Posts

Showing posts from January, 2018

மண்சோறும் குழந்தைப் பேறும் :-

மண்சோறும் குழந்தைப் பேறும் (இளம் பெண் களின் கருப்பைக் கோளாறுகள் ) இப்போதெல்லாம் குழந்தைவரம் வேண்டி பெண்கள் கடுந்தவம் செய்யவேண்டி இருக்கிறது . இவை எல்லாம் முறையல்லாத உணவு பழக்கத்தினால் அன்றி வேறல்ல. முறையில்லாத நடவடிக்கையும் கூட .பெண்களுக்கு உண்டாகும் பெரும்பான்மை கருப்பை சார்ந்த குற்றங்கள் எளிதில் தீர்க்க கூடியன . ஆனால் ஆண்களின் சிக்கல் சற்று கடுமையாக இருக்கிறது . ஒருவீட்டில் குழந்தைப்பேறு இல்லை என்றால் அதற்க்கு மூகாமையான காரணம் பெண்ஆகிவிடுகிறாள். இந்த முறையற்ற குமுகம் ஆணாதிக்க குமுகம் பெண்ணை பிள்ளை பேறும் பொறியாக (இயந்திரமாக )பார்க்கிறது . குழந்தை பேரு இல்லை என்றால் இன்னொரு திருமணம் ஆணுக்கு ஆனால் ஆண் குழந்தை பெற தகுதி இல்லாதவன் என்ற நிலையில் பெண்கள் வேறு திருமணத்தை நாடுவதில்லை. கருப்பை சார்ந்த குறைபாடுகள் . வெப்ப நாடுகளில் பெண்கள் பாலியல் சார்ந்த பல்வேறு நோய்களுடனே காலத்தை கடத்த வேண்டியுள்ளது . முறையான உணவுத்திட்டம் பற்றிய கோரிக்கைகளை முறையில்லாத மருத்துவ முறை களிடம் வைக்கபடுகிறது . பாவம் மக்கள் ஆங்கிலேய அடிமை ஆட்சிமுறை நம்மை மெக்கலன் சொன்னமாதிரியே அவனுக்கு அடிமையாகவே ஆக்கி விட்டது . ...

தங்கள் இடத்தை தன ஆகர்ஷணம் மிக்கதாக மாற்ற வேண்டுமா ??*

* தங்கள் இடத்தை தன ஆகர்ஷணம் மிக்கதாக மாற்ற வேண்டுமா ??* ஒரு கண்ணாடி பாட்டிலில்  சிறிது முனை உடையாத பச்சரிசியை இடவும் பின் ஒரு ருபாய் நாணயம் ஒன்றை இடவும் மேலும் சிறிது அரிசியை இட்டு இரண்டு ருபாய் நாணயம் ஒன்றை இடவும் பின் சிறிது அரிசி, அதன் மேல் ஒரு ஐந்து ருபாய் நாணயம், மேலும் சிறிது அரிசி அதன் மேல் 10 ருபாய் நாணயம் பின் மேலும் சிறிது அரிசி பாட்டில்  நிறையும் வரை இட்டு மூடி, பின் மூடியில் சிறிதாக ஆறு துளையிடவும்.  இதை  தங்கள் வீட்டு ஷோ கேஸ் அல்லது பூஜை அறை, அலுவலகம் ஆயின், பணப்பெட்டி அருகே வைத்து விடவும்.  எங்கே வைப்பினும் தினசரி தங்கள் கண் பார்வை படும் இடமாக இருக்க வேண்டும்.  பிரபஞ்ச சக்தி மூலம்  தன ஆகர்ஷணம் செய்யும் சக்தி இதற்கு உண்டு.  மாதம் ஒரு முறை அரிசியை பறவைகளுக்கு இட்டு பின் அதே நாணயங்களை வைத்து மாற்றவும்.  மிக விரைவாக பலன் தரக்கூடிய சூட்சும பரிகாரம் இது.

