்ளது. மேலும் உத்திராயணம் என்னும் நிலை (சூரியன் வடக்கில் பயணம் மேற்கொள்ளும் மாய தோற்றம்). உண்மையில் புவியே சூரியனின் தெற்கு திசையில் பயணம் தொடங்குகிறது. இதன் மூலம் சூரியன் தன் ஆக்ரோசமான கதிர்வீச்சினை துறந்து, சாந்தம் அடைந்து, மிதமான வெப்பத்தை புவி மீது செலுத்தும் நிலை. எனவே சூரியனின் மூலதிரிகோணம் சிம்மம்.
புதன்
---------
புதனுக்கு ஆட்சி மற்றும் உச்சம் பெறும் வீடு ஒன்றே என்பதால், புதன் தன் கதிர்வீச்சுகளை கன்னி ராசியில் இருந்து அதிகம் புவியில் செலுத்தும். இதனால் புதனின் மூலதிரிகோணம் கன்னி.
வியாழன் (அ) குரு
------------------------------
மீனத்தில் காமத்தின் கிரகமான சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால், குருவின் மூலதிரிகோண வீடு தனுசு. கால சக்கரத்தில் குருவின் முதல் வீடு மற்றும் தர்ம திரிகோண கடை வீடு இதுவே. குரு மிக பெரிய கிரகம், அவரின் வீச்சுகள் அதிகம் எந்தவித கிரகத்தின் இடர்பாடுகள் இல்லாமல் புவி மெது செலுத்தும் இடம் தனுசு ராசி. அதனால் அறிவியல் பூர்வமாக தனுசை குருவின் மூலதிரிகோண வீடு என்று முன்னோர்கள் கூறினர்.
சனி
--------
சனி உருவத்தில் இரண்டாவது பெரிய கிரகம். இதுவும் குருவை போலவே தனித்து கதிர்வீச்சுகளை அதிகம் செலுத்தும் இடம் கும்பம். மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று, சனியின் கதிர்களோடு செவ்வாய் கதிர்கள் கலப்பதால், சனியின் கதிர் வீச்சின் வீரியம் குறைகிறது. எனவே, நம் முன்னோர்கள், சனியின் கும்ப ராசியை மூல திரிகோண வீடாக வைத்தனர்.
ஜோதிட சூட்சுமம் - 8
===================
ஜோதிடத்தில் சந்திர கேந்திரங்களில் இருக்கும் கிரகங்களின் காரகத்துவங்கள், ஜாதகரின் மனதை பிரதிபலிப்பதாகவும், திரிகோணத்தில் இருக்கும் கிரகங்கள், மனதின் எழும் எண்ணங்களை தன் காரகத்துவதில் வழி நடத்தும் (அ) பாதிக்கும் புற காரணிகளாக இருக்கும். சந்திரனின் காரகத்தை அதிகம் பாதிக்கும் கிரகங்களான சுக்கிரன், ராகு, கேது மற்றும் சனி கேந்திரத்தில் இருந்தால், மனதின் செயல்பாடுகள் மேலே கூறியபடி கிரக காரதுவங்கள் மனதின் வழி வெளிப்படும். மேலே கூறிய நான்கு கிரகங்கள் சந்திர திரிகோணத்தில் இருக்கும் போது, மனதின் செயல்பாடுகள் அவர்கள் காரகத்தால் தடுமாற செய்யும். சந்திரனுக்கு குருவின் தொடர்பு கிடைக்கும் போது நல்ல வழிகாட்டி இறைவன் அருளால் கிடைக்கபெறுவார்கள்.
ஜோதிட சூட்சுமம் - 9
==================
ஜோதிடத்தில் ராகு பிதாமகரையும் கேது மாதாமகரையும் குறிக்கிறது. ராகு தந்தை வழி முன்னோர்கள் ஜீனையும், கேது தாய் வழி முன்னோர்கள் ஜீனையும் குறிக்கிறது. இவர்கள் பாரம்பரிய கட்டுகோப்புகள், பழக்க வழக்கங்கள் திரிகோணம் எனப்படும் பாரம்பரிய முக்கோணத்தில் சேமிக்கப்படும். லக்ன திரிகோணத்தில் அல்லது திரிகோண அதிபதிகள் ராகு கேது தொடர்பு ஏற்படும் போது, ஜாதகன் பாரம்பரிய கட்டமைப்பை எதிர்க்கும் அல்லது வெளிவரும் சுழலுக்கு தள்ளப்படுவான். முன்னோர்களை வழிபடாத நிலையை, லக்ன திரிகோணங்களில் இருக்கும் ராகு கேது காட்டிகொடுத்துவிடும். இதையே நாக தோஷம் என்று கூறப்படுகிறது. சூரியனோடு சேரும் ராகு அல்லது கேது 15 பாகைகுள் இருக்கும் போது, முன்னோர்களின் ஆத்மாவை சாந்தபடுத்தாத தோசத்தை குறிக்கும். சூரியன் பித்ரு காரகன் ஆவான். இவ்வாறு சூரியனை பாதிக்கும் கேது எந்த ஆதிபத்தியத்தில் நடைபெறுகிறதோ அந்த ஆதிபத்தியமும் கடுமையாக பாதிக்கப்படும்.
