Posts

Showing posts from August, 2020

Heart attack

என் அம்மாவுக்கு.. இரண்டாவது attack.... Gh ல் அட்மிட் செய்தேன்.. ECG Treadmill test then stent... .. ஒரே பரபரப்பு... நாள் குறிக்கப்பட்டது.. Angio என்று. பிறகு எனது சகலை கொடுத்த நாட்டு மருத்துவம்... 👍👍👍👏👏👏 ... ஒரு வாரம் கழித்து  Angio க்கு முன்... Treadmill Test.... அம்மா நீங்கள் ... Normal.. No angio ... வீட்டுக்கு செல்லலாம் என்று chief சொல்லி விட்டார்கள்... அவர்களுக்கும் ஏனென்று புரியவில்லை.. எங்களுக்கும் தான்  பிறகென்ன ஒரே மகிழ்ச்சி... ... என்றும் எனது சகலைக்கு நன்றி.. 🥳🥳🥳🙏🙏🙏 அவர் சொன்ன மருத்துவம்... எப்போதெல்லாம் .. இதயம் வலிக்கிறதோ..இடது கை வலிக்கிறதோ... உடனே எடு அந்த மருந்தை... 🤩 இது தெரியாமல்.. இருதய குழாய் அடைப்புக்கு நாம் லட்சக்கணக்கில் செலவு செய்து கொண்டு இருக்கிறோம்.. It's very simple... இஞ்சி சாறு-50 ml.  பூண்டு சாறு 50  ml. எலுமிச்சை சாறு 50 ml. (மூன்றும் நீர் சேர்க்காமல் concentrated  சாறெடுக்க வேண்டும்) தரமான இஞ்சி, பூண்டு, எலுமிச்சை தேர்வு செய்வது சிறப்பு. ☘️☘️☘️☘️ இவற்றுடன்  Apple Cider vinegar 50ml. (Super market மட்டுமே கிடைக்க...

வீட்டிற்க்கு புகை போட :

*வீட்டிற்க்கு புகை போட* வெண்கடுகு 50 gram நாய்கடுகு 50 gram அழவண விதை 50 gram இம்மூன்றையும் சம எடை எடுத்து பொடித்து அத்துடன் நல்ல தரமான சாம்பிராணி சேர்த்து செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் மாலை வேளை நெருப்பில் புகை வீடு முழுவதும் போட அசுத்த ஆவிகள் பேய் பில்லிசூனியம் இவற்றின் கெட்ட நடவடிக்கை அழிந்து குடும்பம் விருத்தி அடையும்* *மந்திர வாதிகளின் கெட்ட வேலையை முற்றிலும் எதிர்க்க கூடிய ஒரு நல்ல சாதுவிடம் கேட்டு வாங்கிய முறை*

வேர்கடலை

Image
#வேர்கடலை. நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது . எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். நீரழிவு நோயை தடுக்கும்: நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். பித்தப் பை கல்லைக் கரைக்கும்: நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இதயம் காக்கும்: நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலை...

வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை மருத்துவம்.

Image
மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாக வள்ளலார் அருளிய காயகல்பம் மூலிகை மருத்துவம். அதைப் பற்றி சிறிய தகவல்கள்🌳  ~~~~~~~  🐝 🐝 ~~~~~~~ காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். என்று இல்லை ...🐝🐝  ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் மருந்தினைஅருளியுள்ளார். வெள்ளை கரிசலாங்கண்ணி - 200 கிராம்🌳  தூதுவளை - 50 கிராம் 🌳  முசுமுசுக்கை  - 50 கிராம்🌳  சீரகம்  - 50 கிராம் 🌳  ஆகியவற்றை பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்) இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும். இதனை சாப்பிட ஆரம்பித்த மறுநாளிலிருந்து மலம் கருப்பு நிறத்தில் வரும். சிறுகுடல், பெருங்குடலில் இருக்கும் பழைய...

