Posts

Showing posts from March, 2021

பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கு இயற்கை முறையில் தீர்வும்:-

பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கு இயற்கை முறையில் தீர்வும்::: 👉🏼பல் சொத்தையை சரியாகக் கவனிக்காவிட்டால், அது அதிகமாகி, மற்ற பற்களிலும் பரவிவிடும். நாளடைவில் இது ஆழமாகி, பற்களின் வேர்களையும் தாக்கும். ஈறுகளுக்கும் பாதுகாக்க வழிமுறைகள். 👉🏼சிறிதளவு துளசி இலைகள், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் பல் வலி குணமாகும். சொத்தையான பல்லில் கிராம்பை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது சிறிது நேரத்தில் பல் வலி சரியாகிவிடும். 👉🏼மிதமான சுடுநீரில் கல் உப்பைக் கலந்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு வேளை இந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிருமிகள் கொல்லப்படும். பல் சொத்தையில் இருந்து விடுபடலாம். 👉🏼மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. பல் சொத்தையான இடத்தில் மஞ்சளைத் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்துக் கொள்ளுதல் அவசியம். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை குணமாகும். 👉🏼 வேம்பு மற்றும் ஆல விழுது சாற்றைப் பல் சொத்தை...

கொழுப்புக் கட்டி குறைய:-

தே.பொருட்கள்.. சரக்கொன்றைப் புளி – ½ கிலோ சுத்தமான பன்னீர் – 1 லிட்டர் எலுமிச்சைச் சாறு – 200 மி.லி சுத்தமான தேன் – 2 லிட்டர்      முதலில் சுத்தமான பன்னீரில் சரக்கொன்றைப் புளியை ஊற வைக்கவும். 6 மணி நேரம் ஊறிய பிறகு, அவற்றை நன்கு பிசைந்து பன்னீர் கரைசலை வடிகட்டவும். பின்னர் எலுமிச்சைச் சாறை அதனுடன் சேர்க்கவும்.      தேனை ஒரு பாத்திரத்திலிட்டு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து நுரை நீக்கி, முன்னர் தயார் செய்து வைத்துள்ள கரைசலை, தேனுடன் கலந்து கொதிக்க வைக்கவும். நல்ல நூல் பதத்தில் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.      200 மி.லி குளிர்ந்த நீரில் 50 மி.லி சர்பத்தை கலந்து, தினசரி அதிகாலை மற்றும் மாலை வேளை பருகி வந்தால்… உடல் பருமன், தொப்பை, அதிக கொழுப்புக் கரையும். வயிற்றில் கீரிப்பூச்சி, நாக்குப்புச்சி மற்றும் அமீபியாஸிஸ் தீரும். உடலில் காணப்படும் கொழுப்புக் கட்டி குறையும். மூல நோய், மலச்சிக்கல் குணமாகும். மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டையில் சதை வளர்ச்சி ஆகியன தீரும்.