ஜோதிட சூட்சுமம் - 9
==================
திரிகோணம் பற்றிய சூட்சுமம்
------------------------------------------------
ஜாதகத்தில் லக்ன திரிகோணம் மற்றும் திரிகோண அதிபதிகள் பலமுடன் இருக்க, எந்த பிரச்சனைகள் வந்தாலும் அவன் எளிதில் எதிர்கொண்டு சமாளிப்பான். ஒன்றாம் இடம் லக்னதையும், ஐந்தாம் இடம் மகனையும், ஒன்பதாம் இடம் தந்தையையும், ஒன்பதின் ஐந்தாம் இடம் திரும்ப ஜாதகரையும், ஒன்பதின் ஒன்பதாம் இடம் ஐந்தையும் குறிக்கிறது. இதன் மூலம் ஜாதகரின் தந்தையே திரும்ப ஜாதகரின் மகன் வடிவத்தில் பிறந்து பாரம்பரிய கட்டமைப்பை காக்கிறார் என்கிறது ஜோதிடம். இதுவே திரிகோணத்தில் இருக்கும் பரம்பரை கட்டமைப்பு பற்றிய விளக்கம். இவை சக்தி முக்கோணம் என்றும், சக்தி பிரமீடுகள் என்றும் தர்ம திரிகோணம் என்றும் ஜோதிடத்தில் அழைக்கப்படுகிறது. முன்னோர்கள் செய்யும் தான தர்மங்களின் சக்திகள் இந்த முக்கோணத்தில் சேமிக்கப்பட்டு இருக்கும். இதன் காரணத்தாலே புலிப்பாணி முனிவர், திரிகோணத்தில் பாதகாதிபதி வலிமை இழப்பதாக சொல்கிறார். இதில் இருந்து திரிகோணம் ஜாதகருக்கு நல்ல வழிகாட்டியாகவும், தடைகளை தகர்க்கும் முன்னோர்களின் புண்ணியங்கள் என்றால் அது மிகையாகாது.
ஜோதிட சூட்சுமம் - 10
=====================
சனியும் புதனும் திருநங்கை கிரகங்கள் என கூறக்காரணம், புதன் சூரியனின்
மிக அருகில் இருந்து ஆக்க சக்தியை இழந்து விட்டது என்பதாலும். சனி சூரியனில் இருந்து வெகு தொலைவு சென்று விட்டதாலும். புதனும் சனியும் திருநங்கை கிரகங்கள் எனப்படுகின்றன. இதில் இருந்து புதனும் சனியும் காரக பலம் பெற்று, லக்ன அதிபதியுடன் தொடர்பு பெறும் போது, சூரியன் மற்றும் சுக்கிரன் பலம் சனி புதனை விட சற்று குறையும் போது, திருநங்கை தன்மை வெளிப்படுகிறது.
ஜோதிட சூட்சுமம் - 11
===================
கேந்திராதிபத்திய தோஷம்.
ஒரு இயற்கை சுப கிரகம் ஜாதகத்தில் ஒரு கேந்திர அதிபதியாக வந்து, அவர்கள் இன்னொரு கேந்திரம் ஏறுவது கேந்திர ஆதிபத்திய தோஷம்.
தோஷம் என்ற சொல்லுக்கு குறைபாடு என்று பொருள். கேந்திர பலம் பெற்ற அதிபதி இன்னொரு கேந்திர ஆதிபத்தியம் என்னும் உரிமை பெறும் போது, அளவுக்கு அதிகமான சுபதன்மை பெற்று, கேந்திர பலத்தை இழக்கிறார். இதனால் சுபகிரகம் அமரும் கேந்திரம் பாதிக்கபட்டு பலம் குறையும். இதுவே கேந்திராதிபத்திய தோசத்தின் சூட்சுமம்.
ஜோதிட சூட்சுமம் 12
==================
ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் நிற்கும் நட்சத்திர பாதங்கள் போல், லக்னம் ஒரு குறிப்பிட்ட நட்சத்திர பாதத்தில் அமர்ந்திருக்கும். ஜாதகரின் குண நலன்களைப் பற்றி இந்த நட்சத்திரம் பாதம் கூறும். மேலும் இந்த நட்சத்திர அதிபதி சேரும் கிரக காரகத்துவ குணநலன்கள் ஜாதகருக்கு அமையும். பாவ சக்கரத்தில் நட்சத்திர அதிபதி தொடர்பு கொள்ளும் பாவகாரகத்துவ மேல் அதிக ஈடுபாடு இருக்கும்.
பாவங்கள் இந்த லக்ன நட்சத்திர பாதத்தில் இருந்து தொடங்குவதால், ராசி சக்கர கிரக நிலைகளும் பாவ சக்கர நிலைகளும் மாறுகின்றன. அதனால், கிரகங்களின் ஆட்சி, உச்சம்,நீச்சம்,நட்பு, பகை, கிரகசாரம் மற்றும் பார்வைகள் ராசி சக்கரத்திலும். திசை மற்றும் புத்தி பலன்கள் பாவகட்டத்திலும் காண வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பாவ ஆரம்ப நட்சத்திர அதிபதிகள் வைத்து அந்த பாவத்தின் பலம் எளிதில் அறியலாம்.
ஜோதிட சூட்சுமம் 13
====================
குரு சனி இணைவு - ஜீவ கர்ம யோகமும் பிரம்ம ஹத்தி தோசமும்
----------------------------------------------------------------------------------
ஜோதிடத்தில் குரு முன்னோர்களின் புண்ணியத்தை குறிப்பவராக போற்றப்படுகிறார். சனி முன்னோர்களின் கர்ம பலனை குறிபவராக போற்றபடுகிறார். குரு சனி இருவரின் சேர்க்கை ஜீவ கர்ம யோகம் என்ற நிலையை வழங்குகிறது. யோகம் என்ற சொல்லிற்கு சேர்க்கை என்று பொருள். சந்திர கேந்திரத்தில் அல்லது லக்ன கேந்திரத்தில் குரு சனி சேர்க்கை அமைவது மிக பெரிய யோகமான ஜீவ கர்ம யோகத்தை தருகிறது.
