கோபத்தை கட்டுப்படுத்தும் பரிகாரம்:-

பிரியாணிக்காக பயன்படுத்தப்படும் 4 அன்னாசிப் பூவை எடுத்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு விடுங்கள். அந்த வாசம் நல்ல நறுமணத்தோடு மேலோங்கும்.

அந்த நறுமணமானது வீடு முழுவதும் பரவும்படி செய்யவேண்டும். அந்த பாத்திரத்தை ஒவ்வொரு அறையிலும் ஐந்து நிமிடங்கள் வைத்தால் போதும். அந்த நறுமணம், நம் சுவாசத்தில் கலந்து நம் கோபத்தை கட்டுப்படுத்தும் என்பது உண்மையான ஒன்று. இதை பரிகாரம் என்று கூட சொல்லிவிட முடியாது. இது ஒருவிதமான பயிற்சி. வாரத்தில் இரண்டு முறை உங்கள் வீட்டிலும் இப்படி செய்து பாருங்கள். இயற்கையாகவே அன்னாச்சி பூவுக்கு கோபத்தை கட்டுப்படுத்தும் சக்தி உள்ளது.

சண்டை வரும் வாய்ப்பு கண்டிப்பாக குறையக்கூடும். இதேபோல், இந்த அன்னாச்சி பூவை பண வரவிற்காகவும் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு அன்னாசிப்பூ 1, 5 ஒரு ரூபாய் நாணயம், 3 ஏலக்காய், 2 பட்டை, இவைகளை ஒன்றாக போட்டு வையுங்கள். உங்கள் கைகளில் வரும் வருமானத்தில் சிறிதளவே அந்த டப்பாவில் போட்டு சேமித்து வையுங்கள். அந்த டப்பாவை திறந்தபடி உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள் போதும்.

பணத்தட்டுப்பாடு இல்லாமல் உங்கள் செலவுக்கு ஏற்றவாறு வருமானம் வந்துகொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே அஞ்சறைப் பெட்டியிலும் பணம் சேர்த்தால், அது தொடர்ந்து சேர்ந்து கொண்டே வரும், என்பது நம் பாட்டி காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்படும் நம்பிக்கை தான். வாசனை பொருட்களை சேமித்து வைக்கும் பெட்டியும் அஞ்சரைப்பெட்டி என்று தான் சொல்லப்படும். ஆகவே இந்த முயற்சியை செய்து பார்ப்பதில் தவறில்லை.

இந்த பதிவின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பரிகாரங்களுமே மிகவும் சுலபமான பரிகாரங்கள் தான். நமக்கு நன்மை தரக்கூடிய பரிகாரங்கள் தான். நம்பிக்கையோடு நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். அன்னாச்சி பூ பிரியாணிக்கு மட்டும் சுவையை கொடுக்கவில்லை. நம் வாழ்க்கையையும் சுவையான வாழ்க்கையாக மாற்றும் அளவிற்கு சக்தி கொண்டது என்பதை நீங்கள்  அனுபவித்து உணர்ந்தால் தான் தெரிந்துகொள்ள முடியும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-