கனவுகளின் பலன்கள்
கனவுகளின் பலன்கள்
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரியவில்லை. சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் கனவுகளும், அதன் பயன்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் நான் படித்ததை உங்களுடன் பகிர்கிறேன். அதிலும் நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு 8.24 – 10.48 மணிக்குள் கண்ட கனவு 3ம் மாதத்திலும், இரவு 10.48 – 1.12 மணிக்குள் கண்ட கனவு 1 மாதத்திலும், இரவு 1.12 – 3.36 மணிக்குள் கண்ட கனவு 10 தினங்களிலும், விடியக்காலை 3.36 -6.00 மணிக்குள் கண்ட கனவு உடனேயும் பலிதாகும் என்று‘பஞ்சாங்க சாஸ்திரம்’சொல்கிறதாம். பகலில் காணும் கனவுக்கு பயனில்லையாம்.
நற்பலன் தரும் கனவுகள்
ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.
வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு மேலும் பெருகும்.
திருமணமாகாதோர் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும்.
ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்.
சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும்.
நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.
தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.
திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும்.
தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.
உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும்.
கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும்.
ஆமை, மீன், தவளை போன்ற நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் பறந்து போகும், நெஞ்சிலே நிம்மதி பிறக்கும்.
மயில், வானம் பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
கழுதை, குதிரையை கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.
மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும்.
வாத்து, குயிலை கனவில் கண்டால் நம் முயற்சிகள் எளிதில் வெற்றி பெரும்.
மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.
தீய பலன் தரும் கனவுகள்
பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் என நஷ்டம் ஏற்படும்.
தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.
எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும்.
எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும்.
இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.
பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு வியாதி சூழும்.
புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால் நோய் உண்டாகும்.
குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.
நோய் பீடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார்.
ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும்.
முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும்.
முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும்.
சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும்.
பழம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள்.
காக்கை கத்துவது போல் கனவு கண்டால் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது.
குழந்தையைக் கனவில் காண்பதுநல்லது. தொழில் விருத்தி ஏற்படும்.பொருள் வரவு அதிகமாகும்.
ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள்விளையாடுவது போலவோ, சிரித்துமகிழ்வது போலவோ கனவுகண்டால் சந்தோஷமும்மகிழ்ச்சியும் நிலைக்கும்.
சூரியனைக் கண்டால் வியாதிகள்நீங்கும். விரோதிகளை வெல்லும்ஆற்றல் கிட்டும்.
கோயிலைக் கண்டால் நூதனமானதொழில் விருத்தியாகும். செல்வம்குவியப்போவதைக் குறிக்கும்.
வெல்லத்தைச் சாப்பிடுவதாக கனவுகண்டால் வறுமை நீங்கும்.பலருடன்சேர்ந்து சாப்பிடுவதாக கனவுகண்டால் பொருள் லாபம்உண்டாகும்.
பழங்களை ஒருவர் தனக்குகொடுப்பதாகவோ, உண்பதாகவோகனவு கண்டால் செய்யும் காரியம்வெற்றியாகும்.
குருவிகளைக் கனவில் காண்பதுநன்மையானது. கஷ்டமான நிலைவிலகும். வம்புவழக்கு இருப்பின்வெற்றி கிட்டும்; நோயுற்றிருப்பின்நோய் அகலும்.
குருவி தன் வீட்டில் கூடுகட்டுவதாகக் கண்டால்திருமணமாகாதவருக்குதிருமணமும்திருமணமாகியிருந்தால் புத்திரபாக்கியமும் உண்டாகும்.
குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட,இந்தப் பலன் உண்டு. ஆனால்குருவிக் கூட்டைத் தானேபிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்தசம்பவம் நடக்க இருக்கிறதுஎன்பதை அறியலாம்.
குருவிகள் தன் குஞ்சுகளுக்குஇரையூட்டுவது போலவும் தன்குடும்பத்துடன் இருப்பதையும்கண்டால் வாழ்க்கையில்சந்தோஷம் ஏற்படும்.
குருவிகள் குதூகலமாய்இருப்பதைக் காண்பதும் நல்லதே.ஆனால் குருவிகள் சண்டைபோடுவதைப் போல கண்டால்குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டுபிரிய நேரும். தொழிலும் பகைஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.
குருவிகள் இறந்து கிடப்பதைக்கண்டால்கூட கெடுபலன். பலதொல்லைகள் உண்டாகும். அடுப்புசுவாலையுடன் எரிந்துகொண்டிருப்பதாகக் கண்டால்தொழிலில் விருத்தி ஏற்படும்.புதிதாக தொழில் தொடங்கிஇலாபம் பெற நேரும்.