குருவும் சனியும் 5 பாகைக்குள் அமைந்து சந்திர கேந்திரத்தில் இருந்தால், அவர்கள் என்னும் எண்ணங்கள், சமுகத்தில் நல்ல மதிப்புள்ள மனிதராக வளம் வருவார்கள் ஈடேறும்.

பிரம்ம ஹத்தி தோசம்
------------------------------------
குரு பலமிழந்து சனி பலம் பெற்று, குருவும் சனியும் 5 பாகைக்குள் இணைந்து அல்லது சம சப்த பார்வை பெறும் போது, இந்த தோஷம் உண்டாகிறது.
சூட்சுமம்-குருவின் பலம் அதிகம் இருந்து, சனி குருவுடன் இணையும் போதோ அல்லது சம சப்த பார்வை பெறும் போதோ, சனியின் அசுப தன்மை குறைந்து சுப தன்மை அடையும். அதே நேரத்தில் குருவின் பலம் சிறிது குறையும். இதில் இருந்து அறியும் சூட்சுமம் என்னவென்றால் முன்னோர்கள் செய்த பூர்வ பலன்களின் (குரு) பலம், முன்னோர்களின் கர்ம பலன்களை (சனி) விட பலம் பெற்று, சனி தரும் அசுப பலன்களை குறைகிறது என்பதே சூட்சுமம். இதனால் ஜாதகன் நினைத்த அனைத்தும் கடவுள் அருளால் கிடைக்க பெற்று, நல்ல நிலையில் இருக்க வைக்கிறது.
இங்கே சனி பலம் அதிகமாகி குரு பலம் குறையும் போது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற பூர்வ பல குறைபாடு ஏற்படுகிறது. ஒரு உயிரை வதைத்த பாவத்தை அல்லது அதற்கு தவறான முறையில் வழிகாட்டியாக இருக்கும் பாவமே, பிரம்ம ஹத்தி தோஷம். இதனால் கர்ம பலம் அதிகமாகி, குரு பலம் குறைகிறது. இதுவே பிரம்ம ஹத்தி தோஷம்.
ஆனால் இந்த தோஷம் மிக அரிதாகவே ஜாதகத்தில் காணலாம். ஏனெனில் குரு அவ்வளவு சீக்கிரம் பலமிலப்பதில்லை.
ஜோதிட சூட்சுமம் 14
==================
ஜோதிடத்தில் சனி ஒருவன் எந்த வகை கர்ம பலன்களால் பாதிக்கப்படுவார் என்பதை குறிப்பவர். ஒருவரின் ஜாதகத்தில் சனி எந்த இயற்கை பாவ கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருக்கிறாரோ, அந்த கிரக காரக பாவத்தை ஜாதகர் சுமந்து வந்திருக்கிறார்கள் என பொருள். சனி ராகுவுடன் இருந்தால் அவரின் தந்தை வழி பாட்டன் செய்த கர்ம பலன்களையும், கேதுவுடன் இருந்தால், தாய் வழி பாட்டி கர்ம பலன்களையும் சுமக்கிறார் என அர்த்தம். மேலும் இவர்கள் காரகத்துவ பாதிப்பு ஜாதகருக்கு இருக்கும். இவ்வாறு பெற்ற கர்மபலன்கள் சனி திசை புத்தி காலங்களில் வெளிப்படும்.
ஜோதிட சூட்சமம் 15
====================
ஜோதிடத்தில் இயற்கை பாவகிரகங்கள் (சூரியன், சனி, செவ்வாய், அசுப சேர்க்கை பெற்ற புதன், தேய்பிறை சந்திரன்) கேந்திர மற்றும் திரிகோண அதிபதிகளாக வந்து, ஆட்சி உச்சம் பெற்றால், நன்மைகள் செய்வது கடினம். அவர்கள் சுப நட்பு கிரகங்கள் சேர்க்கை, பார்வை அல்லது சாரம் பெற்று லக்ன சுபத்தன்மை அடைய வேண்டும். அல்லது நீச்சபங்கம், வர்கோத்தமம் பெற வேண்டும். அப்பொழுது மட்டுமே முழு யோகம் கொடுப்பார்கள்.
ஜோதிட சூட்சுமம் 16
==================
மிதுனம் & கன்னி ஒரு உபய லக்னம், இதன் அதிபதி புதன். புதன் பகவானின் முதல் எதிரி குருபகவனே. புதன் அதீத ஆர்வமும், இடைவிடாத வேகமும் மற்றும் ஐம்புலன்களால் பெற்ற புத்தியையும் கொடுப்பவர். குருவின் செயல்கள் புதனின் செயல்களுக்கு எதிரானது. பக்குவம், போதனை மற்றும் பகுத்தறிவு (அ) நுண்ணறிவு இவை குருவின் செயல்கள். புதன் பொருள் தேடி செல்லும் புத்தியை வழங்கினால், குரு அருள் தேடும் வழியை போதிப்பார். இவ்விரண்டும் எதிர்மறையனதே. அதனாலே புதன் மீனத்தில் நீச்சம். மிதுன லக்னத்தின் கேந்திர ஸ்தானத்தில் புதன் ஒன்று மற்றும் நான்காம் ஸ்தான அதிபதியாகிறார். ஆதாவது, புதன் காரகத்தன்மை தன் தாய் வீட்டான, கன்னியில் உச்சம் பெறுகிறது. இதுவே லக்ன நேர் எதிர்வீடான தனுசு ராசியில் பகை. இருவரும் சுபரே ஆனால், புதன் சார்பு தன்மை உள்ள கிரகம், இதனாலே நண்பர்களின் காரகத்துவ கிரகமாய் புதன் இருக்கிறார். குரு முழுசுபர். சார்பு தன்மையை அகற்றி பக்குவம் பெற களத்திர ஸ்தான அதிபதியாகவும், ஜீவன ஸ்தான அதிபதியாகவும் வந்து, திருமணத்திற்கு பின்னும், தொழில் ஆரம்பித்த பின்னும், லக்ன அதிபதி புதனுக்கு பல கசப்பான அனுபவம் தந்து குரு பக்குவபடுதுகிறார்.
