Posts

Showing posts from October, 2018

வீட்டில் விளக்கு ஏற்றாதீர்கள்

வீட்டில் விளக்கு ஏற்றாதீர்கள் என்று நேரடியாக சொன்னா நீங்க கேட்பீர்களா ?   கேட்கமாட்டீர்கள் ...  மதம் மாற்றிவிட்டால்....... வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே!  “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா? தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை(நெகடிவ் எனர்ஜி) ஈர்க்கும் சக்தி உண்டு.  அவ்வாறு ஈர்க்கும்போது நம்மை சுற்றி பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்கும்.  நம் சுற்றுப்புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும். இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தால் வீடே  மயானம் போல் தோன்றும்.  எல்லோருமே சோர்வாக இருப்பார்கள்.  இதுவே விளக்கேற்றுவதன் தத்துவம். நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும், சுவாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.  அதேபோல மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற தூய்மை அடைந்து நற்பலன்களை அடைகிறது. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரியநாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமா...

பித்ரு தோசம்

பித்ரு தோசம் தற்போது பித்ரு தோசங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் முறையான பித்ரு தர்ப்பணம் மற்றும் பித்ரு வழிபாடுகள் செய்யாததே காரணம். பிருகு நந்தி நாடி முறைப்படி ஜாதகத்தில் சூரியனுக்கு 1, 5, 9, 2 இந்த இடங்களில் ராகுவோ கேதுவோ இருந்தால் அது பித்ருதோதோசமாக கருதப்படுகின்றது. இப்போது சூரியனின் காரகத்துவமாக கடிகாரம், காலண்டர் இவற்றை எடுத்துக்கொள்ளலாம். எனவே பித்ருதோசங்கள் இருப்பவர்கள் வீட்டில் பயன்படுத்தாத கடிகாரங்கள்., பழுதடைந்த கடிகாரங்கள்., முறையாக பயன்படுத்தாத காலண்டர்கள்., முறையாக கிழிக்காமல் உள்ள காலண்டர்கள் நிச்சயம் இருக்கும். பலரது ஜாதகங்களை ஆய்வு செய்தபோது சூரியன் கேது உள்ளவர்களது வீட்டில் புதியகடிகாரத்தை இயங்கவிடாமல் இவர்களே தடைசெய்து வைத்திருக்கின்றனர். சூரியன் ராகு சேர்க்கை உள்ளவர்கள் உடைந்த பழுதடைந்த கடிகாரத்தினை சரிசெய்து பயன்படுத்தலாம் என்று வைத்திருக்கின்றனர். சூரியன் கேது புதிய காலண்டர்களை பயன்படுத்தாமல் வைத்திருக்கின்றனர். சிலரது வீட்டில் இரண்டு மூன்று வருட காலண்டர்கள் கூட பயன்படுத்தாமல் வைத்திருக்கின்றனர். சூரியன் ராகு சேர்க்கை காலண்டர்களை சரியாக தேதி மாற்றாமல் ம...

மோட்ச தீப வழிபாடு!!!

 (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும் ரகசிய மோட்ச தீப வழிபாடு (சித்தர் அகத்தியர்)21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும் ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக "மோக்ஷ தீபம்" கோவிலில் ஏற்ற வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார். பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், நாடி வாசிப்பில் வந்தததை படித்த பொழுது, அதற்கான பதில் கிடைத்தது. "சித்தன் அருளை" வாசிக்கும் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன். தேவையானவை:- வாழை இலை பச்சை கற்பூரம் சீரகம் பருத்திக் கொட்டை கல் உப்பு மிளகு நவ தான்யங்கள் கோதுமை நெல் (அவிக்காதது) முழு துவரை முழு பச்சை பயிறு கொண்ட கடலை மஞ்சள் (ஹைப்ரிட் அல்லாதது) முழு வெள்ளை மொச்சை கருப்பு எள் முழு கொள்ளு முழு கருப்பு உளுந்து விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42 தூய பருத்தி துணி - (கை குட்டை அளவு) - 21 செய்யும் முறை:- எல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட, பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். ...

திதியும் ,நட்சத்திரமும் , லக்னமும்

 திதியும் ,நட்சத்திரமும் , லக்னமும் ஒவ்வொரு மாதத்தில் வரும் நாட்களில் சுபம் விலக்க வேண்டும் என்று கூறுகிறது சாஸ்திரம். சித்திரை ஃ  அஷ்டமி , ஏகாதசி திதி                       ரோகிணி நட்சத்திரமும்                       கும்ப லக்னமும்  , வைகாசியில் ஃ துவாதசி திதியும் ,                           சித்திரை , சுவாதி ,                        உத்திராட நட்சத்திரமும்                            மீன லக்னமும் ஆனி ஃ       திரியோதசி திதியம்                      புனர்பூச நட்சத்திரமும்                       ரிஷப லக்னமும் , ஆடி     ஃ    ...

