Posts

Showing posts from November, 2015

முகூர்த்த நாள் முக்கியத்துவம்

Image
முகூர்த்த நாள் முக்கியத்துவம் திருமணம் செய்வதற்கு ஒரு ஆணும் பெண்ணும் எப்படி அவசியமோ, அதே போலத் தான் முகூர்த்த நாள் நிர்ணயிப்பதும். முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேர அளவுள்ள காலமாகும். ஒரு குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம், புகழ், ஆயுள் போன்றவற்றைப் பார்க்க எப்படி குழந்தையின் ஜனன ஜாதகம் அவசியமோ அதே போல முகூர்த்த நாள் மற்றும் நேரம் நிர்ணயம் அவசியமாகிறது. கணவன், மனைவி பந்தம், சமுதாயத்தில்அவர்கள் வாழ்க்கை சிறத்தல், . இருவருக்கும் உள்ள அன்னியோன்யம், குழந்தைப்பேறு முதலிய பல நிகழ்வுகள் நல்லபடியாக அமைவதற்கு முகூர்த்த நாள் மற்றும் நேர நிர்ணயம் அவசியமாகிறது . மணமக்களின் ஜாதகங்களில் ஒரு சில குறைகள் இருந்தாலும் இந்த முகூர்த்த நேர லக்னம் நன்கு அமையுமானால் அந்தக் குறைகள் தெரியாமல் போகிறது. நாள் செய்வதை நல்லோரும் செய்யார். நல்ல நாள் பார்த்து எந்தவொரு வேலையையும் செய்தோம் என்றால் அந்த வேலையை சிறந்த முறையில் நவக்கிரகங்கள் நமக்கு அமைத்துக் கொடுத்துவிடும். மணமக்கள் இருவர் ஜாதகங் களையும் ஒப்பிட்டுப் பார்த்து இவர்களுக்கு திருமணம் செய்விக்கலாம் என்று ஜோதிடர்கள் தெரிவித்த பின்பு, இருவர் வீட்டில் உள்ள அனை...

தீபங்கள் பலவிதம்

Image
தீபங்கள் பலவிதம் திருக்கார்த்திகை அன்று இல்லங்களில் வரிசை யாக தீப அலங்காரம் செய்வர். அதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். இந்த விளக்குகளில் பலவிதங்கள் உண்டு  என்று ஞான நூல்கள்  கூறுகின்றன. திருக்கார்த்திகை அன்று வீட்டில் குறைந்த பட்சம் இருபத்தேழு தீபங்கள் ஏற்ற வேண்டும்’ என்று நம் முன்னோர்கள்  வகுத்திருக்கிறார்கள். ஆகாசத்திற்கு உரிய இடமான முற்றத்தில் நான்கு விளக்குகளும், சமையல் அறையில் ஒன்றும், நடையில் இரண்டும், பின்கட்டில் நான்கும்,  திண்ணையில் நான்கும் மாடக்குழியில் இரண்டும், நிலைப்படிக்கு இரண்டும், சுவாமி படத்துக்குக்கீழே இரண்டும், வெளியே யமதீபம் ஒன்றும், திருக்கோலமிட்ட வாசலில் ஐந்தும் என விளக்கு ஏற்ற வேண்டும். ஆனால், இந்தக்காலத்தில் வீட்டின் அமைப்பு தனிப்பட்ட முறையில் இருப்பதாலும், மாடி வீடு  மற்றும் அபார்ட்மென்டில் வசிப்பதாலும் மேற்சொன்ன முறைப்படி விளக்குகள் ஏற் றமுடியாததால், வசதிக்கு ஏற்ப இருபத்தேழு தீபங்களை வரிசையாக ஏற்றி  பலன் பெறலாம். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் தீபம் ஏற்றியதும் வணங்க வேண்டும். தீப ஒளியிலிருந்து வெளிப்படும் புகையால் கிரு...

எண் ஜோதிடம் ===============

Image
எண் ஜோதிடம் =============== உங்கள் பிறந்த தேதி 1 = எங்கும் ,எதிலும் தாங்கள் தான் முதல் என்ற உணர்வு இருக்கும் ,உடல் சூடு சற்று அதிகம் ,அவசரபுத்தி சிவ வழிபாடு ஆர்வம் ,தான் இல்லை எனில் பூமி சுற்றுவது நின்று விடும் என்பார் ,வீட்டில் மூத்த குழந்தையாக இருக்கும் வாய்ப்பு அதிகம் அடிக்கடி உடல் மனம் சோர்வு அடைவார் 2 = தனித்து இயங்கும் ஆற்றல் இருக்காது ,எங்கு சென்றாலும் துணைக்கு ஒருவர் வேண்டும் , குளிர்சியான உடல் குரல் இனிமையாக இருக்கும் ,தாய் பாசம் அதிகம் ,அம்மன் வழிபாடு செய்வார் ,காரண காரியம் கூறுவதில் திறமைசாலி ,சில நாட்கள் அதிக சந்தோஷம் ,சில நாட்கள் அதித துக்கம் என இருப்பார் 3 = நான் சொல்லி கொடுத்தேன் அவன் பணக்காரன் ஆகி விட்டான் என சொல்வார்,பிறரை வாழ்க்கையில் ஏற்றி விடும் இடத்தில் இருபார் ,தான் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார் ,இவரிடம் அறிவுரை கேட்டவன் வெற்றி அடைவான் ,குரு போன்ற அறிவுரை அள்ளி அள்ளி வழங்குவார் . 4= இரவில் படுக்கும் போது கவலையோடு படுப்பார் ,காலையில் பெரும் ஆற்றல் உடன் எழுவார் ,எங்கு இருந்து அந்த ஆற்றல் வந்தது என்று அவருக்கே தெரியாது ,அடிக்கடி நண்பர்களை மாற்றுவார் ,இவர் ப...