ஜோதிட சூட்சுமம் 17
====================
ஆதிபத்தியம் என்பதன் அர்த்தம், உரிமை என்பதே பொருள். இதற்கு சீரிய உதாரணம், ஏகாதிபத்தியம் என்னும் வார்த்தையே. ஏகம் = தனித்த (அ) ஒன்று, ஆதிபத்தியம் = உரிமை. இட்ஸ் கால்ட் ஆடொக்ர்யாடிக் பிஹேவியர். ஒவ்வொரு பாவமும், நட்சத்திர பாதம் வழியே தன் பாவத்தின் பலன்களை வெளிபடுத்தும் என்பது சூட்சுமம். அதனாலேயே நட்சத்திர அதிபதிகள் போல், நட்சத்திர பாத அதிபதிகள் என்று நாம் முன்னோர்கள் பிரித்தனர். எனவே அந்த சாரம் வழியே வெளிப்படும் பாவபலன், அந்த சாரம் மீது அமரும் கிரகத்தின் காரகத்துவம் பொறுத்தும் மற்றும் சாரநாதன் வலிமை பொருத்தும் பலன்கள் நடைபெறும். ஆதிபத்தியம் என்பது உரிமை மட்டுமே, அது கிரகத்தின் செயல்கள் இல்லை. ஒரு பாவத்தின் செயல்கள்,.ஒருவன் நல்ல கிரகம் (குரு) தீய ஆதிபத்தியம் பெற்று, பலமானால் காரக,பலம் அதிகம் பெற்றால். தீய ஆதிபத்தியம் செய்யும் எண்ணமோ அல்லது செயல் செய்வதற்கு முடியாது. இங்கே காரக பலம் என்பது சுபதன்மை அதிகரித்தல் என்பதே பொருள். ஒரு பாவத்தின் பலன்கள், அந்த பாவத்தில் உள்ள சாரத்தில் அமரும் கிரக காரகத்துவ பண்புகள் மூலம

வெளிப்படும் என்பதே என் இறுதி முடிவு. இதில் சாரநாதன் பலமும் முக்கியம்.
குறிப்பு: வேத ஜோதிடப்படி, பாவங்கள் லக்னங்கள் பொறுத்தே அமைய பெறுவதால், லக்ன அதிபதியின் பலம் பொறுத்தே அனைத்து பாவ பலன்களும், இருக்கும்.
ஜோதிட சூட்சுமம் 18
====================
ஒரு கிரகம் ஏறி நிற்கும் சாரநாதன், கிரகத்தின் நண்பராக இருந்து பலம் பெற்று, அக்கிரகம் இருக்கும் வீட்டுக்கு கேந்திர கோணம் பெற்று இருக்க, அந்த கிரகம் இருக்கும் வீட்டின் ஆதிபத்திய பலன் முழுதும் கிடைக்கும்.
ஜோதிட சூட்சுமம் 19
====================
கிரகங்கள் தொடர்பு பெரும் மனித உடல் அம்சங்கள்
சூரியன் - ஆத்மா, உயிர், வலது கண், இருதயம்
சந்திரன் - மனம், மார்பகம், சிறுநீரகம், இடது கண், முகம்
செவ்வாய்- ரத்தம், எலும்பு மஜ்ஜை, சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள்
புதன் - தண்டுவடம், தொண்டை, தோள்பட்டை மற்றும் நரம்புகள்
குரு - மூளை, கருமுட்டை, தொடை,பாதம்,மூக்கு, நாசி
சுக்கிரன் - பால் சுரப்பிகள், ஆண் விந்து நீர், சுரோனிதம் (பெண் பால் சுரப்பி நீர்)
சனி - பிருஷ்டம்,மூட்டு,முழங்கால்,ஜீரண உறுப்பு,தாடை
ராகு - குடல்,மலக்குடல்,காது,தலை
கேது - ஆசன துளை, நகம்,முடி,மர்ம உறுப்பு
ஜோதிட சூட்சுமம் 20
====================
ஜோதிடத்தில் நோய் அறியும் சூட்சுமம்
-------------------------------------------------------------
ஜோதிடத்தில் 6 மற்றும் 8 பாவங்கள் நோய் தரும் பாவங்கள் என கூறப்பட்டுள்ளது. இதில் 6 பாவம் தவறான பழக்க வழக்கங்களால் வரும் நோய் ஆகும். 8 பாவம் பரம்பரை மற்றும் பூர்வ ஜென்ம பாவத்தால் வரும் நோய் என அறிந்து கொள்ளலாம்.
