Posts

Showing posts from 2025

நுரையீரல் பலம் பெற:-

 நோயின்றி வாழ சித்தர்கள் சொன்ன எளிய வைத்தியம் ஒரு கைப்பிடி விழுதி இலையைப் பறித்து வாயிலிட்டு மென்று இதில் பாதியளவை விழுங்கி விட்டு    மீதமுள்ள பாதியளவு விழுதி இலையின் விழுதை வாயின் தாடைப் பகுதியான கடை வாயில் அடக்கி வைத்துக் கொண்டு சிறிது தூரம் ஓடி பாருங்கள்   எப்போது ஓடினாலும் ஏற்படும் களைப்பும் இளைப்பும் இப்பொழுது நமது உடலில் ஏற்படாது இது உறுதி   ஆச்சரியமாக இருக்கலாம்  ஆனால் இதுதான் உண்மை   இதற்குக் காரணம் யாதெனில்   பச்சையாக இருக்கின்ற விழுதி இலையை நன்றாக உமிழ்நீருடன் கலக்கும்படி மென்று அதன்பின் விழுங்கி வந்தால்    இதன் மூலமாக உடனடியாக நுரையீரல் அளவுக்கு அதிகமான பலத்தைப் பெற்று விடுகின்றது அவ்வளவு அதிசய ஆற்றல் விழுதி எனும் இந்த மூலிகைக்கு உண்டு   அதாவது வரையறுத்துச் சொல்ல முடியாத அளவிற்கு ஒரு அதீத வலிமையை நமது நுரையீரலுக்கு விழுதி இலையின் மூலம் கிடைத்து விடுகின்றது இதனால்தான் வேகமாக நடந்தாலே ஏற்படும் மேல் மூச்சு கீழ் மூச்சாக ஓடும் நமது சுவாசம் வேகமாக ஓடினாலும் வழக்கமாக நடக்கின்ற சீரான சுவாசமாகவே நடைபெறுகின்றது   இந்த மாற்றத்...

ஞாபக சக்திக்கு சூர்ணம்:-

ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும்.இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம். *செய்முறை* : 1 - வல்லாரை இலை - 70 -கிராம் 2 - துளசி இலை - 70 -கிராம் 3 - சுக்கு - 35 -கிராம் 4 - வசம்பு - 35 -கிராம் 5 - கரி மஞ்சள் -35 -கிராம் 6 - அதிமதுரம் -35 -கிராம் 7 - கோஷ்டம் - 35 -கிராம் 8 - ஓமம் - 35 -கிராம் 9 - திப்பிலி - 35 -கிராம் 10 - மர மஞ்சள் - 35 -கிராம் 11 - சீரகம் - 35 -கிராம் 12 - இந்துப்பு - 35 -கிராம் இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும். *உண்ணும் முறை* : காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும். ஒன்றிரண்டு மாதங்களில் மறதி, மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக...

சிரசாசனம்:-

Image
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் மூச்சுத்திணறல் குறையும்*. *நுரையீரல்களில் உள்ள சளி விரைவில் வெளியேறும் சுவாசக் கோளாறுக்கு பயனுள்ளது*. *பெயர் விளக்கம்* : அர்த்த என்றால் பாதி என்று பொருள். சீர்ஷா என்றால் தலை என்று பொருள். இந்த ஆசனம் சிரசாசனத்தின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த சிரசாசனம் என்று அழைக்கப்படுகிறது. *செய்முறை*: வஜ்ராசனத்தில் உட்காரவும், கைவிரல்களை கோர்த்து குனிந்து முழங்கையிலிருந்து கைவிரல்கள் வரை தரை விரிப்பின் மேல் படிய வைக்க வேண்டும். தலையின் மேல் பகுதியை தரையில் வைக்கவும். உள்ளங்கைகள் தலையின் பின்புறத்தை தாங்கிக் கொள்ளும்படி இருக்கட்டும். முழங்கைகளை தரையிலிருந்து உயர்த்தி கால் விரல்களை முகத்தை நோக்கி சற்று நகர்த்தி வைக்கவும். முழங்கால்கள் மடங்காமல் இருக்கட்டும்.   இந்த ஆசன நிலையில் 1 முதல் 2 நிமிடம் வரை சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு கால்களை மடக்கி முழங்கால்களை தரைவிரிப்பின் மேலே வைத்து உடனே தலையை மேலே தூக்காமல் சில வினாடிகள் இருந்து பிறகு வஜ்ராசன நிலைக்கு வரவும். அதிலிருந்து கால்களை நீட்டி வைத்து ஓய்வு நிலைக்கு செல்லவும். (சுவாசனம்). இந்த...

தீராத இருமல்குணமாக படிகாரபற்பம் :-

                             ஒருசிறுமண்குடுவையில் 35 கிராம்பசுவெண்ணையைபோட்டு அதன்நடுவில் 35 கிராம்படிகாரத்தைவைத்து வாய்க்கு ஓடுமூடி சீலைமண்செய்து 15 வரட்டிகளில்புடமிட நல்லபற்பமாகும்                   இதைஇருமலுக்குதருவதானால் தினம்காலையில் குன்றியளவு முசுமுசுக்கைஇலையில்வைத்துதரவேண்டும்மறுநாள்இரண்டுஇலை இப்படி தினம்ஒன்றுக்கு ஒருஇலைஅதிகப்படுத்திஏழுநாள்தந்து பிறகுஒவ்வொறுஇலையாக குறைத்துவரவும் இப்படி 14 நாள்தர நாட்பட்டஇருமல்அனைத்தும்குணமாகும்  இதைதினம்இருவேளை குன்றியளவு தேன்நெய்வெண்ணை அனுபானங்களில்தர.   உட்சூடு  உள்உறுப்புரணம் பேதி  வெட்டை நீர்எரிச்சல் குணமாகும்  ,

தாதுபுஸ்டிலேகியம் :

                                               நன்னாரிவேர் 250 gram                   தண்ணீர்விட்டான்கிழங்கு  250gram        வில்வவேர்பட்டைநீக்கியது  750gram  இவைகளை இடித்துசூரணம்செய்து 8 லிட்டர்நீரில்போட்டு  2 லிட்டராகசுண்டவைத்துஅதில் சோற்றுகற்றாழைசாறு 750 மில்லி   , பூசணிகாய்சாறு  750 மில்லி   ,                       காபிகொட்டைகசாயம் 75 மில்லி   ,    பசும்பால் 1 லிட்டர் , பன்னீர்  350 மில்லி இவைகளைகலந்து  கற்கண்டு750 கிராம்எடுத்துபாகுசெய்து அதில்  சுக்கு  மிளகு  சிற்றரத்தை கண்டந்திப்பிலி  ஏலம் கிராம்பு  ஓமம் ரோஜாமொட்டு வகைக்கு 70 கிராம்    திப்பிலி அமுக்கரா சீரகம் மல்லி  நீர்முள்ளி பூனைக்காலி தாமரைவிதை முருங்கைவிதை கசகசா ...

கருடாழ்வார் :-

கருடாழ்வார் வழிபாட்டின் மூலம் மனப்பயம் அகலும். மட்டுமன்றி திருஷ்டி தோஷம் விலகவும் பிள்ளைகள் வெற்றிவாகை சூடவும் அருள் செய்வார் கருடபகவான். வைஷ்ணவ ஆசார்யர் அனந்த பத்மநாப சுவாமி கருட வழிபாட்டின் மகிமையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அவரிடம் கருட வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்துக் கேட்டோம். “ ஸ்ரீராமர் காட்டுக்குச் செல்லும் முன் தன் தாயான கௌசல்யாதேவியை வணங்கினாராம். அப்போது கௌசல்யா தேவி, ‘ராமா, கருடன் அமிர்தக் கலசத்தைக் கொண்டுவர தேவலோகம் சென்றபோது, விநதை என்ன சொல்லி ஆசீர்வத்தாளோ... அந்த ஆசீர்வாதத்தையே உனக்கு அளிக்கிறேன்’ என்றாளாம். விநதையின் ஆசீர்வாதத்தால்தான் கருடன் தேவருலகுக்குள் நுழைந்து சகல எதிர்ப்புகளையும் ஜெயித்து அமிர்தக் கலசத்தைக் கொண்டுவந்து அன்னையின் அடிமைத்தளையை அறுத்தார். அதற்குப் பலமாக அமைந்தது விநதையின் ஆசீர்வாதம். அதுவே கருடனுக்கு தீர்க்க ஆயுளையும் வெற்றியையும் அருளியது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தையே நான் உனக்குச் செய்கிறேன் என கௌசல்யை ராமபிரானிடம் சொன்னாள். நாமும் நம் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதம் செய்யும்போது கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி ஆசீர்வாதம் செய்ய வேண்டும். அப்படி...

