Posts

அமாவாசை பரிகாரம் :-

*அமாவாசை தினத்தில் பெண்கள் 1 சொம்பு தண்ணீரை வீட்டில் இப்படி வைத்தால் போதும். முன்னோர்களுக்கு இருக்கும் எப்பேர்பட்ட கோபமும் தணிந்து, அவர்களுடைய ஆசீர்வாதத்தை பெற்று விடலாமே!*  *நம்முடைய வீட்டில் கஷ்டங்கள் வருவதற்கு முன்னோர்களுடைய கோபமும் ஒரு காரணம் தான். முன்னோர்களுடைய கோபம் என்றால், அவர்கள் மனம் வருந்தி என்றைக்குமே நம்மை திட்டி சாபம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நம்மை மறந்து விட்டார்களே என்று அவர்களுடைய மனதில் சிறியதாக ஒரு ஏக்கம் இருந்தால் கூட, அந்த ஏக்கம் நமக்கு சாபமாக மாறி விடும். அது நம்மை மட்டுமல்லாமல் நமக்கு அடுத்து வரக்கூடிய, அடுத்த தலைமுறைகளையும் பாதிக்கும் அளவிற்கு இந்த சாபம் பொல்லாதது என்பது நம்முடைய முன்னோர்களின் கூற்று.*   *முன்னோர்களுக்கு நாம் செய்யும் கடமையை தவறாமல் செய்து வர வேண்டும். இதற்காகத்தான் அமாவாசை வழிபாடு, அவர்கள் இறந்த திதி அன்று தர்ப்பணம் கொடுக்கும் வழிபாடு என்று முறையாக பின்பற்ற வேண்டும். ஆனால் நம்முடைய சாஸ்திரத்தில் தான் எப்போதுமே ஆண்களுக்கு என்று ஒரு தனி கட்டுப்பாடு, பெண்களுக்கு என்று ஒரு தனி கட்டுப்பாடு இருக்கின்றதே! ஆணும் பெண்ணும் சமம் என்று எவ்...

மோட்ச தீபம் ஏற்றும் முறை:-

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: கேள்வி: மோட்ச தீபம் ஏற்றும் வழி: தேவையானவை: 1. வாழை இலை 2. பச்சை கற்பூரம் 3. சீரகம் 4. பருத்தி கொட்டை 5. கல் உப்பு 6. மிளகு 7. நவ தானியம் 8. கோதுமை 9. நெல் (அவிக்காதது) 10. முழு துவரை 11. முழு பச்சை பயறு 12. கொண்டை கடலை 13. மஞ்சள் (ஹைபிரிட் இல்லாதது) 14. முழு வெள்ளை மொச்சை 15. கருப்பு எள் 16. முழு கொள்ளு 17. முழு கருப்பு உளுந்து 18. விளக்கு (200 மில்லி கொள்ளளவு) - 42 விளக்குகள் 19. தூய பருத்தி துணி (கை குட்டை அளவு) - 21 20. சுத்தமான நெய் விளக்கு ஏற்றும் முறை: எல்லா பொருள்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். துணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நினைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை ஆறு மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும். மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் ஏற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும். எந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந...

பாடல் பெற்ற ஸ்தலங்கள்:-

நிச்சயம் நம் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!  *தேவாரம் பாடல்  பெற்ற தலங்கள்*  1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44. 2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள்           --- 52. 3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                   --- 13. 4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                     ----  2. 5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள்                        ---- 111. 6. அப்...

விவசாய ஜோதிடம்:-

சுந்தரானந்தர் கூறும் விவசாய ஜோதிடம்:- 1.நிலங்கள் வாங்க நல்ல முகூர்த்தம்: புதன் கிழமைகளில் கடக லக்னத்தில் பரணி திருவோணம் அஸ்தம் அனுஷம் நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் நிலம் வாங்க மேன்மேலும் விருத்தியாகும். 2.நிலம் உழுவதற்கான நல்ல முகூர்த்தம்: திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில் வளர்பிறை துதியை பஞ்சமி தசமி திரயோதசி திரிதியை சப்தமி ஏகாதசி திதிகளில் புனர்பூசம் பூசம் அனுசம் மூலம் அஸ்தம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி ரேவதி ரோகிணி நட்சத்திரங்களில் கன்னி மிதுனம் கடகம் ரிஷபம் தனுசு மீனம் துலாம் சிம்ம லக்கினங்களில் பாதாள யோகினி இல்லாத நாட்களில் கலப்பை கொண்டு ஏர் உழுவதற்கு நல்ல முகூர்த்தமாம். 3.விதை விதைக்க நல்ல முகூர்த்தம்: திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில் துதியை திரிதியை பஞ்சமி திரயோதசி தசமி ஏகாதசி பௌர்ணமி திதிகளில் மூலம் ரோகிணி பூசம் உத்திரட்டாதி சதயம் திருவோணம் அஸ்தம் மகம் விசாகம் சுவாதி ரேவதி நட்சத்திரங்களில்  சிம்மம் ரிஷபம் மிதுனம் கும்பம் கடகம் துலாம் மகரம் மீனம் லக்கினங்களில்  விதை விதைக்க நல்ல முகூர்த்தமாம். 4.நாற்று நட நல்ல நாட்கள்: விதை விதைக்க சொன்ன முகூர்த்த நா...

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்:-

Image
அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர். பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர். கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர். ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர். மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம். திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர். புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம். பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர். ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர். மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வ...

மேல் நோக்கு, கீழ் நோக்கு நாள் :-

மேல் நோக்கு, கீழ் நோக்கு நாள் என்பதன் பொருள் தெரியுமா? தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா…? மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது. இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன. ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும்( ஊர்த்துவமுக ) நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.அதாவது, இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாட்கள். இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும். பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள், ( அதோமுக ) நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள். இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங...

நீங்களும் மருத்துவர் ஆகலாம்:-

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! • ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும். • உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும். • அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும். • பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும். • சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். • மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். • துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும். • மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும். • வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும். • பொடித்த படி...