சுப முகூர்த்த நிர்ணய விதிகள்-

சுப முகூர்த்த நிர்ணய விதிகள்-


சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம்

செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என கால

விதானம் எனும் நூல் கூறுகிறது.


1.உல்கா:

சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா

எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது.


2.பூகம்பம்:

சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம்

எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது.


3.உபாகம்:

சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று

நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள்.


4.குளிகன்(அ)மாந்தி:

ஒவ்வொரு நாளிலும் குளிகன் அல்லது மாந்தி உதயமாகும் நேரத்திற்குறிய

லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.


5.சஷ்டாஷ்டம அந்திய இந்து:

முகூர்த்த லக்னத்திற்கு 6-8-12-ல் சந்திரன் இருக்கக்கூடிய காலம்

முகூர்த்தத்திற்கு ஆகாது.


6.அசத் திருஷ்டம்:

முகூர்த்தம் வைத்துள்ள நேரத்திற்கு உரிய லக்னத்தை பாபக்கிரகங்களான

சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் பார்க்கக்கூடாது.அவ்வாறு

பாபக்கிரகங்கள் பார்க்கும் லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.


7.அசத் ஆரூடம்:

பாபக்கிரகங்கள் அமர்ந்துள்ள ராசியில் முகூர்த்த லக்னம் அமைக்கக்கூடாது.


8.அசத் விமுக்தம்:

பாபக்கிரகங்களாகிய சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர்

அமர்ந்திருந்து பெயர்ச்சியான ராசியில் முகூர்த்த லக்னம்

வைக்கக்கூடாது.எனினும் இந்த ராசியில் சந்திரன் அமர்ந்திருக்குமானால் அந்த

தோஷம் பரிகாரமடைகிறது.


9.சித த்ருக்:

சுக்கிரன் பார்க்கும் ராசியை முகூர்த்த லக்னமாக அமைப்பது தோஷம்.ஆயினும்

சாந்தி முகூர்த்தத்திற்கு இந்த விதி பொருந்தாது.


10.சந்தியா காலம்:

சூரிய உதயத்திற்கு முன் இரண்டு நாழிகையும்(48 நிமிஷம்),சூரிய அஸ்தமனம்

அடைந்த பின் இரண்டு நாழிகையும் சந்தியா காலம் எனப்படும்.drkrஇதில் சுப

முகூர்த்தம் வைக்கக்கூடாது.


11.கண்டாந்தம்:

அஸ்வினி,மகம்,மூலம் ஆகிய நட்சத்திரங்களின் முதல் பாதமும்

ஆயில்யம்,கேட்டை,ரேவதி ஆகிய நட்சத்திரங்களின் நான்காம் பாதமும்

கண்டாந்தமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைக்கக்கூடாது.


12.உஷ்ணம்:

பின்வரும் நட்சத்திரங்கள் தொடங்கியது முதல் அதில் கொடுக்கப்பட்டுள்ள

நாழிகை வரை உஷ்ண காலமாகும்.இதில் சுப முகூர்த்தம் வைப்பது தோஷமாகும்.


A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)

B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)

C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)

D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)

A.அஸ்வினி,ரோகிணி,புனர்பூசம்,மகம்,ஹஸ்தம்(7.30 to 15)

B.பரணி,மிருகசீர்ஷம்,பூசம்,பூரம்,சித்திரை(55 to 60)

C.கிருத்திகை,திருவாதிரை,ஆயில்யம்,உத்திரம்,சுவாதி(21 to 30)

D.விசாகம்,மூலம்,திருவோணம்,பூரட்டாதி(0 to 6)

E.அனுஷம்,பூராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி(52 TO 60)

F.கேட்டை,உத்திராடம்,சதயம்,ரேவதி(20 TO 30)


13.விஷம்:

தியாஜ்ஜிய காலமே விஷம் எனப்படும்.இதிலும் சுப முகூர்த்தம் கூடாது.


14.ஸ்திர கரணம்:

சகுனி,சதுஷ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய நான்கும் ஸ்திர

கரணங்களாகும்.இதிலும் முகூர்த்தம் கூடாது.


15.ரிக்தை:

சதுர்த்தி,நவமி,சதுர்தசி இவை ரிக்தை எனப்படும்.இதுவும் விலக்கத்தக்கதே

 

16.அஷ்டமி:

அஷ்டமியிலும் முகூர்த்தம் கூடாது.தேய்பிறை அஷ்டமி சுபம் என்பது சிலர் கருத்து.


17.லாடம்:

சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் வரை எண்ணி வந்த

தொகையை பூராடம் முதல் எண்ணினால் கிடைக்கும் நட்சத்திரம் எதுவோ அதுவே லாட

நட்சத்திரமாகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.