அடுப்பு எரியாமல் அதனுள்பூனையோ அதன் குட்டிகளோஇருப்பதாகக் காண நேரின்ஆரோக்கியக் கேடும்,செய்தொழிலில் நஷ்¢டமும்உண்டாகும். எரியும் அடுப்புஅணைத்து அதன் கரியையோசாம்பலையோ காணநேரின்எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டுஅதனால் துன்புறப் போவதைஉணர்த்தும். அழுக்கு ஆடைஅணிந்திருப்பதாகக் கண்டால்பலவித சங்கடங்கள் நேரஇருக்கின்றன என அறியலாம்.
வெண்பட்டு ஆடைஉடுத்தியிருப்பதாகக் காண நேரின்பெண்களின் சேர்க்கையும்அதனால், இலாபமும் நேரும்தன்னை யாரோஏமாற்றிவிட்டதாகக் கண்டால்வஞ்சகத்தால் தன்னிடமுள்ளபொருள் பறிபோகப் போகிறதுஎன்பதை அறியலாம்.
ஒரு நூதமான இயந்திரத்தைக்கண்டால், தான் மேற்கொள்ளப்போகும் செயலால் வெற்றியும்இலாபமும் ஏற்படும்.
அந்த இயந்திரத்தைத் தானேஇயக்குவதாய்க் காண நேரின்,செய்யப்போகும் தொழிலில்நிச்சயம் அபிவிருத்தியும் இலாபமும்மிகும். அந்த இயந்திரம் இயங்கிக்கொண்டிருப்பதாகக் கண்டால் தான்நினைக்கும் காரியத்தைச்செய்வதால் நன்மை பெறலாம்.
ஆனால இயந்திரம் ஓடிக்கொண்டேஇருந்து நின்று போவதாகக்கண்டால், செய்யும் தொழில்கூடபாழ்படப் போகிறது என்பதைஅறியலாம்.
ஆண் பெண் கலந்த கூட்டத்தைக்கண்டால் செய்தொழிலில் விருத்திஉண்டாகும்.
நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறுநஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீதுவீண்பழி சுமத்துவர். எலுமிச்சமரத்தைக் காண்பது நல்லது. அதில்பழங்கள் மிகுந்து தொங்குவதாகக்காணப்பட்டால் உடனடியாகஎதிர்பாராத பணவரவு ஏற்படும்.
அதுவே பழமாக இல்லாது காயாகஇருப்பின் பண வரவு ஏற்படும்.ஆனால் மிகவும் தாமதமாய்க்கிடைக்கக்கூடும்.
எலுமிச்ச மரம் உலர்ந்து போய்விட்டதாகக் கண்டால் பலவித கஷ்டநஷ்டங்களுக்கு ஆளாக நேரும்.தெளிந்த நீரைக்காணின்வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கப்போவதையும், நல்ல காலம்தொடங்குகிறது என்பதையும்அறியலாம் பேனா அல்லதுஎழுதுகோல் எதையேனும் கண்டால்கடிதம் மூலமாக பொருள் வரவுஏற்படும்.
அரண்மனையைக் கண்டால்பொருள் விருத்தியாகும்.
அரண்மனைக்குள் தாமேசெவதாய்க் கான நேரின், உற்றார்உறவினர்களால் சந்தோஷம்மிகுதியாகும். செல்வ நிலையும்உயரும்.
வயதில் மூத்தவர்கள் தன்னைஆசீர்வாதம் செய்வது போன்றுகனவு கண்டால் ஜீவன மேன்மையும்பொருள் சேர்க்கையும் ஏற்படும்.
எலுமிச்சம்பழத்தைக் காண்பதுநல்லது. தனக்கு ஒருவர்கொடுப்பதாகக் கண்டால்தொழிலில் விருத்தி, சகலபாக்கியங்களும் பெருகும்.
அப்பழத்தைச் சாப்பிடுவதாகக்கண்டால் நல்ல தன்று. குடும்பத்தில்ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப்போவதைக் குறிக்கும். காய்ச்சல்,நோய் ஏற்படும்.
காதுகளைக் கண்டால் குடும்பத்தில்கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம்நேரும்.
தனக்கு காதுநோய்வந்துவிட்டதாகக் கண்டால் கூடகுடும்பத்தில் ஏற்படப் போகும்கலகத்தின் அறிகுறியே ஆகும்.
சாவிக் கொத்து தன்னிடம்இருப்பதாகக் கண்டால்குடும்பத்தில் பற்று அதிகமாகும்.தொழிலில் மேன்மை, பொருள்சேர்க்கை மிகும்.
சாவிக் கொத்து காணாமல்போனதாகக் கண்டால் பலவிதகஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகநேரும். நம்பிக்கை மோசம் போவார்.
