Posts

எந்த ராசிக்காரர்கள் எப்போது விநாயகரை வழிபட்டால் பலன் அதிகம் கிடைக்கும்:-

எந்த ராசிக்காரர்கள் எப்போது விநாயகரை வழிபட்டால் பலன் அதிகம் கிடைக்கும்: மேஷம் : வளர்பிறை நாளில் வரும் சனிக்கிழமைகளில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்தால், துன்பங்கள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியை தருவார். ரிஷபம் :🌹🌿 சதுர்த்தியன்று சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு பின் வெண்தாமரை மலரை கொண்டு விநாயகருக்கு பு+ஜை செய்து வழிபட்டு வந்தால் உங்களுக்கு அவரின் அருட்பார்வை நிச்சயம் கிடைக்கும். மிதுனம் : 🌹🌿 செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் காலையில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு விநாயகரை வணங்க வேண்டும். பின் அன்று மாலை வெற்றிலைபாக்கு, பழம், பானகம், பாயசம் ஆகியவற்றை வைத்து நிவேதனம் செய்து, சம்பங்கி, செந்தாமரை, மல்லி ஆகிய மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தால் நல்லது. கடகம் :🌹🌿 சங்கடஹர சதுர்த்தியன்று சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு கணேசனுக்கு அருகம்புல் சார்த்தி அர்ச்சனை செய்தால் வேண்டுதல்கள் நிறைவேறும். சிம்மம் :🌹 🌿 வெள்ளிக்கிழமை காலையில் சு+ரிய உதயத்திற்கு முன்பு எழுந்து நீராடிவிட்டு வி...

அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள்:-

ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள் 01. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி 02. பரணி – ஸ்ரீ துர்கா தேவி 03. கார்த்திகை – ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்) 04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணர். (விஷ்ணு பெருமான்) 05. மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்) 06. திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான் 07. புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்) 08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்) 09. ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்) 10. மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்) 11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி 12. உத்திரம் – ஸ்ரீ மகாலெட்சுமி 13. ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி 14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார் 15. சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி 16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான். 17. அனுசம் - ஸ்ரீ லெட்சுமி நாராயணர். 18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்) 19. மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர் 20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்) 21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான். 22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு பெருமான்) 23. அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணு பெருமான்...

மந்திர சித்தி :-

” மந்திர சித்தி பெறுவது எப்படி ?” மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில் தான் இருக்கிறது. லட்சக்கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சிலவழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர். எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது. சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது. உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு...

தேமல்...! சுலபமா குணமாக்க :-

தேமல்...! சுலபமா குணமாக்க வழி இதோ! தேமல் வலி இல்லாத நோய் தான் என்றாலும் அழகை கெடுத்து தன்னம்பிக்கையை குறைத்துவிடும். அதனை போக்க இலகுவான வழி உள்ளது. தொட்டால் சுருங்கி இலையை அரைத்து துணியினுள் இட்டு அதனை நன்கு பிளிந்து வரும் சாற்றை தினமும் காலையும் மலையும் தேமலின் மீது பூசி வர ஐந்து நாட்களில் தேமல் மறையும். தினமும் புதிய இலைகளை பிளிந்து பயன்படுத்துதல் நல்லது. சாற்றை பிளிந்து அதனை சேமித்து மறுநாள் பாவிப்பதை தவிர்ப்பது நல்லது. தொட்டால் சினுங்கி பற்றி ஓர் குறிப்பு உலகத்தில் முதல் முதலில் இந்த தொட்டா சிணுங்கி தாவரம் South America and Central America, ஆகிய நாடுகளில் காணப்பட்டது . தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில மருந்து வகை மூலிகைகளில் இந்த தாவரமும் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்து இருக்கிறது தேமல் மறைய இன்னும் சில குறிப்புகள்...!!! · முகம் மற்றும் உடலெங்கும் தேமல் பரவியிருப்பவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள பகுதியில் பூசிவந்தால் தேமல் மறைந்து முகம் மற்றும் சருமம் பொலிவுறும். · பூவரச மரத்தின் பழுப்பு (முற்றிய) இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெய...

