Posts

Showing posts from April, 2019

ஜோதிடத்தில்‌ பஞ்ச பூத தத்துவம்.

Image
ஜோதிடத்தில்‌ பஞ்ச பூத தத்துவம்.  ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍ வேதத்தில் பஞ்ச பூதங்களை பற்றிய விஷயங்கள் நிறைய உள்ளது.  ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍ நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாசம் என்பவை பஞ்ச பூதம் என்பது நாம் அறிந்ததே. இதில் இந்த வரிசை முக்கிய இடம் பெறுகிறது.  ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍ இவ்வுலகில் கண் காது முதலியவைகளுக்குள் அகப்படும் விஷயங்கள் கொஞ்சந்தான். அகப்படாதவை அதிகமாக இருக்கின்றன. அவைகள் அநுமானப் பிரமாணத்தில் அகப்படும் என வேதம் சொல்கிறது.  ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍ வேதத்தில் இவ்வுலகில் உள்ள அனைத்து பொருட்களையும் பதார்த்தங்கள் என கூறுகின்றனர். பதார்த்தங்களை ஏழு விதமாகப் பிரித்திருக்கிறார்கள்.  ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍ ஏழு பதார்த்தங்களானது திரவியம், குணம், கர்மம், ஸாமான்யம், விசேஷம், ஸமவாயம், அபாவம் ( இல்லாதது) என்பவை ஆகும்.  ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ...

பிரேத தோசம் :

Image
பிரேத தோசம் --------------------- ஆண்,பெண் இருபாலார் ஜாதகத்திலும் சந்திரன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் ராகு நின்றால் அந்த ஜாதகத்திற்கு பிரேத தோசம் உண்டு. சந்திரன் சோத்துப்பிண்டத்தையும், ராகு வாயையும் குறிக்கும். இவர்கள் இறந்து போன உறவினர் ஒருவருக்கோ,பலருக்கோ பிண்டம் வைக்காததால், அந்த ஆத்மாக்கள் பிரேதமாக மாறி ஜாதகருக்கு இந்த ஜென்மத்தில் மன ரீதியான ,உடல் ரீதியான பிரச்சினைகளை செய்வார்கள்.அல்லது இவர்கள் குடும்பத்தில் யாராவது ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டிருப்பாள். அவளுக்கு தர்ப்பணம் எதுவும் யாரும் செய்திருக்கமாட்டார்கள். அவள் பிரேதமாக மாறி ஜாதகருக்கு தொல்லை கொடுப்பாள். இத்தகைய ஜாதகர்களின் வீட்டில் இதனால் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள். இதற்கு பரிகாரமாக ஒரு அமாவாசை நாளில் ஒரு ஏழைப்பெண்ணுக்கு அன்னதானம்,வஸ்திர தானம் செய்ய தோசம் விலகும்.

சுப முகூர்த்த நிர்ணய விதிகள்-

Image
சுப முகூர்த்த நிர்ணய விதிகள்- சுப நிகழ்வுகளுக்கான சுப முகூர்த்தத்தை நிர்ணயம் செய்யும்போது கீழ்கண்ட 21 விதிகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும் என கால விதானம் எனும் நூல் கூறுகிறது. 1.உல்கா: சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 19 வது நட்சத்திரம் உல்கா எனப்படும்.இதில் சுப முகூர்த்தம் கூடாது. 2.பூகம்பம்: சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து 9வது நட்சத்திரம் பூகம்பம் எனப்படும்.இதுவும் சுபமுகூர்த்தத்திற்கு ஆகாது. 3.உபாகம்: சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் ஏற்படும் நாளும் அதற்கு முன் மூன்று நாட்களும்,பின் மூன்று நாட்களும் சுப முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள். 4.குளிகன்(அ)மாந்தி: ஒவ்வொரு நாளிலும் குளிகன் அல்லது மாந்தி உதயமாகும் நேரத்திற்குறிய லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது. 5.சஷ்டாஷ்டம அந்திய இந்து: முகூர்த்த லக்னத்திற்கு 6-8-12-ல் சந்திரன் இருக்கக்கூடிய காலம் முகூர்த்தத்திற்கு ஆகாது. 6.அசத் திருஷ்டம்: முகூர்த்தம் வைத்துள்ள நேரத்திற்கு உரிய லக்னத்தை பாபக்கிரகங்களான சூரியன்,செவ்வாய்,சனி,ராகு,கேது ஆகியோர் பார்க்கக்கூடாது.அவ்வாறு பாபக்கிரகங்கள் பார்க்கும் லக்னத்தில் முகூர்த்தம் வைக்கக்கூடாது. 7.அசத் ஆரூ...

குளிகை என்றால் என்ன..?

Image
*குளிகை என்றால் என்ன..?* *தொட்டதைத் துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..?* *இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான்...* *யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம்* *கேட்டுக் கொண்ட இராவணன் அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்...* *அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்..”என்று யோசனை கூறினார்...* *உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன்...* *ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர்...* *இந்த யோசனையைச் சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர்...* *தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கப்போகும் தீமைகளை எண்ணிக் கவலை கொண்டனர்...* *அதே நேரத...