ஒரு கதவையோ பூட்டையோதிறப்பதாகக் கண்டால் பிறருக்குஉதவுவதன் மூலமாகப் புகழ்பெறுவர் உண்மை: நமதுஆழ்மனதில் புதைந்துள்ளநிறைவேறாத ஆசைகள், முளையில்பதிவான சமீபத்தியநிகழ்வுகள்தான் தூக்கத்தில்கனவுகளாக வருகின்றன. இதற்குபலன்களாக நாம்எடுத்துக்கொள்பவை, நம்மால்ஏற்படுத்தபட்டவைதான். அவற்றில்உண்மை கிடையாது. `அரண்டவன்கண்ணுக்கு இருண்டதெல்லாம்பேய்’ என்பதுபோலத்தான்,கனவுகள் தொடர்பான பலன்களும்!நல்ல பலன் ஏற்படும் என்றுநம்பினால் நல்ல பலனைஅடையலாம் அல்லது அதைநெருங்கலாம். அதேபோன்றுதான்தீயபலனுக்கும்!
பாம்பு கனவில் வந்தாலும் பயப்படவேண்டாம். பாலூட்டி இன மிருகமேஇன்றைய மனித இனத்தின்முந்தைய நிலை. லட்சக்கணக்கானஆண்டுகளுக்கு முன்பு, உலகம்முழுவதும் பாலூட்டிகளுக்கும், பாம்புபோன்ற ஊர்வனவற்றிற்கும்பயங்கரமான சண்டைகள் நடந்தன.அந்த பழைய பகை உணர்வுகளின்நினைவுகள் மனித இனத்தின்மரபணுக்களில் அழுத்தமாக பதிந்துபோனதுதான் மேற்படி கனவுக்குகாரணம். கனவு பற்றிய மேலும் சிலஉண்மைத் தகவல்கள்: பார்வைஇல்லாதவர்களுக்கு வரும்கனவுகளில் உருவங்கள்இடம்பெறுவதில்லை. சத்தம்மட்டுமே வரும். வளர்ச்சிஅடைந்தவர்கள் மட்டுமின்றி கைக்குழந்தைகளும் கனவுகாண்கின்றன. ஏன்… தாயில்வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூடகனவு வருகிறது. மனிதர்களைபோன்று மிருகங்களும் கனவுகாண்கின்றன அடைய நினைக்கும்உயர்நிலையை நம் எண்ணங்களைவாக்கியங்களாய் அமைத்து நம்பார்வையில் படும்படி வைப்பதுநல்ல பலனைத் தரும். ஏனெனில்எது கண்களில் படுகின்றதோ அதுமனதில் ஆழமாகப் பதிகின்றது.மனம், தொடர்ந்து எதைநினைக்கின்றதோ அதுவாகவேநாம் ஆகிறோம். வெற்றியின் முதல்கட்டம் நம்மை நாமேவெற்றியாளராக பார்ப்பதுதான்.இதுமட்டும் வெற்றிக்கான காரணிஆகிவிடாது. கனவில் கண்டுமகிழ்ந்த காட்சியும் கண்முன்னேதெரியும் வாசகங்களும் நிஜம் பெறசரியான திட்டம் தேவை.
சுப சொப்பனங்கள்
பசு, எருது, யானை தேவாலயங்கள,அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம்இவைகளின் மேல் ஏறுதல், மாமிசபக்ஷணம், தயிரன்னம் புசித்தல்வெள்ளை வஸ்த்திரம் தரித்தல்?ரத்தின ஆபரணங்கள் காணல்,சந்தனம் பூசிக்கொள்ளல்,வெற்றிலை பாக்கு தரித்தல்,கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம்இவைகளை கண்டால் சொற்பசம்பத்து உண்டாகும். வெண்ணிறப்பாம்பு கடித்தல் தேள் கடித்தல்சமுத்திரம் தாண்டல், நெருப்பில்அகப்படுதல், கட்டுப்படல்இவைகளை கண்டால் தனலாபம்உண்டு.
தீ புகைந்தும், நெருப்புப் பொறிகள்பறந்தும் அந்த வஸ்திரம் எரிந்துபோவதாகக் கனவுகண்டால் தொழில், விவசாயம்இவற்றில் நஷ்டம் ஏற்படலாம்.
தீப்பிடித்து எரிந்துசாம்பலாவதுபோலக் கனவுகண்டால் கஷ்டம், நோய்கள் ஏற்படக்கூடும்.
புகையும், நெருப்புப் பொறிகளும்இல்லாமல் நன்றாக எரிவது போலக்கனவு கண்டிருந்தால்சொத்து சேரும்,அரசாங்கத்திடமிருந்து உதவிகள்கிடைக்கும். இருக்கும் பிணிகள்மருத்துவம் செய்யாமலேயேபறந்துவிடும்.