மஞ்சகாமலை குணமாக:-

தே.பொருட்கள்.. கடுக்காய் தான்றிக்காய் நெல்லிவற்றல் மஞ்சள் மரமஞ்சள் கண்டங்கத்தரி முள்ளிக்கத்திரி சுக்கு மிளகு திப்பிலி தகரவிதை மருள் கிழங்கு சீந்தில்கொடி கற்கடகரோகணி பற்பாகடம் கோரைக்கிழங்கு வேப்பம்பட்டை அதிமதுரம் குரோசானி ஓமம் சிறுதேக்கு முருங்கைவிதை வசம்பு இலவங்கப்பட்டை கிரந்தித்தகரம் வெட்டிவேர் ஓரிலைத்தாமரை வெட்பாலை அரிசி அதிவிடயம் சிற்றாமுட்டி தேவதாரு பேய்ப்புடல் மூங்கிலுப்பு ஜாதிபத்திரி சந்தனம் வாய்விளங்கம் சித்திரமூலம் செவ்வியம் கிராம்பு தாளிசபத்திரி *ஜீவகம் *ருஷபகம் *காகோலி கழற்ச்சிப் பருப்பு கிச்சிலிக்கிழங்கு பூனைக்காய்ஞ்சொறிவேர் குருவேர்(வெட்டிவேர்) குடசப்பாலை உவர் மண்(பூநீறு) தாமரைக்கிழங்கு அல்லிக்கிழங்கு வெண்தாமரை மூவிலைத்தாமரை செய்பாகம் – இங்குக் கூறப்பட்ட 52 சரக்குகளை வகைக்கு ஓரு வராகனெடையும் நிலவேம்பு 26 வராகனெடையும் எடுத்துக்கொண்டு காயவைத்து இடித்து சூரணித்து வைத்துக் கொள்க. பிரயோகம்– தினம் காலை மாலை ¼ தோலா விகிதம் வெந்நீரில் கலக்கிச் சாப்பிட்டுக்கொண்டு வரச் சரீரத்தில் குடிகொண்டுள்ள நாட்பட்ட வாதசுரம், பித்தசுரம், கபசுரம், தொந்தசுரம், அஸ்திசுரம், பலவித மாறல் சுரம், இரத்தக் ...

கேள்வியும் பதிலும் :-

அஷ்டமி நவமியில் எந்த காரியமும் துவங்க கூடாது என்று சொல்வது எதனால் ?இறைவன் படைப்பில் எல்லா நாட்களும் நல்ல நாட்கள் தானே. ஒரு அன்பரின் அவசியமான கேள்வி ... இன்று எல்லோரிடமும் பேசப்படும் இந்த மாதிரியான நம்பிக்கைகள் பல உண்டு , என் வீட்டில் அழகான சிவபெருமான் தனித்து இருக்கும் படம் உண்டு , தொழில் செய்யும் இடத்தில் தியான நிலையில் சிவபெருமான் படம் உண்டு  , என் மாமா என்னை பார்க்க வரும் பொது எல்லாம் சிவ ரூபம் கோவிலுக்கு  மட்டும் தான் விளக்கி விடு என்பார் . சில நபர்கள் குழல் ஊதும் கண்ணன் வீட்டிற்க்கு ஆகாது , நடராஜர் உருவம் அல்லது சிலை குடும்பத்திற்கு ஆகாது , அமர்ந்த லக்ஷ்மி செல்வம் சேராது , இப்படி பலவரியான நம்பிக்கைகளை சொல்வது உண்டு , இவைகள் எந்த வகையில் உண்மை என்று யாரும் சிந்திப்பது இல்லை  பொருளாதாரம் மற்றும் தேவைகள் தடை படகூடாது என்று அனபர்கள் அஞ்சி இந்த நம்பிகைகளை கடைபிடிகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும் .  அஷ்டமியில் செய்ய கூடாதது  பற்றி தெரிந்து கொள்ளும் முன் அஷ்டமியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் . அஷ்டமி என்பது ஒரு திதி . திதி என்பது சூரியன்,சந்திரன்,பூமி இவர்களுக்க...

குலதெய்வம் வீட்டிற்கு உடனே வர:-

*✳️பூஜை அறையில் தண்ணீரை இப்படி மட்டும் செய்தால் போதும்! எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் வீட்டிற்கு உடனே வரும்.** ☘️ஒவ்வொரு மனிதனுக்கும் குல தெய்வம் தான் முதல் கடவுளாக இருக்கும். குலத்தைக் காக்கும் கடவுளிடம் வரம் கேட்டு தான் நம் உயிரையே எமதர்மன் பீடிப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. வழிவழியாக நம் முன்னோர்களின் ஆத்மாக்கள் வாழும் குலதெய்வம் எப்போதும் நமக்கு தீங்கு செய்வதில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் குலதெய்வம் சிலசமயங்களில் கோபித்துக் கொண்டு இருக்கும். இதற்கு நாம் நம் குல தெய்வத்தை மறந்ததும் காரணமாகும். குலதெய்வத்தை மறந்தவர்கள், *குலதெய்வத்தை வீட்டிற்கு அழைக்க எளிதாக இப்படி செய்யலாம்!* என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம். ☘️ஒரு சிலருக்கு தங்களுடைய குல தெய்வம் என்னவென்றே தெரியாமல் இருக்கும்! ஒரு சிலர் குலதெய்வத்தை வழிவழியாக வழிபட்டு வந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் அதனை பின் தொடர்வதை நிறுத்தி வைப்பார்கள், வேண்டுதல்களை மறந்து போவதும் காலதாமதம் செய்வது போன்ற விஷயங்களிலும் *குலதெய்வத்தின் அருள் கிடைக்காமல்* போக வா...