சில உபயோகமான மருத்துவ டிப்ஸ்,

சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் , 1. தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும் 2. சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும் 3. வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும் 4. பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும் 5. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது. 6. மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் சாப...

கிரியா யோக சாதகரின் நித்திய சுத்தி முறைகள் :-

கிரியா யோக சாதகரின் நித்திய சுத்தி முறைகள்  சாதாரண மனிதனாக வாழ்ந்தாலும் சரி, யோகியாக வாழ்ந்தாலும் சரி உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.  யோகத்திற்கும், போகத்திற்கும் உடல் பிரதானமாகும். எனவே உடலை மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமானது என்பதை நினைவில் கொள். மனதின் கழிவுகளை யோக சாதனையின் மூலம் நீக்கும் முயற்சியில் ஈடுபடும் யோகிகளுக்கு அந்த சாதனைக்கு ஒத்துழைக்கும்படியான உடலைப் பெறுவதும் அவசியமாகிறது. எனவே உடலின் கழிவுகளை அன்றாடம் நீக்குவதன் மூலமாகத்தான் யோக சாதனையினை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட முடியும். அவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கி தூய்மையான உடலுடன் யோக சாதனையினை செய்யும் பொருட்டு சில செய்முறைப் பயிற்சிகளை நான் உனக்குக் கூறுகிறேன். இவ்வாறு தினமும் உடலின் கழிவுகளை நீக்கும் முறைக்கு நித்திய சுத்தி என்று பெயர்.  இதை 5 விதமாகப் பிரிக்கலாம். அவை 1. தந்த சுத்தி 2. கப சுத்தி 3. நேத்திர சுத்தி 4. குடல் சுத்தி       5. உடல் சுத்தி என்பனவாகும். உடலின் கழிவுகள் வெளியேற்றப் பட்டுக் கொண்டிருந்த...

இரத்த அழுத்தம் பாட்டி வைத்தியம் :-

இரத்த அழுத்தம் பாட்டி வைத்தியம் அரை கிலோ அசோக மரப்பட்டை, சீரகம் 50 கிராம் எடுத்து இரண்டையும் பொடி செய்து கொள்ளவும். தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமாகும்.  அமுக்காராவை பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சரியாகும்.  ஆடாதொடா இலையை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட ரத்தக் கொதிப்பு குணமாகும்.  ஆரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.  இஞ்சிச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து காய வைத்துக் கொள்ளவும். இதில் 2 கிராம் அளவுக்கு எடுத்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம்.   இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து இரண்டு வேளையும் குடித்தால் ரத்தக் கொதிப்பு குணமாகும்.  எலுமிச்சம் பழச்சாறு, பேரீச்சம்பழம், சீரகம் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் தினமும் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு சரியாகிவிடும். கடுக்காய், சுக்கு, தாமரைப்பூ, ஏலக்காய் தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து கொள்ளவும். இதில் தினமும் இரண்டு கிராம் அள...

வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு?

" கார் " போன்ற வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு? இரண்டாமிடம் ,மற்றும் குருபகவான் நல்ல முறையில் அமையவேண்டும். இரண்டாம் இடத்ததிபதி, மற்றும் குரு ஆட்சி, உச்சமாக கேந்திர ,கோணங்களில் அமைய வேண்டும் வாகன காரகன் சுக்கிரன். நாலு கால் பொருளுக்கு சுக்கிரன் காரகன் வாகன ஸ்தானம் நாலாமிடம். சரி. நான்காமிடத்து அதிபதி, சுக்கிரன் இருவரும் ஆட்சி ,உச்சமாக கேந்திர திரிகோணங்களில் அமைய  நான்குக்கு நான்காம் அதிபதியும்(அதாவது ஏழாமாதிபதி)மேலே குறிப்பிட்ட படி நல்லமுறையில்அமைய  அந்தகன் எனப்படும் சனி 3,  6, 11 அமையப்பெற்ற ஜாதகருக்கு கார் போன்ற வசதியான வாகனம் அமையும், கிரக திக் பலம் --------------------- 1-உதயம்(காலை) - நிலம் - புதன், குரு 4-பாதாளம்(நடு இரவு) - நீர்- சுக்கிரன்,சந்திரன் 7-அஸ்தமனம் (மாலை) - காற்று - சனி 10-உச்சி(நண்பகல்)- நெருப்பு- சூரியன், செவ்வாய் காலையில் பூமி ஸ்பரிசம்  மாலையில் காற்று வாங்குதல் நண்பகலில் வெயில் காய்தல் நடு இரவில் குளிர் காய்தல் இவைகள் மூலம் அந்தந்த கிரக சக்தியை நாம் தினமும் பெறுகிறோம்.