ஆறாம் பாவம் மூலம் நோய் அறிதல்
-------------------------------------------------------------
ஆறாம் பாவம் லக்ன அதிபதியை விட பலம் பெற்று, கேந்திர ஸ்தானங்களில் அமர, அக்கிரகம் அமர்ந்த கேந்திர அதிபதி பலம் குன்றியவராக அல்லது பகைவராக இருப்பின், 6 பாவ அதிபதி பெறும் சாரம் பொறுத்து நோய் ஏற்படும். சுபர் பார்வை, 6 பாவ அதிபதி மேல் பட, தெய்வ அருளாலும், வைத்தியத்தாலும், 6 பாவத்தால் ஏற்படும் நோய் குணமடையும். மேலும் ஆறாம் அதிபதி நோய் நிவர்த்தி காண, 6 ஆம் வீட்டின் 7 வீடான 12 பாவ பலத்தை அறிதல் வேண்டும். 12 பாவத்தில் அமரும் லக்ன சுப கிரகமும், 12 வீட்டின் அதிபதியின் பலம் பொருத்தும் அவர் பெறும் சாரம் பொருத்தும் நோய் குணமடையும் போக்கை கண்டறியலாம்.
எட்டாம் பாவத்தின் மூலம் நோய் அறிதல்
-------------------------------------------------------------
எட்டாம் பாவம் லக்ன அதிபதியை விட பலம் பெற்று, கேந்திர ஸ்தானங்களில் அமர, அக்கிரகம் அமர்ந்த கேந்திர அதிபதி பலம் குன்றியவராக அல்லது பகைவராக இருப்பின், 8 பாவ அதிபதி பெறும் சாரம் பொறுத்து நோய் ஏற்படும். சுபர் பார்வை, 8 பாவ அதிபதி மேல் பட, தெய்வ அருளால் நோய் குணமாகும். 8 பாவத்தால் ஏற்படும் நோய் எளிதில் குணமடைவதில்லை. எனவே எட்டாம் அதிபதி நோய் நிவர்த்தி காண, 8 ம் வீட்டின் 7 வீடான 2 பாவ பலத்தை அறிதல் வேண்டும். மேலும் 9 இடமான தெய்வ பக்தி ஸ்தானத்தின் பலத்தையும் அறிதல் வேண்டும். 2 பாவத்தில் அமரும் லக்ன சுப கிரகமும், 2 வீட்டின் அதிபதியின் பலம் பொருத்தும் அவர் பெறும் சாரம் பொருத்தும் நோய் குணமடையும் போக்கை கண்டறியலாம்.
ஆறு மற்றும் எட்டாம் அதிபதி ஆட்சி உச்சம் பெறுதல் சுபமில்லை. இவர்கள் பெறும் சாரம் பொறுத்து ஏற்படும் நோய் என்ன என்பதையும், அவர்கள் அமர்ந்த பாவம் பொறுத்து எந்த இடங்களில் நோய் ஏற்படும் என்பதை அறியலாம்.
இதில் லக்ன நண்பராக 6 அல்லது 8 அதிபதிகள் வரும் போது, நோய்கள் ஏற்பட்டாலும் விரைவில் குணமடையும். 6 & 8 வீட்டின் அதிபதி குருவாக வரும் போது, ஆவார் முழுமையாக பலம் இழக்கும் போது மட்டுமே நோய் ஏற்படுகிறது.
பாதாகாதிபதிகள் மூலம் வரும் உடல் கோளாறுகள்.
---------------------------------------------------------------------------------
இதில் பாதாகாதிபதிகள் பலம் பெற்று, கேந்திரத்தில் அமர, கண் திருஷ்டியினாலும், பில்லி சூனியம் மற்றும் செய்வினை போன்ற கோளாறுகளால் ஏற்படும் உடல் உபாதைகளை குறிக்கிறது. சர லக்னத்துக்கு (மேஷம், கடகம், துலாம், மகரம்) 11 இடமும், ஸ்திர லக்னத்துக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சக்கம், கும்பம்) 9 இடமும், உபய லக்னத்துக்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) 7 இட அதிபதிகள் பாதகாதிபதிகள் ஆவார்கள். இவர்கள் ஆட்சி உச்சம் பெற்று பலம் பெற்று, லக்னாதிபதி மற்றும் திரிகோன அதிபதிகள் பல இழக்க, மேற்சொன்ன உபாதைகள் ஏற்படும்.
பொதுவாக கவனிக்க வேண்டியவை
-------------------------------------------------------------
சூரியன் ஆத்மா காரகன் என்பதால் லக்ன அதிபதிக்கு அடுத்து சூரியனையும், மனத்தை குறிக்கும் கிரகமான சந்திரன் நிலையும் ஆராய்ந்து பின் நோய் அறிதல் வேண்டும். இதில் குறிப்பாக, செவ்வாய் ரத்தத்தை குறிப்பதால், தவறான பழக்க வழக்கங்களால் ஏற்படும் நோய் குறிப்பார். சனி கர்மக்காரன் என்பதால் பரம்பரை மற்றும் பூர்வ ஜென்ம பாவங்களால் ஏற்படும் நோயினை குறிப்பார். எனவே ஆறாம் பாவம் ஆராயும் போது பொதுவாக செவ்வாய் நிலையையும், 8 பாவம் ஆராயும் போது, சனி நிலையையும் கவனிக்க வேண்டும்.
நோய் நீக்க மருத்துவம் மற்றும் மருந்து உட்கொள்ளும் நட்சத்திரங்கள்
-------------------------------------------------------------
அஸ்வினி,சதயம் –அனைத்து வியாதிகளும் நீங்க.
