Posts

Showing posts from November, 2018

கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு (Triglyceride )கட்டுக்குள் வைக்க எளிய மருத்துவம்!

கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு (Triglyceride )கட்டுக்குள் வைக்க எளிய மருத்துவம்! பால் .............. ஐம்பது மில்லி  தண்ணீர் ....... நூறு மில்லி  பூண்டு ........ நான்கு பற்கள்  பட்டை தூள் ........... இரண்டு கிராம்  கிராம்பு ... நான்கு எண்ணம்  அனைத்தையும் ஒன்றாக சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்க வைத்து ஐம்பது மில்லியாக சுருக்கி இறக்கி வடிகட்டி  தினமும் காலை மாலை என இரு வேளைகள் உணவுக்கு முப்பது நிமிடங்களுக்கு முன் ஒவ்வொரு வேளையும் புதிதாக செய்து தொடர்ந்து நூறு நாட்கள் குடித்து வர கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு கட்டுக்குள் வரும்  தேவையான Lipid profile மருத்துவ ஆய்வு செய்து கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடு கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை உறுதிப் படுத்திய பின் தினமும் ஒரு வேளை மட்டும் குடித்து வந்தால் போதும்.

குளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி

🌹குளியல் மூலமே தோஷங்களை போக்குவது எப்படி தெரிந்து கொள்ளுங்கள்  நாம் இந்த பிறவியில் படும் துன்பங்களுக்கு காரணம் நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷமே என்று ஜோதிடம் கூறுகிறது.  நம் ஜாதகத்தில் இருக்கும் தோஷங்களை போக்க நாம் முக்கியமாக வணங்க வேண்டியது நவகிரகங்களையே.  நாம் தினமும் குளிக்கும் நீரில் சிலவற்றை கலந்து குளிப்பதன் மூலமாக கிரக தோஷங்கள் நீங்கும் என்று கூறப்படுகிறது. வாருங்கள் இது குறித்து பார்ப்போம். சூரியனால் ஏற்படும் தோஷம் நீங்க: சிகப்பு மலர்களையோ அல்லது குங்குமப்பூவையோ குளிக்கும் நீரில் சிறிதளவு போட்டு பின்பு நான்கைந்து குவளைகள் அந்த நீரில் குளித்துவிட்டு பின் வழக்கம் போல சாதாரண நீரில் குளிக்கலாம். இதனால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் விலகும். சந்திரனால் ஏற்படும் தோஷம் நீங்க: அழகுக்காக பலர் தயிரை முகத்தில் பூசிக்கொள்வது வழக்கம். சந்திரனால் ஏற்படும் தோஷத்தை போக்கவும் இதை தான் செய்யவேண்டும். குளிப்பதற்கு முன்பு சிறிதளவு தயிர் எடுத்து அதை உடல் முழுக்க தடவி பின் குளித்துவந்தால் சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் விலகும். செவ்வாயால் ஏற்படும் தோஷம் நீங்க: செவ்வாய் தோஷம் இருப்பதால்...

காலப்பகை திசா/புத்தி

காலப்பகை திசா/புத்தி எந்த லக்கினம் ராசியாக இருந்தாலும், கீழ்கண்ட காலப்பகை திசா - புத்தி நடப்பில் இருந்தால் கண்டிப்பாக கெடு பலன்களைச் செய்யும். காலப் பகை திசா புத்திகள் சனி திசை × செவ்வாய் புத்தி ராகு திசை × புதன் புத்தி சூரிய திசை × சுக்கிர புத்தி சந்திர திசை × குரு புத்தி சுக்கிர திசை × சூரிய புத்தி கேது திசை × சனி புத்தி புதன் திசை × ராகு புத்தி செவ்வாய் திசை ×ராகு புத்தி குரு திசை × புதன் புத்தி இந்த திசா-புத்தி காலங்களில் நன்மையான பலன்கள் ஏற்படாது.

சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!!