சனி தசா தரும் பலன்கள் :-

🎱 சனி தசா தரும் பலன்களும் 🌚சனி தரும் தொழில்களும்          நாம் முன் ஜன்மத்தில் செய்த பாவ புண்ணிய செயல்களின் படியும்,           நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணிய செயலுக்கு ஏற்பவும்         இந்த ஜன்மத்தில் நாம் இன்பங்களையும்,துன்பங்களையும்  அனுபவிக்கிறோம்.       முன்னோர்களின் நகல்களே நாம் அவர்களின் சொத்தில் நமக்கு மட்டும் உரிமை இல்லாமல் நமது வாரிசுகளுக்கும் உரிமை உள்ளதைப் போன்று அவர்களின் பாவபுண்ணியத்தில் நமக்கும்,நமது வாரிசுகளுக்கும் பங்கு உண்டு.    இதை கர்மா என்கிறோம். இதை கண்காணிக்கவும் , பாரபட்சம் இன்றி செயல் படுத்தவும் 7 1/2 சனியாகவும், (மங்குசனி,பொங்குசனி,மரணசனி), அட்டம சனியாகவும், கண்டசனியாகவும், அர்தாஷ்டமசனியாகவும்  வலம் வந்து தசாபுத்திக்கு ஏற்ப தனது கடமையை கர்மகாரணான சனி செவ்வனே செய்து வருகிறார்.           மிக மெதுவாக சூரியனை 30வருட காலத்தில் சுற்றி வருகிறார் சனி பகவான்.             அதனால் தான் 30வருடம் வாழ்ந்தவரும் இல்ல...

வாஸ்து உண்மை :-

Image
வாஸ்து உண்மை? நேற்று சனிக்கிழமை , நிறைந்த அஷ்டமி திதி.   வாஸ்து என்ற ஒரே காரணத்திற்காக நேற்று பல இடங்களில் புதிய பூஜைகள் போடப்பட்டது. வீடு கட்டுவதற்கு உகந்த மாதங்கள் வீடு கட்டுவதற்கு பல்வேறு விதிமுறைகளை மனையடி சாஸ்திரம் முன்வைக்கிறது. இவற்றில் அனைத்தையும் பின்பற்ற முடியாத நிலையில் எவரேனும் இருந்தாலும், பொதுவாக சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம்.  அவற்றில் ஒன்றுதான் எந்தெந்த மாதங்களில் வீடு கட்டலாம் என்பதும். இதனை வீடு கட்டும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் நல்லதாகும். எந்தெந்த மாதங்களில் வீடு கட்டினால், எவ்விதமான பலன்கள் கிட்டும் என்பதையும் மனையடி சாஸ்திரம் விளக்கிக் கூறுகிறது.  வீடு கட்டுவதற்கு மிகவும் உகந்த மாதங்களில் வைகாசி மாதமும் ஒன்று. இம்மாதத்தில் வீடு கட்டினால், அந்தப் பணிகள் சிறப்பாகவும் விரைவாகவும் செய்து முடிக்கப்படும். அத்துடன் குடியிருக்கும் குடும்பமும் வளமுடன் இருக்கும்.  அதேபோல் ஆவணி மாதமும் மிக மிக உகந்த மாதம் ஆகும். குடும்பத்தில் இன்பம் என்றும் குடிகொண்டிருக்கும் வகையில் வாழ்க்கை இனிமையாக அமையும். பொருளாதாரம் உ...