இயற்கை மருத்துவம் :-

இயற்கை உணவு 
நமக்கு நாமே மருத்துவர்

தலை முடியையும் தோலின் தன்மையும்  பராமரிக்க வழிமுறைகள்.:

நெல்லிக்காயையும், ஊறவைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப்  போக்கும் கை கால் இடுக்குகளில் ஏற்படக்கூடிய துர்நாற்றம் தீரும்.

நெல்லிக்காயை ஊறவைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத் தலை முதல் கால் வரை தடவி ஊறவைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும் நீர்த்தாரையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை சரிசெய்யும்.

இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச்சாறு கடலைமாவை குழைத்து கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி விடவும். பொடுகுத் தொல்லை போய்விடும்.

தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து பால் பிழியவும். இதை இரும்புக் கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெய்யைத் தலையில் தடவி ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

கூந்தல் கை கால்கள் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி தேங்காய்ப்பால், அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குழைத்து தலை முதல் கால் வரை மசாஜ் செய்யவும். அரை  மணிநேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

ஒரு பங்கு சீயக்காய் வெந்தயம் கால் பங்கு பச்சைப்பயறு அரைப்பங்கு புங்கங்காய் கைப்பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும். ரசாயனப்  பொருள்கள் இல்லாத பொடி எல்லா வித நன்மையும் வந்து சேரும்

பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து பொடி செய்து பசும் பாலில் குழைத்து தலை முதல் கால் வரை தடவி ஊறிய பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.

தலை முதல் கால் வரை சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும்போது சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கிவிடும். உடலுடைய இயற்கையான மனம் நாள் முழுவதும் உடலில் இருக்கும் சீயக்காயும் குறைந்த அளவே போதும்.


Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-