அஸ்வகந்தா

Image
அஸ்வகந்தா மருத்துவ பயன்கள் Benefits of Ashwaghanthi Leheyam (Withania somnifera) (அமுக்கிரா கிழங்கு) அஸ்வகந்தா அஸ்வகந்தா என்பது மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செடியாகும். இந்த செடியில் உள்ள வேரும், இலையும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. ‘அஸ்வம்’ என்றால் வடமொழியில் குதிரை என்ற அர்த்தத்தை குறிப்பிடுகிறது. ‘கந்தம்’ என்றால் கிழங்கு என்ற பொருளைக் குறிக்கிறது. குதிரை பலத்தை அஸ்வகந்தா வழங்குகிறது என்பதால், இந்தப் பெயரை இது கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதன் இலையை முகர்ந்து பார்த்தால் குதிரை வாசம் அடிப்பதால் அஸ்வகந்தா என்று வடமொழியில் கூறுகிறார்கள். நமக்கு ஏற்படும் கட்டிகளின் மீது இந்த அஸ்வகந்தா இலையை அரைத்து பூசினால் கட்டியானது அமைந்துவிடும். இதன் காரணமாக தமிழில் இதனை ‘அமுக்கிரா’ என்று அழைக்கிறார்கள். அஸ்வகந்தா விற்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், ஆசிவகம், இருளிச்செவி, வராககர்ணி இப்படி பல்வேறு பெயர்களும் உண்டு. இந்த மூலிகையை குறைந்த அளவில் நெடுநாட்களுக்கு சாப்பிட்டு வந்தால், நம் உடல் நலத்திலும், மன நலத்திலும் நல்ல விதமான முன்னேற்றத்தை அடையலாம். இந்த ...

முடி நன்றாக வளர:

முடி நன்றாக வளர: மருதாணி இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து, பச்சை நிறம்மாறாமல் காய்ச்சித் தடவி வர முடி நன்றாக வளரும்.கற்றாழைச்சாற்றை தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலைக்குத்தேய்த்துவந்தால் தலைமுடி நன்றாக வளரும்.தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலையை நன்றாக அரைத்துகாய்ச்சி தினமும் தேய்த்து வர, தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளரும்.எலுமிச்சம் சாற்றையும் காரட்டையும் தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் தடவி வந்தால் முடி நன்றாக கருப்பாக வளரும். முடி கருப்பாக மாற: மருதாணி இலையுடன் நில ஆவார இலையைச் சேர்த்து அரைத்து தடவி வரசெம்பட்டை முடி கருப்பாக மாறும்.கரிய போளத்தை (கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)  நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால்முடி கருத்து வளரும்.நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமைநிறத்திற்கு மாறும்.ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர் மற்றும் செம்பருத்தி பூ இவற்றை இடித்து தூள் செய்துதேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.தேங்காய் எண்ணெயுடன் காய்ந்த நெல்லிக்காயை தூளாக்கிக்...

குமரிசாக்லெட் #கிருதம். மருந்து செய்முறை.

Image
#குமரிசாக்லெட் #கிருதம். மருந்து செய்முறை. தேவையான பொருட்கள்:  1.சித்தாமணக்கெண்ணெய் -1லிட்டர் 2.சோத்து கத்தாழை சோறு  -1/2 கிலோ 3.தரமான பனங்கல்கண்டு  -1/2கிலோ 4.வெள்ளை வெங்காயம்    -250 கிராம் 5.சீரகம்                                    -25 கிராம் செய்முறை:                        சோற்று கற்றாழை மேல் தோல் சீவி சோறு எடுத்து ஏழுமுறை கழுவி சாக்லெட் அளவு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பனங்கல்கண்டை  அரைத்து சலித்து பொடித்து வைக்கவும்.சீரகத்தை வறுத்துப் பொடித்து வைக்கவும்.வெள்ளை வெங்காயத்தை இடித்து சாறு எடுத்து வைக்கவும்.             சித்தாமணக்கு எண்ணெய்யை அடுப்பில் வைத்து  பொடித்து வைத்துள்ள பனங்கல்கண்டு, சீரகம் மற்றும் கற்றாழை சோறு மற்றும் வெள்ளைவெங்காய சாறு இவைகளை எண்ணெய்யுடன் கலந்து எரித்து வரவும்.நீர் சுண்டி மெழுகு பதம் வந்ததும் இறக்கி பத்திரப்படுத்தி வைக்கவும். தீரும...

உங்கள் வீடு திடீரென்று இருள் சூழ்ந்த மாதிரி இருக்கின்றதா?

*உங்கள் வீடு திடீரென்று இருள் சூழ்ந்த மாதிரி இருக்கின்றதா? இந்தத் தண்ணீர் தெளித்தால் போதும்! வீடு இருள் நீங்கி, பிரகாசமாக மாறும்.* நம்முடைய வீடானது சந்தோஷமாகத்தான் இருக்கும். வீடு முழுவதும் நிம்மதி நிறைந்திருக்கும். வீட்டின் தோற்றம், மகாலட்சுமி வாசம் செய்வது போல மங்களகரமாக இருக்கும். வீட்டில் பண தட்டுப்பாடு இருக்காது. ஆரோக்கியமான வாழ்க்கை இருக்கும். சண்டை சச்சரவுகள் இருக்காது. சொந்த பந்தங்கள் வருவதும் போவதும், வீட்டில் கலகலப்பை மேலும் அதிகரித்திருக்கும். திடீரென்று ஏதோ ஒரு நாள் இவை அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் நின்றது போல் ஒரு நினைப்பு தோன்றிவிடும். தேவையில்லாத மனக்குழப்பமும், மனக் கஷ்டமும் ஏற்பட ஆரம்பித்து விடும். நமக்கே தெரியாமல் நம்முடைய வீடு இருளில் மூழ்கியது போல இருக்கும். அதாவது பகல் நேரம் சூரிய ஒளி படும் இடம் கூட, வீட்டில் விளக்கு எரியும் இடம் கூட,  நம் கண்களுக்கு இருண்ட சூழ்நிலையை காட்டும். சில பேருக்கு கெட்ட நேரத்திற்கான அறிகுறி என்று கூட இதை சொல்லலாம். யாரையும் பயமுறுத்துவதற்காக இது சொல்லப்படுவதில்லை. ஆனால், சில வீடுகளில் இது நடக்கக் கூடியதுதான். இனம்புரியாத மனவருத்தமும் ...

கிரக சேர்க்கைகளும் மலர் மருந்துகளும்*.

*கிரக சேர்க்கைகளும் மலர் மருந்துகளும்*. --------------------------------------------------------------  *குரு+சூரியன்* ------------------ ஜாதகத்தில் குரு+சூரியன் சேர்க்கை பெற்றவர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்தே ஏமாறும் ஏமாளிகளாக இருப்பார்கள். தன் முன்னேற்றத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்பட மாட்டார்கள். இந்த ஏமாளிகளுக்கு ஏற்ற மலர் மருந்து-“சென்டாரி”. *குரு+சந்திரன்* ------------------ ஜாதகத்தில் குரு+சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள் எப்பொழுதும் மனக்குழப்பத்திலேயே இருப்பர். இவர்களுக்கு ஏற்ற மலர் மருந்து ”ஸ்கிளராந்தஸ்” ஆகும். குரு+செவ்வாய் --------------------- *ஜாதகத்தில் குரு+செவ்வாய்*  சேர்க்கை பெற்றவர்கள் பிறரை அடக்கியாள நினைக்கும் கர்வமுடைய சர்வாதிகாரிகளாகும். இவர்களுக்கேற்ற மலர் மருந்து “வைன்”. *குரு+புதன்* --------------- ஜாதகத்தில் குரு+புதன் சேர்க்கை பெற்றவர்கள் எப்பொழுதும் யாருக்காவது உதவி செய்கிறேன் பேர்வழி என்று ஓடிக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஏற்ற மலர் மருந்து “பைன்”. *குரு+சுக்கிரன்* ------------------ ஜாதகத்தில் குரு+சுக்கிரன் சேர்க்கை பெற்றவர்கள் எங்கும் எதிலும் சு...

குளிகை கால முகூர்த்தம்?