அமாவாசையானது

Image
சாதாரணமான அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது. திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதர் தர்ப்பணம் பனிரெண்டு ஆண்டுகள் பிதர்திருப்தி ஏற்படுத்தும். அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும். மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால் அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால் அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மனமகிழ்ச்சியைத்தரும். மாதம் அமாவாசை அவிட்டம் நட்சத்திரம் வரும் நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் பதினாயிரம் ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும். மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் அப்போது அந்த நன்னாளில் சிரர்த்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சு...

நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம்

Image
நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது. புனித தீர்த்தம் 1 - ஏலம், 2 - இலவங்கம், 3 - வால்மிளகு, 4 - ஜாதிப்பத்திரி, 5 - பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும். முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும். இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும். இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம். இருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசக...

எதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம் !

Image
எதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம் ! எப்போதும் தடங்கல், எந்த காரியங்களும் முடிவு வரை வந்து பின்பு நடக்காமல் போதல், எப்போதும் மனக்கவலை, தோல்வி பற்றியே எப்போதும் சிந்தனை போன்ற எதிர் மறை சக்திகளை கீழ்க்கண்ட பரிகாரம் மூலம் நம் உடலில் இருந்து விரட்டி அடிக்கலாம். இதை முதல் முதல் ஆரம்பிக்கும் நாள் அமாவாசை நாளாக இருத்தல் நலம். பின்பு தேவைப்படும் போதெல்லாம் செய்து கொள்ளலாம். தேவை : 2 கோழி முட்டை உடைகளை முழுதும் கலைந்து குளியல் அறையில் கிழக்கு நோக்கி நின்று கொள்ளவும். பின்பு 1 முட்டையை எடுத்து அதை ராக் சால்ட் அல்லது கல் உப்பு நீரால் கழுவி கொள்ளவும்.பின்பு சிறிது எலுமிச்சை நீரால் கழுவவும். பின்பு கண்களை மூடி கொண்டு பிரபஞ்சத்தை உங்கள் எதிர் மறை சக்திகள் அனைத்தும் விலக வேண்டி கொள்ளவும். பின்பு உச்சந்‌தலையில் ஆரம்பித்து உடல் முழுதும் மெதுவாக ஒரு இடம் விடாமல் முட்டையால் தடவ ஆரம்பிக்கவும். உடலில் உள்ள எதிர் மறை சக்திகள் அனைத்தும் முட்டை சுவீகரித்து கொள்ளும். உடலில் ஒரு இடம் விடாமல் தடவி கொள்ளவும்-ஏதேனும் இடத்தில் வலி இருந்தால் அந்த இடத்தை பிரத்யேகமாக கவனித்து தடவி கொள்ளவும். ...

அமானுஷ்ய பரிகாரங்கள்!!!

Image
அமானுஷ்ய பரிகாரங்கள்!!! (1) வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது கூடவே சிறிது காகித பூ எடுத்து செல்ல விபத்துக்கள் ஏற்படாது (2)காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் பெருகும் (3) இடது கை கீழே இருக்கும் படி படுத்துறங்க ஆயுள் விருத்தியாகும் (4) வீட்டை சுற்றி நீரோட்டங்கள்இருந்தாலோ செயற்கையாகஅமைத்து கொண்டாலோ பண புழக்கம் உடனடியாக உயரும் (5) காரணமில்லாமல் இரவில் குழந்தைகள் தூங்காமல் அழுது கொண்டே இருந்தால் அறையில் கல் உப்பு கலந்த நீரை வைக்க, குழந்தை நன்றாக தூங்கும் (6) சமையலறையும், படுக்கையரையும் அருகருகே இருக்கும் படி அமைத்து கொண்டால் தம்பதியர் ஒற்றுமை ஓங்கும். இல்லறம் இனிக்கும். (7) துர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்க விட வேண்டும் பண வரவிற்கு மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உண்டாகும். தன அகர்ஷணம் செய்யும் சக்தி மிகுந்தது நொச்சியின் வேர். ஒரு மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம் கண்திருஷ்டி ப...

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்தர்களும், ஊர்களும். .

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்தர்களும், ஊர்களும். . * அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர், பழனி . * பரணி(மேஷம்) = ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிண...

கிரககாரகங்கள்

கிரககாரகங்கள் சூரியன் :           கிரகம் என்ற குடும்பத்திற்கு சூரியன் தான் தந்தை, எனவே ஜாதகத்தில் ஜாதகரின் தந்தையை பற்றியும் தந்தை வர்க்கத்தினரையும் சூரியன் குற...