தியானம் செய்வது எப்படி :-
#தியானம் செய்ய விரும்பும் சாதகன் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்தல் வேண்டும். தன் வீட்டில் ஓர் அறையை அல்லது ஓர் இடத்தை இதற்கெனத் தேர்வு செய்து அந்த இடத்தில் தியானம் செய்தல் வேண்டும். வேறு எந்தக் காரியமும் அந்த அறையில் செய்யலாகாது. அதாவது அந்த அறை தியான அறையாக மட்டும்தான் இருக்க வேண்டும். அந்த அறையைத் தினமும் சுத்தம் செய்து தூப தீபங்கள் காட்டி இட்ட தெய்வத்திற்குப் புட்ப பரிமளங்கள் சாத்தி நைவேத்தியம் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த அறைக்குள் நுழைந்தால் நாம் பேரானந்தம் அடையவும் மிக விரைவாக தியானத்தில் ஈடுபடவும் யோக சக்திகளைப் பெறவும் ஏதுவாகயிருக்கும். #தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்வது அவசியம் முடிந்தவரை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 3 மணிமுதல் 6 மணிவரை தியானம் செய்தல் நன்று. மாலையில் அந்தி வேளையில் தியானம் செய்வதும் நல்லது. 🙏🔥🧘⚜️🌳🔱🪔🥥🌹🙏 அமரும் முறை:- 🙏🙏🙏 #தியானத்தின் போது நாம் கிழக்கு முகமாகப் பார்த்து அமர்வது நல்லது. #வடக்கு முகமாகவும் வடகிழக்கு முகமாகவும் அமர்ந்து தியானம் செய்யலாம். #தியானத்தின் போது முடிந்தவரை ...