விந்தணு உற்பத்தியைப் பாதிக்கும் காரணிகள்..! 

விந்தணு உற்பத்தியைப் பாதிக்கும் காரணிகள்..!  Cute Health சுடுநீர் குளியல்: பெரும்பாலான ஆண்கள் உடல் வலி அதிகம் உள்ளது என்று சூடான நீரில் குளிப்பார்கள். அவ்வாறு அதிகப்படியான வெப்பம் உள்ள நீரில் குளித்தால், விந்தணுவின் தரம் குறைவதோடு, உற்பத்தியும் தடைபடும். எனவே குளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் குளிப்பதே நல்லது. உள்ளாடை: அணியும் உள்ளாடை மிகவும் இறுக்கமானதாக இருந்தாலும், ஆண் விதையானது வெப்பமாகி, விந்தணுவின் உற்பத்தியை குறைக்கும். எனவே எப்போது தளர்வாக இருக்கும் உள்ளாடையையே அணிய வேண்டும். மொபைல்: பொதுவாக ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்கள், விந்தணுவின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படுத்தி, அதன் உற்பத்தியின் அளவைக் குறைத்துவிடும். மேலும் ஆய்வு ஒன்றிலும், மொபைல் போனை அதிகம் பயன்படுத்தினாலும்,விந்தணுவின் உற்பத்தி குறையும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மன அழுத்தம்: மன அழுத்தம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதில் ஒன்று தான் விந்தணு உற்பத்தி குறைவு. சில சமயங்களில் இவை மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும். எனவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைக்க உடற்...

ஒருவருடன் நீங்கள் தாம்பத்தையம்வைத்தால் :-

ஒருவருடன் நீங்கள் தாம்பத்தையம்வைத்தால் அவருக்குநடக்கும் திசைஉங்களுக்குபாதிப்புதரும் மனைவிக்குசனிதிசை நடந்தால் ஜாதகருக்கு நரம்புசம்மந்தமானதொந்தரவுஏற்படுகிறது சந்திரன்திசைநடந்தால் இரத்தம் சம்மந்தமானநோய் ஏற்படும் குருதிசைநடந்தால் சவ்வு கால்தொந்தரவுகொழுப்புதொந்தரவு தரும் புதன் திசைநடந்தால் நரம்பு வயிறு தோல் சம்மந்தமானநோய் தரும் சுக்கிரன் திசை நடந்தால் சுரபி அடிவயிறுசம்மந்ததொந்தரவு சூரியன் திசா நடந்தால் உஷ்ணம்சம்மந்தமானதொந்தரவு தலைசம்மந்ததொந்தரவு ஏற்படும்  செவ்வாய் திசைநடந்தால் ரத்தம்அழுத்தம்டென்சன் போன்றவை ராகுதிசை நடந்தால் தோல்நோய்கள்உடல்நோய்கள்அதிகம்மரணபயம்ஏற்படுகிறது கேது திசைநடந்தால் கட்டிதொந்தரவு விரக்தி மனஅழுத்ததொந்தரவு ஆன்மிகநாட்டம் பாட்னருக்கு ஏற்படும் ஆய்வு செய்க

