Posts

பாடல் பெற்ற ஸ்தலங்கள்:-

நிச்சயம் நம் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருந்து இருக்கும். மிக அபூர்வமான , ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை இது. படிக்கும்போதே , சில வரிகளில் உங்களை அறியாமல் ஒரு ஈடுபாடு வரும். அந்த ஆலயத்திற்கு , கண்டிப்பாக ஒரு முறையாவது சென்று வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் , நிச்சயம் மிகப் பெரிய ஒரு மலர்ச்சி உண்டாகும்!  *தேவாரம் பாடல்  பெற்ற தலங்கள்*  1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44. 2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள்           --- 52. 3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                   --- 13. 4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                     ----  2. 5. சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள்                        ---- 111. 6. அப்...

விவசாய ஜோதிடம்:-

சுந்தரானந்தர் கூறும் விவசாய ஜோதிடம்:- 1.நிலங்கள் வாங்க நல்ல முகூர்த்தம்: புதன் கிழமைகளில் கடக லக்னத்தில் பரணி திருவோணம் அஸ்தம் அனுஷம் நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் நிலம் வாங்க மேன்மேலும் விருத்தியாகும். 2.நிலம் உழுவதற்கான நல்ல முகூர்த்தம்: திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில் வளர்பிறை துதியை பஞ்சமி தசமி திரயோதசி திரிதியை சப்தமி ஏகாதசி திதிகளில் புனர்பூசம் பூசம் அனுசம் மூலம் அஸ்தம் உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி ரேவதி ரோகிணி நட்சத்திரங்களில் கன்னி மிதுனம் கடகம் ரிஷபம் தனுசு மீனம் துலாம் சிம்ம லக்கினங்களில் பாதாள யோகினி இல்லாத நாட்களில் கலப்பை கொண்டு ஏர் உழுவதற்கு நல்ல முகூர்த்தமாம். 3.விதை விதைக்க நல்ல முகூர்த்தம்: திங்கள் புதன் வியாழன் வெள்ளி கிழமைகளில் துதியை திரிதியை பஞ்சமி திரயோதசி தசமி ஏகாதசி பௌர்ணமி திதிகளில் மூலம் ரோகிணி பூசம் உத்திரட்டாதி சதயம் திருவோணம் அஸ்தம் மகம் விசாகம் சுவாதி ரேவதி நட்சத்திரங்களில்  சிம்மம் ரிஷபம் மிதுனம் கும்பம் கடகம் துலாம் மகரம் மீனம் லக்கினங்களில்  விதை விதைக்க நல்ல முகூர்த்தமாம். 4.நாற்று நட நல்ல நாட்கள்: விதை விதைக்க சொன்ன முகூர்த்த நா...

பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகுணம்:-

Image
அசுவினி: செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான்,கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர். பரணி: நன்றிமிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர். கார்த்திகை: பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர். ரோகிணி: கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர். மிருகசீரிடம்: தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம். திருவாதிரை: எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப் பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர். புனர்பூசம்: கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம். பூசம்: பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர். ஆயில்யம்: செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர். மகம்: ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வ...

மேல் நோக்கு, கீழ் நோக்கு நாள் :-

மேல் நோக்கு, கீழ் நோக்கு நாள் என்பதன் பொருள் தெரியுமா? தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா…? மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது. இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன. ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும்( ஊர்த்துவமுக ) நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.அதாவது, இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாட்கள். இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும். பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள், ( அதோமுக ) நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள். இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங...

நீங்களும் மருத்துவர் ஆகலாம்:-

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! • ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும். • உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும். • அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும். • பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும். • சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். • மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். • துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும். • மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும். • வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும். • பொடித்த படி...

கட்டு மந்திரங்கள் :-

கட்டு மந்திரங்கள் :- *********************** திக்கு கட்டு ************** 1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் 2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு முன்புறம் போடவும் 3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும் 4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும் 5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும் குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம் பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும் ******************************** அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே பொருப்பு இருப்பாக கொண்டேனே சிவன் சிவமாக கொண்டேன் சிவன் இருந்தவாறே உடல்கட்டு. ************ ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல் கைகளில் அம...

சமையலில் செய்யக்கூடாதவை

சமையலில் செய்யக்கூடாதவை.  * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. * பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. * பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. #காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது. காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும். கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந...