*✍ЁЯП╗родрооிро┤் рооро░ுрод்родுро╡роо்.*

*✍🏻தமிழ் மருத்துவம்.*

*👉🏻மன அழுத்தத்தை போக்கும் அவரக்காய்ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிடவேண்டும்,*
*👉🏻அதை எப்படிச் சாப்பிடவேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.*

*✍🏻மருத்துவ குணம்*👇🏼

*👉🏻அவரைக்காய் தென்னிந்தியாவில் வீடுகள்தோறும் பயிரிடப்படும் தாவரமாகும். வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது. நல்ல சுவையைக் கொண்டது. *👉🏻எளிதில் ஜீரணமாகும்*
தன்மை கொண்டதால் இதன் சத்துக்கள் விரைவில் உடலில் சேரும்.
*👉🏻இதில் சுண்ணாம்புச்சத்து,*
*👉🏻வைட்டமின்கள்*
இருப்பதால் இளைத்த உடல் தேறும்.
உடலுக்கு வலிமை
அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் *👉🏻சின்னவெங்காயம்,*
*👉🏻பூண்டு,*
*👉🏻மிளகு சேர்த்து வதக்கி உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.*
*👉🏻நோய்க்கு மருந்துண்ணும் காலங்களிலும்,*
*👉🏻விரதம் இருக்கும் காலங்களிலும் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.*
*👉🏻இது உடலுக்கு வலுவைக் கொடுப்பதுடன் விரத மன அமைதியைப் பெருக்கவும் உதவும்.*
*👉🏻சிந்தனையைத் தெளிவுபடுத்தும்.*
*👉🏻பித்தத்தினால் உண்டாகும் கண்சூடு,*
*👉🏻கண்பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும்.*
*👉🏻அவரைப்பிஞ்சினை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து கண் நரம்புகள் குளிர்ச்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும்.*
*👉🏻அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்து குறைபாடுகள் நீங்கும்.*

*✍🏻ரத்தத்தை சுத்தமாக்கும்*👇🏼

*👉🏻அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.*
*👉🏻இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.*
*👉🏻இரத்த அழுத்தம்,*
*👉🏻இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.*
*👉🏻காமச்சிந்தனை,*
*👉🏻அதீத சிந்தனை,*
*👉🏻கோபம்,*
*👉🏻எரிச்சல்,*
*👉🏻இவற்றைப் போக்கும். உடலுக்கும், மனதிற்கும் சாந்தத்தைக் கொடுக்க வல்லது.*

*✍🏻நீரிழிவை குணமாக்கும்*👇🏼

*👉🏻சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொண்டால்,
நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம்,*
*👉🏻தலைச்சுற்றல்,*
*👉🏻கை,கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.*
*👉🏻மலச்சிக்கலைப் போக்கும்,*
*👉🏻வயிற்றுப் பொருமலை நீக்கும்.*
*👉🏻மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.*
*👉🏻சிறுநீரைப் பெருக்கும். சளி, இருமலைப் போக்கும்*

*✍🏻சரும நோய்களை
குணமாக்கும்*👇🏼

*👉🏻முதுமையில் உண்டாகும் நோயின் தன்மையை அவரைப் பிஞ்சு மாற்றும். தசை நார்களை வலுப்படுத்தும்.*
*👉🏻உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.*
*👉🏻சருமத்தில் உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்கும்.*
*👉🏻இரவு உணவில் அவரைக்காய் சேர்த்துக் கொண்டால் சுகமான நித்திரை கிடைக்கும்.*
*👉🏻முற்றிய அவரைக்காயை உணவாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.*
*👉🏻அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய்,*
*👉🏻முற்றிய வெண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும்.*
*👉🏻ஆண்மை சக்தி அதிகரிக்கும்.*
*👉🏻நினைவாற்றலைத் தூண்டும்.*

*✍🏻அதிக ஊட்டச்சத்து:*👇🏼

*👉🏻அவரைக்காயில் வைட்டமின் பி1,*
*👉🏻இரும்புச்சத்து,*
*👉🏻காப்பர்,*
*👉🏻பாஸ்பரஸ்,*
*👉🏻பொட்டாசியம்,*
*👉🏻மெக்னீசியம்,*
*👉🏻ஃபோலியேட்,*
*👉🏻மாங்கனீசு என்று பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.*
*👉🏻இந்தச் சத்துக்களால் சீரான இரத்த ஓட்டம் முதல் எலும்புகள் வலுவாவது வரை பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன.*

*✍🏻மன அழுத்தம் போக்க:*👇🏼

*👉🏻அவரைக்காயின் சுவையே தனி. அதில் அதிகமாக உள்ள எல்-டோப்பா என்ற அமினோ அமிலம்தான் அந்தத் தனி சுவையைக் கொடுக்கிறது. அந்த அட்டகாசமான சுவை நமக்கு சந்தோஷத்தைக் கொடுத்து, மன அழுத்தங்களைப் போக்குகிறது.*

*✍🏻பசியைப் போக்கும்:*👇🏼

*👉🏻அவரைக்காயில் கலோரிகளை எரிக்கும் சக்தி அதிகம் உள்ளது. மேலும் அதில் உள்ள புரதச்சத்தும் சேர்வதால், இந்த உணவைச் சாப்பிடும் போது நம் வயிறு நிறைந்த உணர்வு நமக்குக் கிடைக்கும்.*

*✍🏻நோயெதிர்ப்பு சக்தியை பெருக்க:*👇🏼

*👉🏻அவரையில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் நம்மை அண்டாது. வேறு சில நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.
சங்குலுண விற்குங் கற்கும் உறைகளுக்கும்
பொங்குதிரி தோடத்தோர் புண்சுரத்தோர்-தங்களுக்குங்
கண்முதிரைப் பில்லநோய்க் காரருக்குங் காழுறையா
வெண்முதிரைப் பிஞ்சாம் விதி
என்று அவரைக்காய் பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்பே தேரையர் குணபாடத்தில் கூறப்பட்டுள்ளது.*

Comments

Popular posts from this blog

роЗропро▒்роХை ro water :-

роиுро░ைропீро░ро▓் рокро▓роо் рокெро▒:-

роХрог் родிро░ுро╖்роЯி роиீроЩ்роХ роОро│ிрооைропாрой рокро░ிроХாро░роо்:-