கோதூளி லக்னம் :-

கோதூளி லக்னம் :- உத்திராயண கோதூளி லக்ன காலத்தில் கோபூஜை மற்றும் மகாலக்ஷமி பூஜை செய்து வர மகத்தான பலன்கள் கிட்டும் என்று நம்பப்படுகிறது. தினமும் காலை சூரிய உதயத்திற்க்கு முக்கால் மணி நேரம் முன்பும் அதாவது சூரிய உதயத்திற்க்கு இரண்டு நாழிகை முன் மற்றும் மாலை சூரிய அஸ்தமன நேரம் முதல் 2 நாழிகைக்குள்(6.00pm - 6.45pm) கோதூளி நேரம் என்று பெயர். "கோ" என்றால் பசு, "தூளி" என்றால் பசுவின் இருப்பிடமான கொட்டில் அல்லது கொன்டகை ஆகும். சூரியன் உதிக்கும் முன்பே பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். கூட்டமாகச் செல்லும் பசுக்களின் குளம்படி பட்டு புழுதி பறக்கும். இத்தூசி பட்ட காற்று, பாவம் போக்கும் தன்மை கொண்டதாகும். இது உதய கால கோதூளி லக்னம் எனப்படும். உதய கால கோதூளி லக்னம் குருவின் ஆதிக்கம் நிறைந்தது என "காலப்ரகாசிகா" எனும் ஜோதிட நூல் சிறப்பாக கூறுகிறது. இவ்வேளையில் செய்யும் பூஜை, மந்திர ஜெபம்,புதுமனை புகுதல், மந்திர உபதேசம், ஹோமம், யோகப்பயிற்சி, பாடம் பயில்தல் போன்ற சுபவிஷயங்கள் பன்மடங்கு பலன் தரும். மனம் மிகத் தூய்மையுடன் இருப்பதால், இந்தநேரத்தை, "பிரம்ம முகூர்த்தம்...

நீரிழிவு:-

* நீரிழிவு நோயாளிகளின் கால் பாதிப்பிற்கு சிகிச்சை முறைகள்*      முதலில் நீரிழிவு நோயாளி தனது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் (நார்மல் லெவல்) கொண்டுவர வேண்டும். பின்னர் பாதிக்கப்பட்ட கால்களுக்கு உபசிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 1. காலில் மதமதப்பு, எரிச்சல் அதிகமிருந்தால் மஞ்சள் 10 கிராம், படிகாரம் 10 கிராம், கடுக்காய் 2 எண்ணிக்கை மூன்றையும் ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதனைக் கொண்டு கால்களையும், பாதங்களையும் தினதோறும் கழுவிவர, பாத எரிச்சல், மதமதப்பு குறையும். கால்களில் ஏதேனும் புண் இருந்தாலும் ஆறிவிடும். 2. கடைகளில் கிடைக்கும் குங்கிலிய வெண்ணையை வாங்கி, 5 கிராம் அளவில் காலை, இரவு இருவேளை ஏலக்காய்த் தூளுடன் சாப்பிட்டு வர மேற்கண்ட குறைபாடுகள் தீரும். 3. இதேபோல் குங்கிலிய பற்பம், படிகார பற்பம் போன்றவற்றை மருத்துவரின் அலோசனையின் பேரில் சாப்பிடலாம்.

IMPORTANT message:-

சென்னையிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவமனைக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்றபோது, நான் பார்த்த காட்சி அதிரவைத்தது. அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள். பள்ளி செல்லும் வயதுடையவர்கள். பின்னர், மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தேன். நிலைகுலைய வைத்த சூழல் நவீன வாழ்க்கைச் சூழல், உணவுக் கலாச்சாரம் என்று சிறுநீரகச் செயலிழப்புக்கான காரணங்களைப் பட்டியலிட்டவர், குழந்தைகள் பாதிக்கப் படுவதற்கான காரணங்களில் ஒன்றாக நம்முடைய பள்ளிகளில் உள்ள கழிப்பறைச் சூழலைக் குறிப்பிட்டார். “குழந்தைகள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் உண்ணும் உணவும் பானங்களும் கழிவாக வெளியேறுவதில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்?” என்று கேட்டபோது கூட இந்தப் பிரச்சினையின் முழு உக்கிரத்தை நான் உணரவில்லை. பின் இதுபற்றி சிறு பிள்ளைகள் பலரிடமும் பேசினேன். பள்ளிச் சூழலை அவர்கள் சொன்ன விதம், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரான என்னையே நிலை குலையச் செய்தது. பல பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் சிறுந...

அழகு குறிப்புக்கள்:-

அழகு குறிப்புக்கள்:- தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும். நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். தேநீரில் வடிகட்டிய ...

நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்:

நார்த்தங்காயின் மருத்துவ குணங்கள்: உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம். நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது. நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர்,மலர்,கனிகள் பயன்கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல்,லிமோன...

மூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை:-

மூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை:- எல்லா வகை மாம்பழத்திலும் ஒரு கொட்டை இருக்கும். இந்த மாங் கொட்டையின் உள்ளே உள்ள பருப்பு சிறந்த ஒரு மருந்துப்பொருள். மாம்பழம் தின்றபின் கிடைக்கக்கூடிய மிகுதிக் கொட்டைகளை எல்லாம் வெயிலில் போட்டு நன்றாகக் காயவிட வேண்டும்.எல்லாக் கொட்டைகளும் நன்றாகக் காய்ந்தபின் அவைகளை உடைத்து உள்ளே இருக்கும் பருப்புகளைக் கவனித்து சொத்தை, பூச்சி இல்லாதவைகளாக எடுத்து, அந்தப் பருப்பின் மேலுள்ள நீல நிறமான தோலையும் நீக்கிவிட்டு, சுத்தமா மாம்பருப்பை மட்டும் எடுத்து அதைப் பாக்கு அளவு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொண்டு, ஒரு இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு நெய்விட்டு, நெய் காய்ந்தபின் அதில் அந்தப் பருப்பைப் போட்டு வறுக்க வேண்டும். பருப்பு பொன்னிறமாகச் சிவந்து வரும் வரை வறுக்க வேண்டும். பிறகு அதை அப்படியே எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவிடவேண்டும். நன்றாக ஆறியபின் அம்மியிலோ மிக்ஸியிலோ போட்டு, அதைப் பட்டுப் போல தூள் செய்து எடுத்து, அதை ஒரு வாயகன்ற சுத்தமான பாட்டிலில் போட்டு நன்றாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும். இநத்ப் பாட்டிலின் மேல் ‘மாங்கொட்டை சூரணம்’ என்று எழுதி ...

மூட்டு வலி குறைய- இயற்கை மருத்துவம்:-

மூட்டு வலி குறைய- இயற்கை மருத்துவம்:- சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை இரண்டு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து அரைத்து காலையில் சாப்பிட்டால் மூட்டு வலி, மூட்டுத் தேய்வு குறையும். முடக்கற்றான் இலைகளை எடுத்து நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும். குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும். கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும். முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும். வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை முதலியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தினமும் 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும். வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டுவலியுள்ள இடத்தில் தடவ வலி குறையும். நொச்சி இலைச் சாறை கட்டியாக எடு...