வெள்ளை நாகம் கனவில்வந்தால்- கனவு பலன்கள்
இந்தக் கனவு ஒரு ஆபத்தை முன்கூட்டியே அறிவிக்கும் ஒருமுன்னோடியாகவே தோன்றுகிறது.
வெள்ளை நாகம் என்பதுபொதுவாகவே எதிர்காலத்தைகுறிக்கும். ஆகவே எந்த விதபுது முயற்சிகளையும்மேற்கொள்ளும்போது ஒருமுறைக்கு இரு முறை சிந்தித்துசெயல் படுங்கள் !
இறந்தவர்களைக் கனவில்கண்டால் என்ன பலன்?
இயற்கையாகமரணமடைந்தவர்கள் கனவில்வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்என்று கனவுகள் தொடர்பானநூல்களில் கூறப்பட்டுள்ளது.குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்துநன்றாக வாழ்ந்து மரணமடைந்தமுன்னோர்கள் கனவில் வந்தால்அதனை ஆசி எனக் கருதவேண்டும்.
ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள்கனவில் வந்தால் சில இடர்பாடுகள்ஏற்படும். உடல் நலம் குறையலாம்.விபத்து, குடும்பத்தில்வாக்குவாதம்,பிரிவு உள்ளிட்டவைஏற்படக் கூடும்.
இதுபோன்ற பிரச்சனைகளைத்தவிர்க்க குலதெய்வக் கோயில்வழிபாட்டைமேற்கொள்ளலாம். பொங்கல்வைத்து அன்னதானம் வழங்கலாம்.வஸ்திர தானம்செய்யலாம். வயதானவர்கள்,பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும்சிறப்பாக வாழ்ந்து இயற்கைஎய்தியவர்கள் கனவில் வந்தால்கவலை கொள்ளத் தேவையில்லை.
நீர் நிலை கனவுகள்
நீர் நிலைகளை கனவில் பார்த்தால்நல்ல சகுனமாக கருதப்படுகிறது.ஆறு பெருக்கெடுத்து ஓடுவது, நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுவது,கடல் பொங்கி வருவது, குளம்நிரம்பி வழிவது போலகனவு கண்டாலும் அடுத்தடுத்துநல்ல செயல்கள் நடக்கும்.
நீர் நிலைகளில் நீராடுவது போல்கனவு கண்டால் சுப பலன்கள்ஏற்படும். வாழ்க்கையின்அடுத்த நிலைக்குசெல்லப்போகிறார் என்பதை இந்தகனவு தெரிவிக்கிறது.
அரண்மனை:
கனவில் அரண்மனை தோன்றுதல் மிகவும் நல்லது. அவ்வாறு கனவு காண்பவர் பேரதிஷ்டம் உடையவராவார்: உறவினர் மூலம் திரண்ட சொத்து வந்து சேரும். லாட்டரி போன்றவற்றில் பரிசு கிடைக்கும். போட்டிப் பந்தயங்களின் மூலம் பெருத்த ஆதாயம் கிடைக்கும்.
நெருப்பு கனவில் வந்தால் வீட்டில் அல்லது சொந்தத்தில் யாராவது ஒரு பெண் பூப்பெய்யப் போகிறாள் என்று என் வீட்டில் சொல்வார்கள்
இரும்பு கனவில் வந்தால் என்ன பலன்
இரும்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், உங்களை விட்டு பிரிந்தவர்கள் உங்களை தேடி வருவார்கள். வியபாரத்தில் எதிர்பாராத நன்மையும் லாபமும் ஏற்படும். உங்கள் மனதை மாற்ற சிலர் முயற்சிப்பார்கள். ஆனால் நன்மையுடன் முன்னேறி வரலாம்.
இரும்பை உடைப்பது போல கனவு கண்டால், பல நாட்கள் வாட்டி எடுத்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். ஆனால் வெற்றி உங்கள் பக்கமே ஏற்படும். சிந்திக்கும் ஆற்றலும், நிதான போக்கும் உண்டாகும். உடன் இருப்பவர்களால் மனநிம்மதி குறையும்.
இரும்பை வாங்குவது போல கனவு கண்டால், எதிர்பாராத சங்கடங்கள் வேலையில் சிரமங்கள் உண்டாகும். பணவிரயம் சந்தோஷம் குறையும். எச்சரிக்கையாக நடந்து கொள்வதே நல்லது.
இரும்பை பிடித்து கொண்டு இருப்பது போல கனவு கண்டால்,நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். உங்களுக்கு உதவ பலர் முன்வருவார்கள். பொருளாதர நெருக்கடியிலிருந்து தப்பிப்பீர்கள். கைவிட்டுபோக இருந்த பொருட்களை காப்பாற்றி விடுவீர்கள்.
Comments
Post a Comment