பாடல் பெற்ற ஸ்தலங்கள்:-



நிச்சயம் நம் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!

 *தேவாரம் பாடல்  பெற்ற தலங்கள்* 

1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44.

2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள்           --- 52.

3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                   --- 13.

4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                     ----  2.

5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள்                        ---- 111.

6. அப்பர் மட்டும் பாடிய தல
  மொத்தம்              275.

 7. இவற்றுள்
மாணிக்கவாசகர் பாடிய தலங்கள்                             25

 *சிவஸ்தலத்   தொகுதிகள்* 

       *வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்*         

1.            அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்

1. திருக்கண்டியூர்          ---- பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர்         ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை             ---- திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர்          ---  தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி            ----  சலந்தராசுரனைச் சங்கரிதத்து
6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது
7. திருக்குறுக்கை         --- காமனை எரித்தது
8. திருக்கடவூர்           ---- யமனை உதைத்தது

2.     *பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்* 

1. கேதாரம் (இமயம்)         ---- கேதாரேஸ்வர்ர்
2. சோமநாதம் (குஜராத்)      ---- சோமநாதேஸ்வரர்
3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்
4. விசுவநாதமே (காசி)       ---- விஸ்வநாதேசுவரர்
5. வைத்தியநாதம்  (மகாராஷ்டிரம்)  ---- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்)       ---- பீமநாதேசுவரர்
7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்)   ---- நாகநாதேசுவர்ர்
8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்)           --- த்ரயம்பகேசுவரர்
10. குசமேசம் (மகாராஷ்டிரம்)          ---- குஸ்ருணேச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராமேஸ்வரம்)        ---- இராமநாதேஸ்வரர்

     *முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்* 

1. திரு ஆரூர்          ---- பிறக்க முக்தி தருவது
2. சிதம்பரம்           ----- தரிசிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமலை  ---- நினைக்க முக்தி தருவது
4. காசி                ---- இறக்க முக்தி தருவது

 *பஞ்சபூத ஸ்தலங்கள்* 

1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம்    ---- பிருதிவி (நிலம்)
2. திரு ஆனைக்கா                   ----- அப்பு (நீர்)
3. திருவண்ணாமலை                ----- தேயு (தீ)
4. திருக்காளத்தி                      ----- வாயு (வளி)
5. சிதம்பரம்                          ---- ஆகாயம் (விசும்பு)

           *நடராஜருக்கான பஞ்ச சபைகள்* 

1. திருவாலங்காடு     --- இரத்தின சபை
2. சிதம்பரம்           --- கனகசபை (பொன்னம்பலம்)
3. மதுரை             --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி      --- தாமிர சபை
5, திருக்குற்றாலம்     --- சித்திர சபை

   ( *வியாக்ரபாதர் வழிபட்டவை)  புலியூர்கள்* 

1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர் டி
5. பெரும்புலியூர்

    *சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்* 

முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த *தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.* 

இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.

1. *திருஆரூர்*  -- வீதிலிடங்கள் --- அசபா நடனம்
2. *திருநள்ளாறு* -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்
3. *திருநாகைக்ரோணம்* --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்
4. *திருக்காறாயில்* --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
5. *திருக்கோளிலி*  -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
6. *திருவாய்மூர்*   ---- நீலவிடங்கர்  --- கமல நடனம்
7. *திருமறைக்காடு* --- புவனிலிடங்கர் --- கம்சபாத

       *சிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள்* 

1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர்  ---- *ஆனந்த தாண்டவம்* .

2. திரு ஆரூர்                       ---- *அசபா தாண்டவம்* .

3. மதுரை                           ---- *ஞானசுந்தர தாண்டவம்.* 

4. புக்கொளியூர்                     ----. *ஊர்த்துவ தாண்டவம்.* 

5. திருமுருகன் பூண்டி              ---- *பிரம தாண்டவம்* 

  *சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்* 

1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்

 *காசிக்கு ஈடான ஸ்தலங்கள்* 

1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்

   *நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்* 

1.  *நந்தி சங்கம தலம்*             --- கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்).

2.   *நந்தி விலகியிருந்த தலங்கள்*  ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி
(அப்பர், சம்பந்தருக்காக).

3.    *நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம்* --- திருவெண்பாக்கம்.

4. *நந்திதேவர் நின்ற திருக்கோலம் -* 
-- திருமாற்பேறு.

5.  *நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம்* --- திருமழபாடி.

6.            *திருக்கீழ்வேளூர்* – ஒரு பக்தையின் பொருட்டு.

7.  *திருநள்ளாறு* – ஒரு இடையனுக்காக

             
 *சப்த ஸ்தான* (ஏழூர் விழா)  தலங்கள்

1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.

   *திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்* 

1. *திருவோத்தூர்*    --- ஆதிகேசவப் பெருமாள்
2. *கச்சி ஏகம்பம்*    ---- நிலாத்துண்டப் பெருமாள்
3. *கொடிமாடச் செங்குன்றூர்* --- ஆதிகேசப் பெருமாள்
4. *சிதம்பரம்*       --- கோவிந்தராஜப் பெருமாள்
5. *திருநணா*       --- ஆதிகேசவப் பெருமாள்
6. *சிக்கல்*          --- கோலவாமனப் பெருமாள்
7. *திருநாவலூர்*    --- வரதராஜப் பெருமாள்
8. *திருநெல்வேலி*  --- நெல்லை கோவிந்தர்
9. *திருப்பழனம்*    --- கோவிந்தர்
10. *பாண்டிக் கொடுமுடி* --- அரங்கநாதர்
11. *திருப்பத்தூர்*     --- அரங்கநாதர்
12. *திருவக்கரை*     --- அரங்கநாதர

 *ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்* 

   *உட்கோயில்*                            கோயில்

1. *திருவாரூர்* அரநெறி                 ----   திருவாரூர்
2. *திருப்புகலூர்* வர்த்தமானீச்சுரம்       ---    திருப்புகலூர்
3. *மீயச்சூர்* இளங்கோயில்             ----  மீயச்சூர்

              *காயாரோகணத் தலங்கள்* 

1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்

       *மயானத் தலங்கள்* 

1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்

    *கைலாயத் தலங்கள்* 
தெட்சண கைலாசம்

1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)

    *பூலோக கைலாசம்* 

1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்

  *அழகிற் சிறந்த கோயில்கள்* 

1. *தேரழகு*     ---    திருவாரூர்
2. *வீதி அழகு*  ---    திருஇடை மருதூர்
3. *மதிலழகு*   ---    திருவிரிஞ்சை
4. *விளக்கழகு*  ---    வேதாரண்யம்
5. *கோபுரமழகு* --    திருக்குடந்தை
6. *கோயிலழகு* – காஞ்சி

 *பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு* 

1. *திருக்குற்றாலம்*  -- திருவனந்தல் சிறப்பு
2. *இராமேச்சுரம்*    --- காலை பூசை சிறப்பு
3. *திருஆனைக்கா*  --- மத்தியான பூசை சிறப்பு
4. *திரு ஆரூர்*     --- சாயுங்கால பூசை சிறப்பு
5. *மதுரை*         --- இராக்கால பூசை சிறப்பு
6. *சிதம்பரம்*       --- அர்த்தசாம பூசை சிறப்பு

 *திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்* 

குங்கிலியக்கலயர், 
முருகர், 
குலச்சிறை, 
அப்பூதி, 
நீலநக்கர், சிறுத்தொண்டர், 
நின்றசீர் நெடுமாறர், 
மங்கையர்க்கரசி, 
திருநீலகண்டயாழ்பாணர்.

 *நடராசர் அபிஷேக நாட்கள்* 

மார்கழி = ஆதிரை , 
சித்திரை = ஓணம், 
ஆனி = உத்திரம்.
 மாசி = ஆவணி
புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை.  ஏனைய மூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.

 *ஆயிரங்கால்  மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்* 

மதுரை, சிதம்பரம், இராமேஸ்வரம்.

 *ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள்* அமைந்து காணப்பெறும் ஒரே *தேவாரத் திருத்தலம்* 

 *திருநல்லூர்த்* திருத்தலம்.

 *அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்* 

“ *திருகண்டியூர் வீரட்டம்”* என்னும் திருத்தலத்தில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.

திருஞான சம்பந்தருக்காக *நந்தி விலகிய தலங்கள்* இரண்டு.

1. *திருப்பட்டீச்சரம்* , 
2. *திருப்பூந்துருத்தி* .

சிவன் சிறப்புத் *தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள்* ஆறு🙏

1.  *மயூர தாண்டவம்*  - மயிலாடுதுரை.

2. *அஞ்சிதபாத கரண தாண்டவம்-* செங்காட்டங்குடி.

3.   *கடிசம தாண்டவம்* - திருவக்கரை

4. *சதுர தாண்டவம்* - திருநல்நூர்.

5.  *சுந்தரத் தாண்டவம்-* கீழ்வேளூர்.

6. *லதா விருச்சிக தாண்டவம்-* திருமழபாடி

 *அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.* 

1. சம்பந்தர்,
 2 நாவுக்கரசர்,
 3. திருமூலர், 
4. நின்றசீர் நெடுமாறன், 
5. அப்பூதி, 
6. சோமாசிமாறர், 
7. மங்கையர்கரசி, 
8. நீலகண்ட யாழ்பாணர், 
9. மிழலைக்குறும்பர், 
10. கணநாதர், 
11. குலச்சிறை 
என 11 பேர் ஆவார்.

  *பெரிய கோபுரத் தலங்கள்* 

1. *திருவண்ணாமலை* 
2  *மதுரை* 
3. *தில்லை* 
4. *திருமுதுகுன்றம்* 
5. *திருச்செந்தூர்* 
6. *இராமேஸ்வரம்* 
7. *குடந்தை* 
8. *காளையார் கோவில்* 
9. *தென்காசி* 

 *மண்டபங்கள் சிறப்பு* 

1 *வேலூர்* - கல்யாண மண்டபம்
2 *கிருஷ்ணாபுரம்* - சபா மண்டபம்
பேரூர் -  கனக சபை
3 *தாரமங்கலம்* – குதிரை மண்டபம்
புகழ் பெற்றவை.

 மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.

 *யானை ஏறாத மாடக் கோயில்கள் சில* 

1.     *திருவானைக்காவல்* 
2.    *ஆக்கூர்* 
3.    *திருத்தேவூர்* 
4.    *திருக்கீழ்வேளூர்* 
5.    *சிக்கல்* 
6.    *வலிவலம்* 
7.   *அம்பர்மகாளம்* 
8.   *தண்டலை நீள் நெறி* 
9.   *திருநறையூர்* 
10. *பழையாரை* 
11. *திருமருகல்* 
12. *வைகல்மாடக்* கோயில்
13. *நன்னிலம்* (மதுவனம்)
14. *குடவாசல்* 
15. *புள்ளமங்கை* 
16. *திருத்தலைச்சங்காடு* 
17. *நல்லூர்* 
18. *திருநாலூர்* 
19. *திருச்சாய்க்காடு* 
20. *திருவக்கரை* 
21. *திருநாங்கூர்* 
22. *திருப்ராய்த்துறை* 
23. *ஆவுர்* 
24. *திருவெள்ளாறை* 
25. *திருவழுந்தூர்* 
26. *நாகப்பட்டினம்* 
27. *பெருவேளூர்* 
28. *கைச்சின்னம்* 
29. *சேங்கனூர்* இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….

🙏  *பெரிய லிங்கம்* 🙏

1 *கங்கை கொண்ட சோழபுரம்* – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்கு இலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும் பரிவட்டம் வேண்டும்.

 2. *திருப்புனவாயில்* – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம் பரிவட்டமும் தேவை.

 “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று ”என்பது பழமொழி.
            
🌷  *பெரிய நந்தி* 💥

1 *தஞ்சை* நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது.

 2. *லேபாட்சி வீரபத்திரர்* சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.

                 🌺  *புகழ்பெற்ற கோயில்கள்* 

1 *கோயில்* – சிதம்பரம்

 2  *பெரியகோயில்* - தஞ்சை.

3 *பூங்கோயில்* – திருவாரூர்.

4 *திருவெள்ளடை* - திருக்குருகாவூர்.

5. *ஏழிருக்கை* சாட்டியக்குடி

6. *ஆலக்கோயில்* -திருக்கச்சூர்.

 7. *கரக்கோயில்* - திருக்கடம்பூர்.

 8. *கொகுடிக் கோயில்* - திருப்பறியலூர்

9. *மணிமாடம்* - திருநறையூர்
            
10. *தூங்கானைமாடம்* - திருப்பெண்ணாடகம்
           
 11. *அயவந்தீச்சரம்* -திருச்சாத்தமங்கை.

 12. *சித்தீச் சுரம்* - திருநறையூர்

🙏 *நால்வர் இறையருளில் கலந்த தலங்கள்* 

1.            *திருஞானசம்பந்தர்* - ஆச்சாள் புரம்.

2.            *திருநாவுக்கரசர்* - திருப்புகலூர்.

3.            *சுந்தரர்* - திருவஞ்சைக்களம்.

4.            *மாணிக்கவாசகர்* – தில்லை

 *சந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்* 

1.   *மெய்கண்டார்* - திருப்பெண்ணாடகம்.

2. *அருள் நந்திதேவ நாயனார்* – திருத்துறையூர்.

3.   *மறை ஞான சம்பந்தர்* - பெண்ணாடகம்.

4.   *உமாபதி சிவம்* - சிதம்பரம்.

 *சந்தானக்குரவர் முக்தி அடைந்த தலங்கள்* 

1. *மெய்கண்டார்* - திருவண்ணாமலை.

2.  *அருள் நந்திதேவ நாயனார்* – சிர்காழி

3.   *மறை ஞானசம்பந்தர்* - சிதம்பரம்

4.  *உமாபதி* *சிவம்* - சிதம்பரம்

   *பக்தர்கள் பொருட்டு* 

 1 *திருவிரிஞ்சியுரம்* - பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.

 2. *திருப்பனந்தாள்* – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்து பூமாலையை ஏற்றிக் கொண்டருளினார்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-