18.ஏகார்க்களம்:

அன்றைய சூரிய ஸ்புடத்தை 360 பாகையிலிருந்து கழித்து வரும் ஸ்புடத்திற்கு

உதய நட்சத்திரத்திலிருந்து 1,2,7,10,11,14,16,18,20 ஆகிய நட்சத்திரங்கள்

ஏகார்க்களம் ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.

19.வைதிருதம்:

சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 14 வது நட்சத்திரம் வைதிருதம்

ஆகும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.

20.அஹிசிரசு:

வியதீபாத யோகத்தின் பிற்பகுதி அஹிசிரசு எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.

21.விஷ்டி:

வளர்பிறை அஷ்டமி,ஏகாதசியில் 6 முதல் 12 நாழிகை வரையிலும் பௌர்ணமியில்

18முதல் 24 நாழிகை வரையிலும் சதுர்தசியில் 24முதல் 30 நாழிகை வரையிலும்,

தேய்பிறை திருதியையில் 30முதல் 36 நாழிகை வரையிலும் சப்தமியில் 12முதல்

18 நாழிகை வரையிலும் தசமியில் 42முதல் 48 நாழிகை வரையிலும் சதுர்தசியில்

முதல் 6 நாழிகை வரையும் விஷ்டி எனப்படும்.இதிலும் சுபத்தை விலக்கவும்.

1.அம்ஹஸ்பதி:

ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் ஏற்படுமாயின் அது அம்ஹஸ்பதி

எனப்படும்.இதனை அதிமாதம் என்றும் சொல்லுவர்.இந்த மாதத்தில் முகூர்த்தம்

செய்யக்கூடாது.

ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.

2.மலமாதம்:

ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் ஏற்பட்டால் அது மலமாசம் எனப்படும்.இந்த

மாசத்திலும் சுப முகூர்த்தம் செய்யக்கூடாது.

ஆனால் சித்திரை,வைகாசி மாதங்களுக்கு இந்த தோஷம் இல்லை.இதுபோல்இன்னும்விலக்குண்டு

3.சமசர்ப்பம்:

அமாவாசையே நேரிடாத மாதம் சமசர்ப்பம் எனப்படும்.இந்த மாதத்திலும் சுப

முகூர்த்தம் கூடாது.

4.திர்சியதாஹி குரு சிதயோஹோ:

சங்கவ காலமென்று சொல்லக்கூடிய சூரியன் உதித்து 6முதல் 12நாழிகைக்குள்

குரு,சுக்கிரர் தோன்றும் காலம் முகூர்த்தத்திற்கு கூடாது.

5.குரு,சுக்கிர மௌட்யம்:


குருவும்,சுக்கிரனும் அஸ்தமனம் அடைந்துள்ள காலம் சுப முகூர்த்தம்

வைக்கக்கூடாது.(ஒன்று அஸ்தமனமாகி மற்றது நட்பு,ஆட்சி,உச்சம்

பெற்றிருந்தால் அது தோஷமில்லை)


6.குரு சுக்கிர மிதோ திருஷ்டி:

குருவும் சுக்கிரனும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துகொள்ளும் காலம்

முகூர்த்தத்திற்கு உகந்த காலம் அல்ல.மேலும்

கீழ்கண்ட கிழமைகளுக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள திதி,நட்சத்திரங்கள்

அமையுமானால் அந்த நாளில் திருமணம் முதலிய சுப காரியங்களை செய்யக்கூடாது.


A.ஞாயிறு-பரணி

திங்கள்-சித்திரை

செவ்வாய்-உத்திராடம்

புதன்-அவிட்டம்

வியாழன்-கேட்டை

வெள்ளி-பூராடம்

சனி-ரேவதி

B.ஞாயிறு-பஞ்சமி&கிருத்திகை

திங்கள்-த்விதீயை&சித்திரை

செவ்வாய்-பௌர்ணமி&ரோகினி

புதன்-சப்தமி&பரணி

வியாழன்-த்ரயோதசி&அனுஷம்

வெள்ளி-ஷஷ்டி&திருவோணம்

சனி-அஷ்டமி&ரேவதி

C.ஞாயிறு-பஞ்சமி&அஸ்தம்

திங்கள்-ஷஷ்டி&திருவோணம்

செவ்வாய்-சப்தமி&அஸ்வினி

புதன்-அஷ்டமி&அனுஷம்

வியாழன்-திருதீயை&பூசம்

வெள்ளி-நவமி&ரேவதி

சனி-ஏகாதசி&ரோகினி

D.ஞாயிறு-சதுர்த்தி

திங்கள்-சஷ்டி

செவ்வாய்-சப்தமி

புதன்-த்விதீயை

வியாழன்-அஷ்டமி

வெள்ளி-நவமி

சனி-சப்தமி .. .

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-