பூசம்- பரம்பரை நோய்கள்,பூர்வ ஜென்ம பாவத்தால் வரும் நோய்கள் நீங்க.
மகம்-பித்ரு சாபத்தால் வரும் நோய்கள் நீங்க.
ஜோதிட சூட்சமம் 21
===================
கேந்திரம் என்றால் ஒரு பாவத்தின் மையப்புள்ளிகள் என்று பெயர்கள். ஒவ்வொரு தனித்தனி பாவத்திற்க்கும் தனித்தனி கேந்திரங்கள் உள்ளது. இதில் லக்ன கேந்திரமே முதன்மையானது. ஜோதிடத்தில் கேந்திரங்கள் என்பவை இரண்டாக பிரிக்கப்படும். ஒன்று அக கேந்திரபுள்ளிகள் மற்றும் புற கேந்திர புள்ளிகள். எடுத்துக்காட்டாக, லக்ன கேந்திரங்களில் 1, 4 என்பவை ஒருவனின் அகம் சார்ந்த விஷயங்கள்குறிக்கும் பாவங்கள். ஒன்று என்பது லக்னம் இது தோற்றம் மற்றும் மூளையை குறிக்கிறது, நான்கு என்பது தாய், சுய ஓழுக்கம், இருதயம் மற்றும் சுகத்தை குறிப்பது. எனவே இவை அக கேந்திர புள்ளிகள். புற கேந்திரப்புள்ளிகள் 7, 10. இதில் 7 என்பது புறத்தில் இருந்து வரும் மனைவியையும் மற்றும் தொழில் கூட்டாளிகளையும் குறிக்கிறது. இதில் பத்து என்பது ஜீவனத்திற்கு எனவே இதுவும் புற விஷயங்களை குறிக்கிறது.
கேந்திரங்களில் எப்பவுமே, அதன் எதிர் பாவங்கள் சம வலிமை பெற்றது. ஒன்றை ஒன்று சமன்படுத்தும் தராசு போன்ற அமைப்பாகும். மேலும் ஒவ்வொரு எதிர் பாவமும் ஒன்றை ஒன்று சார்ந்ததாகும். எடுத்துக்காட்டாக, ஒன்றாம் இடம் என்ற லக்னம் (ஜாதகத்தை) எழாம் இடமென்னும் மனைவியை சார்ந்திருப்பவர். நான்காம் இடமென்னும் உடல் ஆரோக்கியத்தையும், ஒழுக்கத்தையும் (4 இடம்) பொருத்தே அல்லது சார்ந்துதான் தொழில் மற்றும் ஜீவனம் வலிமை பெறும்.

ஜோதிட சூட்சுமம் 22
====================
லக்ன கேந்திரங்களை போல் மேலும் இரு முக்கிய கட்டமைப்பு ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. அவை கேந்திரங்களை போன்றே தோற்றம் தருகின்றன. அவையாவன:
1. பண பர ஸ்தானங்கள் (2, 5, 8, 11)
2. ஆபோக்லீமம் (3, 6 , 9 , 12)
ஜாதகரின் பொருளாதார முன்னேறத்தை குறிப்பன இந்த பண பர ஸ்தானங்கள். இவை லக்ன கேந்திர பாவங்களின் இரண்டாம் வீடுகளாக வருகின்றன. ஆதாவது லக்ன கேந்திர புள்ளிகளின் தன ஸ்தானங்கள். இவை.
லக்ன கேந்திர புள்ளிகளின் தன வரவுகள், இந்த பண பர ஸ்தானத்தை பொறுத்தே அமைகிறது. லக்ன அக புள்ளிகளான 1 மற்றும் 4 இவற்றின் தன ஸ்தானங்கள், 2 மற்றும் 5 என்பவை அக பண பர ஸ்தானங்கள், ஓருவனின் வாக்கு அவனின் மூளை மற்றும் யோசிக்கும் திறன் பொறுத்தே அமைகிறது. என்வே இதன் இரண்டாம் இடம் மூளை மூலதனத்தால் பெரும் செல்வதை காட்டுகிறது. அடுத்து நான்காம் வீட்டின் இரண்டாம் வீடு ஐந்தாம் வீடு (5), இது ஒருவன் ஒழுக்கத்தால், படிப்பால் மற்றும் தாய்வீட்டின் உதவியுடன் பெறும் மூலதனத்தை காட்டுகிறது. மேலும் இது பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால், முன் ஜெனம பலன்படி நாம் பெறும் குழந்தை செல்வம் கூட தன வரவில் எடுத்து கொள்ள படுகிறது.
இந்த 2 மற்றும் 5 பாவங்களும், அகம் சார்ந்த பாவங்கள். ஆதாவது ஓருவனின் சுய திறமையால் மற்றும் உழைப்பால் பெறும் பண வரவை கூறும் பாவங்கள் இவை. தான் வாக்கிங் மூலம் பெறும் பண வரவை இரண்டாம் இடமும், தன் ஒழுக்கத்தால் மற்றும் உடல் ஆரோக்கியதால் பெற்ற தனம் 5 இடம்.
மேலும் 8 மற்றும் 11 இடம், புறம் சார்ந்த பண வரவுகளை குறிக்கும். ஒருவன் பிறரின் உழைப்பாலும் மற்றும் மறைமுகமாகவும் பெறும் தனம். 8 இடம் மறைமுக பண வரவுகளையும் (வர தட்சிணை, ஆயள் காப்பீடு தொகை, மாமனார் சொத்துக்கள்). 11 இடம் தொழிலால் (10) பெறும் தன லாபத்தை காட்டுகிறது.
