எந்த நோய் தீர எந்தெந்தக் கடவுளை வணங்க வேண்டும்
எந்த நோய் தீர எந்தெந்தக் கடவுளை வணங்க வேண்டும் – ஒரு சிறு குறிப்பு
1. கண்பார்வைக் கோளாறுகள்:-
சிவபிரான், சுப்பிரமணியர், விநாயகர் போன்ற தெய்வங்களை தொழ வேண்டும்.
2. முடிநரைத்தல், உதிர்தல்:-
மகாலஷ்மியையும், வள்ளியையும் தொழ வேண்டும்.
3. காது மூக்கு, தொண்டை வியாதிகள் தீர:-
முருகப் பெருமானை தொழ வேண்டும்.
4. ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள், சைனஸ் நிமோனியா தீர:-
மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.
5. இருதயம், மாரடைப்பு நீங்க:-
சக்தி, கருமாரி, துர்க்கை அம்மன்களை வணங்க வேண்டும்.
1. அஜீர்ணம், குடல்வாசல், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சல் காமாலை, காலரா, பேதி போன்ற நோய்களுக்கு:-
தட்சிணாமூர்த்தி, முருகன் போன்ற தெய்வங்களை கும்பிட வேண்டும்.
2. நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு :-
பழனி முருகனை கும்பிட வேண்டும்.
3. மூட்டுவலி, யானைக்கால் வியாதி, கால் ஆணி தீர :-
சக்கரத்தாழ்வார் சுவாமியை கும்பிட வேண்டும்.
4. வாதம், கீழ்வாதம், பக்கவாதம், திமிர்வாதம், இளம்பிள்ளை வாதம் தீர :-
சனிபகவான், சிவபெருமான் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.
5. பித்தம் தீர :-
ஸ்ரீ முருகப் பெருமானை வழிபட வேண்டும்
6. வாயுக்கோளாறுகள்:-
ஆஞ்சநேய சுவாமியை வழிபட வேண்டும்.
7. எலும்பு வியாதிகள்:-
சிவபெருமான், முருகன் ஆகியோரை வழிபட வேண்டும்.
8. ரத்தசோகை, ரத்த அழுத்தம் :-
முருகப்பெருமான், செவ்வாய் பகவான் ஆகியோரை வழிபட வேண்டும்.
9. நீர்வியாதிகள் :-
சந்திரதரிசனம், விசாலாக்ஷி அம்மாள் ஆகியோரை வழிபட வேண்டும்.
10. குஷ்டம், சொறி, சிரங்கு :-
சூரியன், சங்கரன்கோவில், சங்கரநாராயணன், வைதீஸ்வரன் ஆகியோரை வழிபட வேண்டும்.
11. அம்மை நோய்கள்:-
முத்துமாரியம்மன், முத்தாளம்மன், கருமாரி ஆகியோரை வழிபட வேண்டும்.
12. ஐன்னி, தலைவலி, ஜீரம் :-
சங்கடஹரசதுர்த்தி, பிள்ளையார், முருகன் ஆகியோரை வழிபட வேண்டும்.
13. புற்று நோய் :-
சிவ பெருமானை வழிபட வேண்டும்.
14. விஷக் கடி :-
சங்கரன் கோவில் கோமதி அம்பாளை வழிபட வேண்டும்.
Comments
Post a Comment