*சில உபயோகமான மருத்துவ டிப்ஸ் !!! 🍎 தக்காளியை சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும் தக்காளி ஜூஸை வாயில் விட்டு கொப்பளித்து விழுங்கினாலும் உடனடி பலன் தெரியும் 🍊 சாப்பிட்ட பின்பு ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு நாக்கினால் மேலண்ணத்தில் 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள பைடோ கெமிக்கல்ஸ் துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து வாயை புத்துணர்வுடன் வைக்கும் 🍋வெந்தயக்கீரை கொத்தமல்லி இரண்டையும் மைய அரைத்து தலையில் பூசிக் குளிக்க தலைமுடி பட்டுப்போல் மின்னும் 🥑 பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கி கொள்ளுங்கள். இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்தீரில் கலந்து குடித்து வர அல்சர் சீக்கிரமே குணமாகும் 🥥. குழந்தைகளை நோய் அண்டாதிருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு ஐந்து மணி நேரம் ஊற விடுங்கள். பிறகு அந்தத் தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது. 🍏மாத்திரை மருந்தில்லாமல் கால்சியம் சத்து பெற்றிட வெள்ளை எள்ளை வெறும் வாணலியில் வறுத்து வைத்துக் கொண்டு தினமும் ஒரு டீஸ்பூன் ச...

திருமணரகசியங்கள்

#திருமணரகசியங்கள் நிச்சயமாக திருமணம் நடக்ககும் என்பதை நிர்ணயம் செய்வது எப்படி ஆண் ஜாதகம் 1, ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க 7-க்குடையவனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும். 2, ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-இல் சுக்கிரன் நின்றிருக்க, சுக்கிரனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும். 3, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் அடுத்தடுத்த ராசிகளiல் நின்றால் திருமணம் நிச்சயம் நடைபெறும். 4, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் திரிகோணமாக நின்றால் திருமணம் நிச்சயம் நடைபெறும். 5, 7-ஆம் பாவ அதிபதி லக்னத்திற்கு கேந்திரத்தில் ( 1-4-7-10 ) நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும். 6, 7-ஆம் பாவ அதிபதி குருவாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ ( 1-4-7-10 ) அல்லது திரிகோணத்திலோ ( 1,5,9 ) நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும். 7, 7-ஆம் பாவ அதிபதி செவ்வாயாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ அல்லது 6-ஆம் வீட்டிலோ அல்லது 10-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும். ...

வாஸ்து சாஸ்திரம்;-

மனைஅடி வாஸ்து சாஸ்திரம்;- வாஸ்து சாஸ்திரம்;- இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட்டி கிறது. அதனால் தான் ஒருவனுக்கு தான் வசிக்கும் வீடு மிகவும் முக்கியமானதாக அமைகிறது. வீட்டில் அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும். இன்றுள்ள சிக்கலான சூழ்நிலையில், உடல் ஆரோக்கியம், சொத்து மற்றும் சொந்த பந்தங்களுடன் ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணிகளை ஆராயக் கூட நமக்கு நேரம் கிடைப்பதில்லை. பெரும்பாலான இந்த பிரச்சனைக்கு வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங்சூயிக்கும் (Feng Shui) சம்மந்தம் உள்ளது. ஆகவே சில கட்டளை களை பின்பற்றினால், வீட்டிலுள்ள நேர் மறை சக்திகூடும். 1) எப்போதும் வீட்டின் நடுவே நின்று திசைக்காட்டியின் உதவி யோடு திசை களை அறிந்துக்கொள்ளுங்கள். வீட்டின் முதன்மை வாசல் கதவு வழியாகத் தான் நேர்மறை சக்தி வீட்டிற்குள் நுழையும். ஆகவே வாங்கும் புது மனையின் வாசற்கதவு, தென்மேற்கு திசையை நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென் றால் இந்த திசை தான் தீய சக்திகளின் நுழை வாயில். அது நமக்...

இதயம் காக்க :

இதயம் காக்க : *வெண்தாமரை இதழ்கள் - 50g  நாட்டு ரோஜா இதழ்கள் - 25g   நாட்டு செம்பருத்தி இதழ்கள் - 50g  ஆவரம் பூ இதழ்கள் - 25g  மருதம் பட்டை - 50g  நன்னாரி - 10g  அதிமதுரம் - 10g  மாசிக்காய் - 10 g  கரிசலாங்கண்ணி - 25g  நில பனை கிழங்கு -50g * இவைகளை நிழலில் காயவைத்து பொடித்து பயன்படுத்தவும். * ஒரு ஸ்பூன் பொடியை ஒரு கப் தண்ணிரில் 30 நிமிடங்கள் ஊறவிட்டு பின்பு கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து தினமும் பருகலாம். * இதயத்திற்கு வலுவூட்டுகிறது. * தேவையற்ற கொழுப்பைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சீர் செய்கிறது.  *நல்ல பயனளிக்கும், ஹார்ட் அட்டக் பத்தி 100% பயமில்லாமல் இருக்கலாம்.