இதில் ஒன்றுக்கொன்று எதிர் பாவங்கள் ஒன்றைஒன்று சரந்தவை, 2 பாவம் எட்டாம் பாவத்தை சார்ந்தது. 5 பாவம் 11 பாவத்தை சார்ந்தது. இரண்டாம் வாக்கு சாதுர்யம் பொறுத்தே அவனுக்கு வரும் மறைமுக தன லாபம். 5 இடமான பூர்வ புண்ணிய பழங்களை பொறுத்தே ஒருவன் பெறும் தொழில் லாபங்கள் .
ஜோதிட சூட்சமம் 23
==================
ஜோதிடத்தில் கேந்திரங்கள் போலவே இருக்கும் இன்னொரு கட்டமைப்பு, ஆபோக்லீமம். இது 3, 6, 9, 12 என்ற பாவப்புள்ளிகளை குறிக்கும். மூன்றாமிடம் என்பது வீரிய மற்றும் இளைய சகோதர ஸ்தானமாகும். ஆறாமிடம் கடுமையான உடல் உழைப்பு, கடன், தவறான பழக்கத்தினால் வரும் நோய்கள், கண் முன் தெரியும் மற்றும் வெல்லக்கூடிய எதிரிகளை குறிக்கும். ஒன்பதாமிடம் பாரம்பரிய பலத்தால் ஒருவன் பெறும் பாக்கியங்கள், தந்தை, தெய்வ நம்பிக்கை, தர்மம் மற்றும் முற்பிறவி இதனை குறிக்கும். பன்னிரண்டாமிடம் மோட்சம், சயன போக இடமாகும்.
மூன்று மற்றும் ஆறு ஆபோக்லீம புள்ளிகள் என அழைக்கபடுகிறது. ஆபோக்லீம என்றால் தடைகளை தருபவை ஏனப்பொருள். ஒருவரின் வீரியமும் மற்றும் கடுமையான உழைக்கும் தன்மையும் ஒருவரின் வெற்றிக்கு வித்திடுபவை. எனவே இவை உபஜெய ஸ்தானங்கள். இதில் வீரியம் என்பது ஆயுள் ஸ்தானத்தின் எட்டாமிடம் என்பதால், இதுவும் ஆயுள் கணிக்க பயன்படும். எனவே மூன்றும் ஆறும் அகம் சார்ந்தவை. ஆறாம் பாவத்தால் உண்டாகும் நோயும் எதிரியும் தெரிந்தே ஜாதகர் ஏற்படுத்திக்கொள்வதாகும். ஒன்பது மற்றும் பன்னிரண்டு இடங்கள், புறம் சார்ந்த ஆபோக்லிம புள்ளிகள். ஒன்பதாம் இடம் என்பது பாரம்பரிய பதிவுகளை பொருத்து செயல்படும் என்பதால் இதுவும் புறம் சார்ந்தவையாகும். பன்னிரண்டு என்பது போகம், தூக்கம் மற்றும் மோட்சம் தருவது. இது லக்ன மறைவிடம் ஏன்பதில் இருந்து இது புறம் சார்ந்தவை என அறியலாம்.
ஒருவரின் வீரியம் (3) பாரம்பரியம் (9) பொருத்து அமையும். பாரம்பரியம் (9) வீரியம் (3) பொறுத்து பாதுகாக்கப்படும்.
ஒருவரின் உழைப்பைப் (6) பொறுத்து உறக்கமும் (12) உறக்கத்தை பொருத்து உழைப்பும் இருக்கும்.
எனவே ஆபோக்லீம ஸ்தானங்களில் கிரகம் அமர்ந்தால் அவை தடைகளைக் கொடுக்கும் என்றும், கடின உழைப்பால் (6) மற்றும் தெய்வ பல (9) ஸ்தானங்கள் மூலம் ஜாதகர் நல்ல நிலை அடையலாம் என கொள்ளலாம்.

ஜோதிட சூட்சுமம் 24
===================
ஜோதிடத்தில் கர்த்தாரி யோகம் என்று ஒரு சொல் உண்டு. கர்த்தாரி என்றால் கத்திரிக்கோல் என்று பெயர். இரு கர்த்தாரி யோகங்கள் உண்டு. அவையாவன:
1. சுப கர்த்தாரி யோகம்
2. பாப கர்த்தாரி யோகம்
சுப கர்த்தாரி யோகம்
--------------------------------
லக்ன சுப கிரகங்களுக்கிடையே (2, 12) லக்ன அசுபன் இருப்பின், அசுபன் இருக்கும் பாவாதிபத்தியம் தரும் துன்பங்கள், இருபுறம் இருக்கும் லக்ன சுப கிரகங்களால் கத்தரிக்கப்பட்டு, லக்ன அசுபரை நன்மை செய்ய தூண்டுகிறது.
உதாரணமாக,
கடக லக்னம், ஒன்பதாமிடத்தில் புதன் (லக்ன அசுபன்) அவனுக்கு 2, 12 ல், முறையே சூரியன், செவ்வாய் (லக்ன சுபர்கள்). இது நாராயண பக்தி பெருக்கும்.தந்தைக்கு சுபம் தரும்.
பாப கர்த்தாரி யோகம்
----------------------------------
லக்ன அசுப கிரகங்களுக்கிடையே (2, 12) லக்ன சுபன் இருப்பின், சுபன் இருக்கும் பாவாதிபத்தியம் இருபுறம் இருக்கும் லக்ன அசுப கிரகங்களால் கத்தரிக்கப்பட்டு, லக்ன சுபர் நன்மை செய்யவதை தடுக்கிறது.