மூலிகைகளுக்கும் நவகிரகங்களுக்கும்

மூலிகைகளுக்கும் நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்பு இந்த நவநாயகர்கள் பிறப்பினால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்க நம் முன்னோர்கள் பல ஆயிரக்கணக்கான கோவில்களை சென்றுள்ளார்கள். அதில் இன்னெனை ஸ்தலம் எந்தெந்த தோஷத்தை நிவர்த்தி செய்யும் என்பதை என்பதையும் நமக்கு அடையாளப்படுத்தின விஷயங்களை  ஆய்வு செய்து பார்த்தல், நமக்கு வியப்பூட்டும் விசயங்கள் பல. பொதுவாக நாக தோஷம் உள்ளதா             நாகர்கோவில் நாகராஜன் கோவில் செல். பிரம்மஹத்தி தோஷம் உள்ளதா.            திருவிடை மருதூர் மகாலிங்க  மூர்த்தியை வழிபாடு செய். களஸ் திர  தோஷம் உள்ளதா             திருலோகி தார தோஷம் உள்ளதா             கோயில் திருமாகாளம் சிவனை வணங்கு. புத்திர தோஷம் உள்ளதா               கந்தவர் கோட்டை கோதண்டராமரை வணங்கு. காலசர்ப்ப தோஷம் உள்ளதா,  இப்படி  ஒருவருடைய ஜாதகத்தில் கிரக ரீதியான கிரக பாதிப்புகள் குறிப்பிட்ட  ஆலயங்களை வடிவமைத்துள்ளனர். இதன் வடிவமைப்பின் மகத்...

பரிகாரம்

பரிகாரம் ========= பரிகாரம் என்றால் என்ன என்று அறிவதற்கு முன், தோசம் பற்றி அறிந்து கொள்வோம். பெரும்பாலும் ஜோதிடத்தில் சம்ஸ்கிருத வார்த்தைகளே பயன்படுத்தபடுகிறது. தோசம் (அ) தோசா என்ற சொல் கூட சமஸ்கிருத பின்னணி கொண்டது தான். தோசம் என்றால் குறைபாடு அல்லது ஒவ்வாமை என்று பொருள். கிரக தோசம் என்றால் அந்த கிரகத்தின் பண்புகள் (காரகத்துவம்) குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ கிடைப்பது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்ப, அளவுக்கு அதிகமாக கிடைக்கும் அசுப மற்றும் சுப கிரக பண்புகள் எதோ ஒருவிதத்தில் மனித உடலை அல்லது மனதை பாதிக்கிறது.  பரிகாரம் பற்றிய விளக்கம் ========================== பரிகாரம் என்பதை பரி + காரம் என்று பிரித்து பொருள் காணவேண்டும். ஏற்கெனவே சொல்லிது போல் பரிகாரம் என்பது சமஸ்கிருத வார்த்தையே. பரி - இணையான, காரம் அல்லது காரகம் - செயல் அல்லது வினை. இதன் முழு பொருள் இணையான செயல். பரிகாரம் என்பது பொய் என்ற சிலரின் கூற்றை உடைக்கவே இந்த கட்டுரை. கிரக பண்புகளால் பாதிக்கப்படும் மனிதனின் உடலை பாதுகாக்கவே இந்த பரிகாரங்கள். பரிகாரம் என்பதன் சரியான அர்த்தம் இணையான செயல் இ...

புரட்டாசி மாதத்தில் தலை முடி இறக்கம் செய்யலாமா ???

புரட்டாசி மாதத்தில் தலை முடி இறக்கம் செய்யலாமா ???  ************************************************************************** அம்மாவாசை & பௌர்ணமியில் முடி இறக்கம் செய்யலாமா ??? ************************************************************************** கூடாதா ??? ஓர் ஆய்வு !!!!! ****************************************  குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம் :  *************************************************************  கிரக நாடி ------ பாடல் எண் -- 172 - ஆடி , புரட்டாசி , ஐப்பசி , மார்கழி ,  தேடிய ஞாயிறு ,செவ்வாய் , சனி தனில் ,  கூடிய ரோமம் குறைத்திட வல்லிரேல் ,  மாடு , மக்கள் , மைந்தர் , மாள்வீரே ---  - பாடல் விளக்கம் :  ****************************** ஆடி , புரட்டாசி , ஐப்பசி , மார்கழி மாதங்களில் , ஞாயிறு , சனி , செவ்வாய் , கிழமைகளில் , குழந்தைக்கு முதல் முடி எடுத்தால் , மாடும் , மக்களும் ,பிள்ளைகளும் இறந்து விடுவார்கள் என்பதாம் -- பொதுவாகவே இந்த கருத்தை தலைச்சன் குழந்தைக்கு , முதல் முடி எடுக்கும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -- 2 ...

பாலியல் பிரச்சனைகள்

பாலியல் பிரச்சனைகளை சந்தித்து வரும் ஆண்கள் பீட்ரூட்டை சாப்பிடுவதன் மூலம் அதிலிருந்து மீளலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஏனெனில், பீட்ரூட்டை சாப்பிடும் போது, அதில் உள்ள நைட்ரேட்டுகள் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் நைட்ரைட்டுகளாக மாற்றமடைகிறது.பீட்ரூட்டை நன்கு மென்று விழுங்கும் போது, வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களால் அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்களை விரியச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.பீட்ரூட்டில் உள்ள சத்துக்கள் பீட்ரூட்டில் தண்ணீர் – 87.7 சதவீதம், புரதம் – 17 கிராம், கொழுப்பு 0.1 கிராம், தாதுக்கள் 0.8 மில்லி கிராம், நார்ச்சத்து 0.9, கார்போஹைட்ரேட் – 0.8 சதவீதமும், கால்சியம் – 18 மில்லி கிராம், பாஸ்பரஸ் – 5.5 மில்லி கிராம், இரும்புச்சத்து 10, விட்டமின் ‘சி’ 10 மில்லி கிராமும் உள்ளன. விட்டமின் ‘ ஏ’ மற்றும் பி1, பி2, பி6 நியாசின், விட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோரின், அயோடின், தாமிரச் சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன. மருத்துவ பயன்கள் 1. பீட்ரூட்டில் உள்ள மாவுச்சத்து கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி த...