குளிகை கால முகூர்த்தம்? ========================== குளிகை காலத்தில் நடைபெறும் காரியம் திரும்பத் திரும்ப நடைபெறும் என்பதற்காகவும், அந்த நேரத்தில் செய்யும் நிகழ்வுகளில் கர்த்தா அடிக்கடி கலந்து கொள்ள நேரிடும் என்பதாலும் அசுப காரியங்களை குளிகை காலத்தில் செய்யக்  கூடாது என்பதை சாஸ்திரம் மூலமாக தங்கள் அனுபவத்தை சொல்லி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். சுபகாரியங்களை இந்த நேரத்தில் செய்தால் அதுவும் திரும்ப நடந்தால் நல்லது தான் என்பதற்காக இந்த காலத்தில் சுபகாரியங்களை செய்யலாம் என்றும் கூறி இருக்கிறார்கள். ஆனால் நாம் நம் வாழ்வில் நடக்கும் அனைத்து சுபகாரியங்களுக்கும் அதை பொருத்திப் பார்க்கக் கூடாது. எதையெல்லாம் சாஸ்திரம் கூறும் நல்வழியில் திரும்பத் திரும்ப செய்ய வேண்டும் என்று எண்ணுகிறோமோ அவற்றையெல்லாம் கட்டாயமாக குளிகை காலத்தில் செய்து கொள்ளலாம். அதாவது மானுட வாழ்வில் நடக்கும் விஷேசமான பொது சுபகாரியங்கள் அல்லாது அன்றாடம் நடக்கும் சுபங்களான வீடு, மனை, வாகன ஒப்பந்தம், கிரயம், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துதல், சுபகாரியங்களை பேசத் துவங்குதல், பொருளாதார நடவடிக்கைகளை துவங்குதல் (கடன் வாங்குவது, அ...

சிட்கா.. மருத்துவ குறிப்புகள்

சிட்கா.. மருத்துவ குறிப்புகள் 1) பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும். 2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும். 3) வயிற்றுவலி போக்கும் நறுவலி நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும். 4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும். 5) தலைபாரம் நீக்கும் கிராம்பு கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும். 6) காயத்துக்கு காட்டாமணக்கு காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும். 7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும். 8)குழந்தையை காப்பான் கரிப்பான் கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க க...

வைனாசிக நட்சத்திரம்

உங்களின் நோயை குறி காட்டும் வைனாசிக நட்சத்திரம்  முதலில் உங்கள் ஜென்ம நட்சத்திரம் எது என்பதை குறித்து கொள்ளுங்கள். அந்த  ஜென்ம நட்சத்திரம் முதல் எண்ணி வரும் 22 வது நட்சத்திரம் வைனாசிகம் நட்சத்திரம் என்பதை அறிக... இன்னும் தெளிவாக ஒருவருக்கு நோய் வருவது 22 வது நட்சத்திரத்தின் மூலமாகத்தான் என்பதனை மனதில் வைக்க. வைநாசிகம் என்பது பிறந்த நட்சத்திரத்திலிருந்து 22 வது நட்சத்திரம் மேலும் 88 வது பாதம் . சிலருக்கு இது 23 நட்சத்திரத்திலும் வரும், [ விளக்கம் கீழே உள்ளது ]  வைனாசிகம் என்பது நமது உடலை வதைப்பது என்று பொருள் ஆகும். நமக்கு நோய் ஏற்படுத்துவது என்றும் பொருள் கொள்க. வைனாசிக நட்சத்திரத்தில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரக தசா புத்திகளில் நமது உடல் நலம் பாதிப்பு அடையும். வைனாசிக நட்சத்திர அதிபதியின் தசா புத்தி காலமும் உடல் நல கோளாறுகளை கொண்டு வந்து சேர்க்கும். இதை கோச்சார கிரக இணைவுகளோடு பொருத்தி பார்த்தால் என்ன மாதிரியான உடல் நல கோளாறு வரும் என்பதை சரியாக கண்டறிய முடியும். மாதம் தோறும் வரும் வைனாசிக நட்சத்திரம் அன்று மருத்துவம் சம்பந்தப்பட்ட எந்த விஷயம் செய்தாலும் அது நல்ல பல...