பண வரவை அதிகரிக்கும் 12 வாஸ்து வழிமுறைகள்:-

வீண் விரயங்கள் இல்லாத நிலை உண்டாகவும், தடையில்லாத பொருள் வரவு-செல்வச் செழிப்பு ஏற்படவும் சில வழிகாட்டல்களைச் சொல்கின்றன வாஸ்து சாஸ்திர நூல்கள். `பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பார்கள். பணமே வாழ்க்கையாகி விடுவதில்லை. ஆனால், பணம் இல்லா விட்டால் வாழ்க்கை நடத்துவது சிரமம் என்பதே யதார்த்தம். எல்லோரும் பணத்தைத் தேடியே ஓடிக் கொண்டிருக்கிறோம்; அல்லும்பகலும் அயராது பாடுபடுகின்றோம். ஆனாலும், எல்லோர் கைகளிலும் பணம் அத்தனை எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. ஒருவேளை பணவரவு இருந்தாலும், வீண் செலவுகளும் தொடர்ந்து வந்து, பற்றாக் குறையைப் பரிசளித்து விடுகிறது! வீண் விரயங்கள் இல்லாத நிலை உண்டாகவும், தடையில்லாத பொருள் வரவு-செல்வச் செழிப்பு ஏற்படவும் சில வழிகாட்டல் களைச் சொல்கின்றன வாஸ்து சாஸ்திர நூல்கள். செல்வத்துக்கு அதிபதியான திருமகள் சகல செல்வங்களையும் எல்லோருக்கா கவும்தான் கொட்டி வைத்திருக்கிறாள். ஆனால், அவளுடைய அருளால் அதை நாம் எப்படிப் பெறுவது என்பதில்தான் நமக்குக் குழப்பம். இங்கேதான் நமக்கு வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது. அதுகுறித்து அறிவோம். 1. வீட்டின் தலைவாயிலைச் சுத்தமாக வைத்திருப்பது அவசி...

மந்திரம் சித்தி பெறுவதில் சில எளிய முறைகள் :

    மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக்கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்திபெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர். 1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது. சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது. உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும்.  வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக...

சுப தாரை நட்சத்திர அட்டவனை:-

Image
சித்திரை நட்சத்திரம் :(1,2,4,6,8,9) ________________ ஜென்ம தாரை: 1 சித்திரை -1 அவிட்டம்-10 மிருகசீரிஷம் -19 _________________ சம்பத்து தாரை :2 ஸ்வாதி-2 சதயம்-11 திருவாதிரை -20 _______________ சேமத் தாரை:4 அனுஷம்-4 உத்திரட்டாதி-13.                பூசம்-22 _______________ சாதகத் தாரை:6 மூலம்-6 அஸ்வினி-15 மகம்-24 _______________ மித்ர தாரை :8 உத்திராடம்-8 கிருத்திகை-17 உத்திரம் -26 ________________ பரம மித்ர தாரை:9.                  திருவோணம்-9 ரோகிணி-18.    ஹஸ்தம் -27 _______________ விபத்து தாரை :3,12,21 அசம்பாவிதம் உண்டாகும் , விசாகம்-3 பூரட்டாதி-12 புனர்பூசம் -21 ______________________ பிரத்யாக தாரை :5,14,23 தடங்கள், சிக்கல் தரும் , கேட்டை-5 ரேவதி -14 ஆயில்யம் -23 _______________________ வதைத் தாரை :7,16,25 துன்பம் தரும் , பூராடம்-7 பரணி-16 பூரம் -25 ______________________________ #ஜோதிட_பாலபாடம்_வகுப்பு_01 #தாராபலன் எனும் #நட்சத்திரபலன்  விளக்கம்; 1)ஜென்மதாரை கூட்டத்தில், 19...

கர்ம நட்சத்திரங்கள் :-

1.மேஷத்தில் அசுபதி  தாய்வழி கர்மா. 2. ரிஷபத்தில் உள்ள மிருகசீரிஷம் 1,2 மட்டும். தகப்பன் வழி கர்மா. தெய்வ சாபம். பொதுமக்கள் சாபம். நம்பியவர்களை ஏமாற்றிய சாபம். உடல் போகத்தினால் உண்டான சாபம். 3. மிதுனம் திருவாதிரை விசம் நெருப்பு போன்ற கொடிய இறப்புகள். தற்கொலை. 4.கடகம்  ஆயில்யம் பறவைகள், மரங்கள் மற்றும் படுத்த படுக்கையாக இறத்தல். 5. சிம்மம் பூரம் அரசுவழி பொதுமக்கள் சொத்து உடமைகளை அபகரிப்பு செய்த தோஷம். பொதுமக்கள் சாபம். குடும்பத்தார் சாபம். 6.கன்னி அஸ்தம் பெண்கள் வாழ்க்கை இழப்பு பெண்கள் ஆற்றுனாகொடுநோய் பட்டு இறத்தல். குருவின் சாபம். நண்பர்கள் சாபம். வாழ்வுக்கு வழிகாட்டியவர்களை ஏமாற்றிய சாபம். 7. துலாம் சித்திரை 3,4 தொழிலில் கலப்படம் செய்தல். பொதுமக்களை ஏமாற்றிய சாபம். பேராசையினால் உண்டான சாபம். 8.விருச்சிகம்  அனுஷம் ஆயுள் சாபம் பிரேத சாபம் 9. தனுசின் மூலம் உருவாக்கத்தில் உள்ள சாபம் 10.பூராடம்  நம்பிக்கை துரோகம். 11.உத்திராடம்1 பாதம்  பஞ்சமகா புருஷ தோஷம். 12. மகரம் அவிட்டம் 1,2 உடன் பிறந்தவர்களை ஏமாற்றிய சாபம். மண் மூலம் செய்த துரோகம். அடுத்தவர்களை தண்டித்த தோஷம். 1...

12 லக்னங்களுக்கும் முதல் தசை ப்ரதானமாக இந்த தசாக்கள் வர கூடாது:-

🐐மேஷம் = புதன் தசா 🐃ரிஷபம் = குரு தசா 👬🏻மிதுனம் = செவ்வாய் தசா 🦀கடகம் = சனி தசா 🦁சிம்மம் = சனி தசா 👧🏻கன்னி = செவ்வாய் தசா ♎துலாம் = குரு தசா 🦂வ்ருச்சிகம் = புதன் தசா 🏹தனுஷ் = சுக்ரன் தசா & சந்த்ரன் தசா 🐊மகரம் = சூர்யன் தசா ⚱கும்பம் = சந்த்ரன் தசா 🐟மீனம் = சுக்ரன் தசா & சூர்யன் தசா 🔸️ஒருவேளை இந்த ப்ரதான அவயோக தசா வந்துவிட்டால் 40 வயசுக்குள் முடிந்துவிடுவது உத்தமம். ஏனென்றால் 40 வயசு வரை தேகமும் மனமும் அவயோக தசா தரும் கஷ்டங்களை தாங்க கூடிய நிலையில் இருக்கும்.  🔸️இந்த அவயோக தசா க்ரகங்கள் குறிப்பிட்ட சில அமைப்பில் இருந்தால் மட்டுமே தசாவில் நல்ல பலன்கள் இருக்கும். அவயோக தசா நல்ல பலன்கள் தந்தாலும் அதில் மன நிம்மதி இருக்காதது ____________________ திதிகளின் தெய்வங்கள் ••••••••••••••••••••••••• ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். இங்கே திதிகளும், அவற்றுக்கான தெய்வங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அறிந்து உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். சுக்லபட்சம் (வளர்பிறை) ••••...

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்:-

Image
*1.பிரதமை் திதி:* அதிபதி: அக்னி பகவான் பிரதமை திதியில் செய்யத்தக்க காரியம்: உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்* *2. துதியை திதி:* அதிபதி: துவஷ்டா தேவதை துதியை திதியில் செய்யத் தக்க காரியம்: விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது! *3. திருதியை திதி:* அதிபதி: பார்வதி திருதியை திதியில் செய்யத்தக்க காரியம்: வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹ பிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்! *4. சதுர்த்தி திதி:* அதிபதி: கஜநாதன் [விநாயகர்] சதுர்த்தி திதியில் செய்யத்தக்க காரியம்: வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்கு விதிவிலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்கு விதி விலக்கு ] *5. பஞ்சமி திதி:* அதிபதி: சர்ப்பம் பஞ்சமி திதியில் செய்யத் தக்க காரியம்: இத்திதியில் செய்யும் கார்யம் ந...