உதாரணமாக, சிம்ம லக்னம் இரண்டில் சூரியன் (லக்னாதிபதி) சிம்மத்தில் சுக்கிரனும், துலாமில் சனியுமிருக்க, தன வரவு குறையும், திருமண வாழ்வு இனிக்காது. ஜாதகன் வலதுகண் பாதிப்படையும்.
ஜோதிட சூட்சுமம் 25
===================
ஜோதிடத்தில் நட்சத்திரத்தின் முக்கிய பங்கு என்ன? ஏன் நட்சத்திரங்கள் ஒரு அங்கமாக ஜோதிடத்தில் இருக்கிறது.
ரிஷிகளும் முனிவர்களும் நட்சத்திரத்தின் வல்லமையை உணர்ந்திருந்தனர். சூரியன் போல பல மடங்கு வெளிச்சமும், ஆற்றலும் கொண்டவை நட்சத்திரங்கள்.
எனவே தான், நட்சத்திரம் பற்றிய ஆய்வு செய்து அதை பற்றி விளக்கி உள்ளனர். ஒவ்வொரு நட்சத்திரத்தை ஒவ்வொரு கிரக பலத்துடனும் காரகத்துடனும் முடிவாக வெளிட்டனர். அதில் திரிகோண ஸ்தானத்தில் வரும் நட்சத்திர காரகம் இயற்கையால் ஒரே மாதிரி அமைப்பில் இருந்ததை கண்டு வியந்து, திரிகோணத்தின் மகிமை அறிந்தனர்.
வானில் ராசி மண்டலம் என்பது, பல நட்சத்திர கூட்டங்களை உள்ளடக்கியது என்கிறது விஞ்ஞானம். ஒரு கிரகம் ஒரு ராசியில் உள்ளே செல்லும் போது, நட்சத்திர கூட்டம் வழியேதான் செல்கிறது. மேலும் ஒரு பாவத்தின் ஆதிபத்திய பலனை, கிரகங்கள் நட்சத்திரம் மூலமே பெற்று தருகிறது. இதில் இருந்து நட்சத்திர சாரம் என்பதன் முக்கியத்துவம் அறியலாம்.
ஒவ்வொரு கிரகமும், சூரியனின் கட்டுப்பாட்டிலும். சூரிய ஒளியை பிரதிபலிகிறது என்பதை தாண்டி, சூரியனை போல பல மடங்கு ஒளி பெற்ற நட்சத்திரங்களில் உள்ளே செல்லும் போது, நட்சத்திர காரகதுவதையும் பூமிக்கு பிரதிபலிகிறது என்பதே முழு உண்மை. எனவே நட்சத்திர பலம் அறிய நட்சத்திர அதிபதிகளை முனிவர்கள் வகுத்து சென்றனர்.
சாரம் தரும் பலன்களின் விளக்கம்
-------------------------------------------------------
1. லக்ன நட்பு கிரகமும் லக்ன நட்பு சார நாதனும்
----------------------------------------------------------------------------
ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.
2. லக்ன நட்பு கிரகமும் லக்ன எதிரி சார நாதனும்
-------------------------------------------------------------------------------
ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன எதிரியாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு மறைவில் இருந்து பலம் பெற பலமான யோகம் தரும் ஏற்படும்.
3 லக்ன எதிரி கிரகமும் லக்ன நட்பு சார நாதனும்
----------------------------------------------------------------------------
ஒரு ராசியில் அமரும் லக்ன எதிரி கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.
4. லக்ன எதிரி கிரகமும் லக்ன எதிரி சார நாதனும்
------------------------------------------------------------------------------
ஒரு ராசியில் அமரும் லக்ன எதிரி கிரகம், லக்னத்திற்கு கேந்திர திரிகோண அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன எதிரியாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு மறைவில் இருந்து பலம் பெற பலமான யோகம் தரும் ஏற்படும்.
5. லக்ன நட்பு கிரகமும் லக்ன நட்பு சார நாதனும்

ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு மறைவிடத்தில் அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.
6. லக்ன நட்பு கிரகமும் லக்ன எதிரி சார நாதனும்
------------------------------------------------------------------------------
ஒரு ராசியில் அமரும் லக்ன நட்பு கிரகம், லக்னத்திற்கு மறைவிடத்தில் அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன எதிரியாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு மறைவில் இருந்து பலம் பெற பலமான யோகம் தரும் ஏற்படும்.
7 லக்ன எதிரி கிரகமும் லக்ன நட்பு சார நாதனும்
-----------------------------------------------------------------------------
ஒரு ராசியில் அமரும் லக்ன எதிரி கிரகம், லக்னத்திற்கு மறைவிடத்தில் அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன நண்பனாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு கேந்திர திரிகோணம் பெற நல்ல பலன்கள் ஏற்படும்.
8. லக்ன எதிரி கிரகமும் லக்ன எதிரி சார நாதனும்
------------------------------------------------------------------------------
ஒரு ராசியில் அமரும் லக்ன எதிரி கிரகம், லக்னத்திற்கு மறைவிடத்தில் அமர்ந்து, அது பெற்ற சார நாதன் லக்ன எதிரியாக இருந்து, அந்த சாரநாதன் கிரகம் அமர்ந்த வீட்டுக்கு மறைவில் இருந்து பலம் பெற பலமான யோகம் தரும் ஏற்படும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-