செல்வத்தை அள்ளித்தரும் பொங்கு சனி ஆலயம்:-

செல்வத்தை அள்ளித்தரும் பொங்கு சனி ஆலயம். ------------------------------------------------------------------------------ சனியை போல் கொடுப்பாரும் இல்லை,கெடுப்பாரும் இல்லை என ஒரு சொற்றொடர் உண்டு.நாம் வேண்டினால் நமக்கு செல்வத்தை அள்ளி அள்ளி கொடுக்கும் ஒரு ஆல்யம் உண்டு தெரியுமா?அதுதான்“திருக்கொள்ளிக்காடுஅக்கினீஸ்வரர்”ஆலயம். ”கொள்ளி”என்றால் நெருப்பு அந்த நெருப்பாகிய “அக்னி”வழிபட்ட தலம் இது.இந்த திருத்தலத்தில் மூலவர் அகினீஸ்வரராக இருந்தாலும் அந்த கோயில் வீற்றியிருக்கும் சனீஸ்வர பகவ்ான் மிகவும் தன்த்தை கொடுக்க கூடியவர். பொதுவாக, ஆலயங்களில் சனி பகவான் கையில் சூலம், வில், அம்பு என்று ஏதேனும் ஆயுதம் இருக்கும். ஆனால் இத்தலத்து சனி பகவானின் கைகளில் எந்த ஆயுதமும் கிடையாது. குபேரேன் வைத்திருப்பதுபோல் வலது மேல் கரத்தில் ஏர்கலப்பைத் தாங்கி அருள்பாலிக்கும் கடவுளாக, அனுக்கிரக மூர்த்தியாக விளங்குகிறார். இங்கு சனி பகவான் இங்கு மகாலட்சுமி ஸ்தானத்தில் அமர்ந்து சகல செல்வங்களையும் அளிக்கிறார். தம்மை நம்பி வழிபடுவோருக்கு தன பாக்கியத்தை அள்ளித் தருபவர் இவர். திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்ட நளனுக்கு சனி தோஷம் ...

மூலிகை சாப நிவர்த்தி:-

மூலிகை சாப நிவர்த்தி மூலிகை எடுக்க உரிய நாளில் மூலிகை இருக்கும் இடத்திற்கு சென்று மூலிகையை சுற்றி உள்ள இடத்தை சுத்தம் செய்து அதன்பின் அந்த இடத்தை கோமியம் அல்லது மஞ்சள் நீர் தெளிக்கவும். பின் தேங்காய், பழம், ஊதுபத்தி வெற்றிலை பாக்கு, சூடம், சாம்பிராணி இவைகளை வைத்து ஒரு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பின் விக்னம் நீக்கும் வினாயகரை மனமாற துதித்து பின் எந்த காரியத்திற்காக மூலிகை எடுக்கிறோமோ அதற்குறிய திசை பார்த்து அமர்ந்து கன்னி நூல் [மஞ்சள் நிற நூல்] காப்புகட்டி தேங்காய் உடைத்து சாம்பிராணி தூபம் தீபம் காட்டி எலுமிச்சை காவு கொடுத்து பொங்கல் நைவேத்யம் வைத்து *"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், ஐம் க்லீம் ஸெளம், ஸர்வ மூலி சாபம் நாஸய நாஸய சித்தர் சாபம் நாஸய நாஸய, தேவ முனி அசுர முனி சாபம் நாஸய நாஸய ஹூம் பட் ஸ்வாஹா*- என 108 உரு சொல்லியும், *சிங்வங்சிவயநம சங்வங் சரஹணபவ* - என்று ஒரு முறை சொல்லி பின் இரும்பு ஆயுதங்கள் படாமலும், சுண்டு விரல்களும், நகங்கள் பத்தும் படாமலும் இலையை கிள்ளுவதோ செடியை பிடுங்குவதோ எப்படி செய்தாலும் பலிக்கும். இது என் அனுபவ ரீதியில் கைகண்டது. *மூலிகை பறிக்க உகந்த கிழமைகள் ********...

பூவரசு காய கற்ப மூலிகை.:-

பூவரசு:- பூவரசு காய கற்ப மூலிகை. செதில் செதிலாக உதிரக்கூடிய சொரியாசிஸ் நோய்க்கு, ஞாபகமறதி நோய்க்கும் , பூவரசம்பட்டை மிக சிறந்த மருந்தாகும். முற்றிய மரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதை வாயில் வைத்துக் கொப்புளித்து உள்ளுக்குள் விழுங்கி வந்தால் உதட்டில் வரக்கூடிய வெண்தேமல் சரியாகும். பூவரசம்பட்டையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் கழுவி வர சர்க்கரை நோயால் ஏற்ப்பட்ட புண்கள் ஆறும். பூவரசு இலைகளை அரைத்து வதக்கி மூட்டுகளில்  கட்ட வீக்கம் குறையும். இதன் பழுப்பு இலையை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து உடலில் பூசிவர  சொறிசிரங்கு, கரப்பான்,ஊரல், அரிப்பு குணமாகும். பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பரங்கிப் பட்டை சேர்த்து செய்த சூரணத்தை 10கிராம் அளவு எடுத்து, பசு வெண்ணெயில் காலை,மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வர  நாள்பட்ட தொழு நோய் தீரும்.மருந்தை எடுத்துக்கொள்ளும் போது உணவில்  உப்பை நீக்க வேண்டும். பூவரசின் முதிர்ந்த பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றினை அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். தினமும்  கொப்பளித்து வர வெண்குஷ்ட ...