ஸ்ரீமதே ராமானுஜாய நம||

||ஸ்ரீமதே ராமானுஜாய நம|| # ஸ்ரீ_ராமானுஜர்_ஸ்ரீ_வைஷ்ணவர்களுக்குப்_பணித்த_கட்டளைகள் : 1-ஆச்சார்யர் திருவடி பணிந்து போவது போல் அனைத்து ஸ்ரீ வைஷ்ணவர்களிடமும் நடக்க வேண்டும். 2-ஸம்ப்ரதாய குருக்கள் வார்த்தையில் நம்பிக்கை வேணும். 3-புலன்கள் இழுத்த வழி செல்லாமல் இருக்க வேண்டும். 4-மதச்சார்பற்ற ஞானம், அறிவுடன், போதும் என்று இராமல் இருக்க வேண்டும். 5 -பகவத் சரித்ரங்கள் செஷிடிதங்கள் வாக்யங்களில் உகந்த ஈடுபாடுடன் இருக்க வேண்டும். 6-ஆச்சார்யர் உயர்ந்த பிரம ஞானம் அருளிய பின்பு -மீண்டும் புலன்கள் கவர்ச்சியில் ஈடு படாமல் இருக்க வேண்டும். 7-அனைத்து இந்திரிய வியாபாரங்களிலும் ஒதுங்கி இருக்க வேண்டும். 8-சந்தனம்,மலர்,நறுமணம் இவற்றில் அதிக ஈடுபாடு கொண்டு இருக்க கூடாது. 9-கைங்கர்யபரர் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது,எம்பெருமானின் திருநாமங்களை உபயோக்கிக்கும் பொழுது அடையும் இன்பம் அடைய வேண்டும். 10-அடியார் அடியானே, அவனை அவன் அடியானை விட சீக்கிரம் அடைகிறான், என்பதில் உறுதி கொள்ள வேண்டும். 11-ஞானவான் அவன் கைங்கர்யாமோ அவன் அடியார் கைங்கர்யாமோ இன்றி அழிவான். 12-வைஷ்ணவர் வாழ்வுமுறை அவனை அடையும் உபாயம் என்று கருத...

ரசம் என்னும் திரவம்:-

ரசம் என்னும் திரவம் பற்றி ஒரு அலசல். > > ரசம் என்னும் > > சூப்பர் திரவம் பற்றி > > ஒரு அலசல் { சமையலறை > > } > > > > சித்த > > வைத்திய > > முறைப்படி நம் உணவில் > > தினசரி துணை உணவுப் > > பொருட்களாக வெள்ளைப் > > பூண்டு, பெருங்காயம், > > மிளகு, சீரகம், > > புதினாக்கீரை, கறி > > வேப்பிலை, > > கொத்துமல்லிக் கீரை, > > கடுகு, இஞ்சி முதலியன > > சேர வேண்டும். > > > > > > இந்த > > ஒன்பது > > பொருட்களும் > > ஆங்காங்கே நம் உணவில் > > சேருகிறது என்றாலும், > > ஒட்டு மொத்தமாகச் > > சேர்வது > > ரசத்தில்தான். > > > > புளிரசம், > > எலுமிச்சை > > ரசம், மிளகு ரசம், > > அன்னாசிப் பழரசம், > > கொத்துமல்லி ரசம் > > என்று பலவிதமான > > சுவைகளின் ரசத்தைத் > > தயாரித்தாலும் இந்தப் > > பொருட்கள் > > பெரும்பாலும் தவறாமல் > > இடம் > > பெற்றுவிடும். > > > > பல நோய்களைக...

பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா:-

* பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா* என்ற படைப்பு புகழ் பெற்றது. அதில் இடம் பெற்றுள்ள கேள்வி, பதில்களிருந்து சில... : *1. எது இதமானது ?* தர்மம். *2. நஞ்சு எது ?* பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது. *3. மதுவைப் போல மயக்கத்தை உண்டு பண்ணுவது எது ?* பற்றுதல். *4. கள்வர்கள் யார் ?* புலன்களை இழுத்துக் கொண்டு போகும் விஷயங்கள். *5. எதிரி யார் ?* சோம்பல். *6. எல்லோரும் பயப்படுவது எதற்கு ?* இறப்புக்கு. *7. குருடனை விட குருடன் யார் ?* ஆசைகள் அதிகம் உள்ளவன். *8. சூரன் யார் ?* கெட்ட வழியில் மனம் செல்லாமல், அதை அடக்குபவன். *9.மதிப்புக்கு மூலம் எது ?* எதையும் யாரிடமும் கேட்காமல் இருப்பது. *10. எது துக்கம் ?* மன நிறைவு இல்லாமல் இருப்பது. *11. உயர்ந்த வாழ்வென்று எதைச் சொல்லலாம் ?* குற்றங்கள் புரியாமல் வாழ்வதை. *12. தாமரையிலை மேல் தண்ணீரைப் போல நிலையில்லாதவை எவை ?* இளமை, செல்வம், ஆயுள்.... ஆகியவை. *13. சந்திரனுடைய கிரணங்களைப் போல் மற்றவர்களுக்கு இன்பம் தருபவர்கள் யார் ?* நல்லவர்கள். *14. எது சுகமானது ?* அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு பற்றின்றி வாழ்வது. *15. எது இன்பம் தரும் ?* நல்ல மனதுடையோர்களின் சிநேகிதம். *1...

சாபங்கள் பல்வகை:-

சாபங்கள் பல்வகை இந்த கேள்விக்கு  பதில் பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. எல்லோரும் நினைத்த நேரத்தில் கண்ட கண்ட காரணங்களுக்காக நியாயமே இல்லாமல் கொடுக்கும் சாபங்கள் எல்லாம் பலிக்காது, நியாயமான காரணங்களுக்காக மனம் நொந்து சபித்தால் மட்டுமே சாபங்கள் பலிக்கும். இப்படி மனிதனுக்கு வாழ்வில் வரும் சாபங்கள் மற்ற மனிதர்கள் கொடுக்கும் சாபம் மட்டுமல்ல, இவையன்றி பல வகைகளிலும் சாபங்கள் உண்டாகின்றன, அப்படிப்பட்ட சாபங்கள் பலவகைப்படும். அவை பெண் சாபம், பிரேத சாபம், பித்ருசாபம், சர்ப்பசாபம், கோசாபம், பூசாபம் (பூமி சாபம்), கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், முனி சாபம், பிரம்ம சாபம் மற்றும் குல தெய்வ சாபம். 1.பெண் சாபம் : ------------------------ பெண்களை ஏமாற்றுதல், சகோதரிகளை, தாயை ஆதரிக்காமல் கைவிடுவது, மனைவியை கைவிடுவது ஏமாற்றுவது மனம் நோகும்படி செய்வது இந்த காரணங்களால் பெண் சாபம் உண்டாகிறது.  இதன் விளைவாக வம்சம் நாசமாகும். 2.பிரேத சாபம் : ------------------------ இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாக பேசுவது, பிணத்தை தாண்டுவது, இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவரின் உ...

உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரம்:-

உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால் நட்டு , நீரூற்றி வளர்த்து வாருங்கள்.. அந்த மரம் வளர , வளர உங்கள் வாழ்வும் வளம் பெறும். உங்கள் பாவக் கதிர்களை கிரகித்து , உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும்.  அஸ்வினி 1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி) 2 ம் பாதம் - மகிழம் 3 ம் பாதம் - பாதாம் 4 ம் பாதம் - நண்டாஞ்சு பரணி 1 ம் பாதம் - அத்தி 2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு 3 ம் பாதம் - விளா 4 ம் பாதம் - நந்தியாவட்டை கார்த்திகை 1 ம் பாதம் - நெல்லி 2 ம் பாதம் - மணிபுங்கம் 3 ம் பாதம் - வெண் தேக்கு 4 ம் பாதம் - நிரிவேங்கை ரோஹிணி 1 ம் பாதம் - நாவல் 2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை 3 ம் பாதம் - மந்தாரை 4 ம் பாதம் - நாகலிங்கம் மிருகஷீரிஷம் 1 ம் பாதம் - கருங்காலி 2 ம் பாதம் - ஆச்சா 3 ம் பாதம் - வேம்பு 4 ம் பாதம் - நீர்க்கடம்பு திருவாதிரை 1 ம் பாதம் - செங்கருங்காலி 2 ம் பாதம் - வெள்ளை 3 ம் பாதம் - வெள்ளெருக்கு 4 ம் பாதம் - வெள்ளெருக்கு புனர்பூசம் 1 ம் பாதம் - மூங்கில் 2 ம் பாதம் - மலைவேம்பு 3 ம் பாதம் - அடப்பமரம் 4 ம் பாதம் - நெல்லி பூசம் 1 ம் பாதம் - அரசு 2 ம் பாதம் - ஆச்சா 3 ...