சத்துமாவு__தயாரிக்கும்__முறை

#சத்துமாவு__தயாரிக்கும்__முறை !!! *இதுதான் உண்மையான சத்துமாவு  இதை தயாரிக்கும் முறை:* இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது.  *#தேவையான_பொருட்கள்:* ராகி 2 கிலோ  சோளம் 2 கிலோ கம்பு 2 கிலோ  பாசிப்பயறு அரை கிலோ  கொள்ளு அரை கிலோ  மக்காசோளம் 2 கிலோ பொட்டுக்கடலை ஒரு கிலோ  சோயா ஒரு கிலோ  தினை அரை கிலோ  கருப்பு உளுந்து அரை கிலோ  சம்பா கோதுமை அரை கிலோ பார்லி அரை கிலோ  நிலக்கடலை அரை கிலோ  அவல் அரை கிலோ  ஜவ்வரிசி அரை கிலோ  வெள்ளை எள் 100 கிராம்  கசகசா 50 கிராம்  ஏலம் 50 கிராம்  முந்திரி 50 கிராம்  சாரப்பருப்பு 50 கிராம் பாதாம் 50 கிராம்  ஓமம் 50 கிராம்  சுக்கு 50 கிராம்  பிஸ்தா 50 கிராம்  ஜாதிக்காய் 2  மாசிக்காய் 2 *#செய்முறை :* ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயில...

அமிர்த பானம்:

* அமிர்த பானம்:  *நாட்டு கொத்துமல்லி இலை - கால் கட்டு தேங்காய் - 1 நாட்டு சர்க்கரை - தேவையான அளவு * சுத்தம் செய்த கொத்துமல்லியுடன் தேங்காய் சேர்த்து அரைத்து வடிகட்டவும் கூட தேவையான அளவு தண்ணீர்,நாட்டு சர்க்கரை கலந்து பருகலாம். கண்டிப்பாக அடுப்பில் வைக்க கூடாதுங்க. (அல்லது) * வெறும் கொத்துமல்லி சாறுடன் எலுமிச்சை சாறு,உப்பும்,மிளகு தூளும் சேர்த்து அருந்தலாம். * இதை தொடர்து பருகுவதால் காமாலை, கேன்சர் போன்ற மிகக் கொடிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.உடலில் உள்ள கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றும். * வயிறு சம்பந்தபட்ட அனைத்து ப்ரச்சனைகளையும் குணமாக்கும். கல்லீரலை பலப்படுத்தும். பித்தம் கட்டுக்குள் இருக்கும். * மிகவும் எளிதானது,அனைவரும் பருகலாம், தினமும் தண்ணீர்க்கு, டீ, காபிக்கு பதில் அருந்தலாம். * கொத்துமல்லிக்கு பதில் கருவேப்பிலையும் , புதினாவையும், உபயோகிக்கலாம். ஆனாலும் கொத்துமல்லி சிறந்ததுங்க.

விளக்கெண்ணெய் தயாரிப்பு :-

*விளக்கெண்ணெய் தயாரிப்பு : பாரம்பரிய முறைப்படி அதன் பயன்களும் விளக்கெண்ணெய் விஷமா ? அம்ருதமா ? விளக்கெண்ணெய் உள்பிரயோகம்  விஷமா ? அம்ருதமா ? நவீன உலகம் ஆமணக்கு விதையை உலகத்தில் மிக சிறந்த விஷம் உள்ள விதையாக அறிவிக்கிறது. அதில் ரெசின் என்கிற விஷம் –  முழு விதை வடிவில் எடுத்து கொண்டால் மரணத்தை கூட வர வைக்கும் என்று பயமுறுத்துகிறது. ஆனால் அந்த விதையில் இருந்து தயாரிக்கபடுகிற எண்ணையை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் (The Food and Drung Administration - FDA), `விளக்கெண்ணெய் பொதுவாகப் பாதுகாப்பானது’ (GRAS - Grossly recognized as Safe) எனச் சான்று தந்துள்ளது. பின்னர் விளகெண்ணையில் எது விஷம் ? எது அம்ருதம் ? இன்றைய நவீன விஞ்ஞான அறிவியல் படி ஆமணக்கு விதையை இயந்திரங்கள் மூலம் அழுத்தி பிழியும் முறை எந்த அளவுக்கு உள்ளே பயன்படுத்த தகுந்தது என்று சொல்ல முடியாது –பல Toxic விஷ சத்துக்கள் அதிலே இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது –இந்த வகையில் தயாரிக்கபடும் விளக்கெண்ணெய் வெளி பிரயோகத்திற்கு வேண்டுமானால் பாதுகாப்பானதாக இருக்கலாம் –உள்ளே பயன் படுத்து பற்றி நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும...