Posts

நீங்களும் மருத்துவர் ஆகலாம்:-

நீங்களும் மருத்துவர் ஆகலாம் !!! • ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும். • உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து வந்தால் போதும். • அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும். • பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு சரியாகும். • சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும். • மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும். • துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி மூளை பலம் பெறும். • மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும். • வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி நீங்கும். • பொடித்த படி...

கட்டு மந்திரங்கள் :-

கட்டு மந்திரங்கள் :- *********************** திக்கு கட்டு ************** 1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும் 2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு முன்புறம் போடவும் 3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும் 4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும் 5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும் குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம் பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும் ******************************** அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே அரி ஓம் பூமியை நோக்கினேனே பூமி பூடமாக கொண்டேனே பொருப்பு இருப்பாக கொண்டேனே சிவன் சிவமாக கொண்டேன் சிவன் இருந்தவாறே உடல்கட்டு. ************ ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல் கைகளில் அம...

சமையலில் செய்யக்கூடாதவை

சமையலில் செய்யக்கூடாதவை.  * ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. * காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. * மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. * கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. * காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. * தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. * பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது. * பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது. * தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது. * குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது. * குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது. #காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது. காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும். கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந...

பீஜ மந்திரம் :-

*🔯பீஜ மந்திரம் என்றால் என்ன *🔯நாம் சாதாரணமாக வார்த்தைகளை பயன்படுத்தும் போதும் பேசும் போதும் "ம்" தான் "ங்" ஆக மாறுகின்றது.*  அதாவது "ஓம்"காரம் என்பது "ஓங்"காரமாகவும், "ரீம்"காரம் என்பது "ரீங்"காரமாகவும் மாறுகின்றது. "காரம்" என்பது வரிசை என பொருள் கொள்ள வேண்டும். ஆனால் குழந்தைகளை பொறுத்தவரையில் முதலில் பேச பழகும்போது "ங்" சேர்ந்த வார்த்தைகளை தான் அதிகம் பயன்படுத்துகின்றன. அதாவது அங்கு, வங்கு, வங், யங் போன்ற பீஜ வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. இதற்குபின் தான் "ம்" சேர்ந்த பீஜ வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. அதாவது அம்மா, ஓம், ஆமா போன்ற வார்த்தைகளை உச்சரிக்கின்றன. மேலும் "ங்" சேர்ந்த பீஜங்களை உச்சரிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் இமையை அதிகமாக அசைக்காது கூர்ந்து எதையும் கவனிக்கும். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் இது பொருந்தும். அடுத்ததாக "ம்" சேர்ந்த பீஜங்களை ஊமை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக இம், உம், அம், ஓம், ஈம் போன்ற வார்த்த...

கடன் பிரச்சனைகளை தீர்க்கும் ரகசிய பரிகாரம்:-

*🙏ஒவ்வொரு ராசியினர்களுக்கும் உண்டாகும் கடன் பிரச்சனைகளை தீர்க்கும் ரகசிய பரிகாரம்*  ............................................................................ *மேஷம்* தயிரை கொண்டு ஏதேனும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து ஒவ்வொரு வெள்ளியும் மாலை வேளையில் பசுவுக்குக் கொடுத்து வர கடன்கள் நீங்கி வளம் பெறலாம். *ரிஷபம்* ஜவ்வரிசி கொண்டு இனிப்பு தயாரித்து அதை வெள்ளியன்று பசுவிற்கு மாலை வேளையில் கொடுத்து வர கடன்கள் அடைந்து சுகம் பெறலாம் *மிதுனம்* தினசரி சிறிது தயிர் சேர்த்து குளித்து வரவும்- கடன்கள் நீங்கும். மாலை வேளையில் சூரிய தரிசனம் அஸ்தமனத்துக்கு முன் செய்து வரவும் *கடகம்* ஒவ்வொரு ஞாயிறும் சிறிது வெல்லக்கட்டியை ஓடும் நீரில் விடவும்-ஞாயிறன்று அச்சு வெல்லக்கட்டியைக் குரங்குகளுக்கு கொடுத்து வரவும். *சிம்மம்* ஒவ்வொரு சனிக்கிழமையும் அரச மரத்தடியில் மண் அகலில் நல்லெண்ணெய் ஊற்றி கருப்பு திரி கொண்டு 8 விளக்குகள் ஏற்றி வர கடன்கள் அடைய வழி பிறக்கும் *கன்னி* சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும் (நீங்கள் உண்ண கூடாது) மேலும் துளசிக்கு தினசரி நீர் வார்த்து ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் ...

மோட்சதீபம்

மோட்சதீபம் ஏற்றுவதன் முக்கியத்துவம்! ------------------------------------------------------------------------ (சித்தர் அகத்தியர்) 21 தலைமுறை பாவங்கள் தோஷங்கள் சாபங்கள் நிவர்த்தியாகும். ஒருவர் இறந்துவிட்டாலோ, அல்லது மருத்துவ துறையில் இருப்பவர்கள், கண்டிப்பாக "மோக்ஷ தீபம்" கோவிலில் ஏற்ற வேண்டும் என ஒரு தொகுப்பில் அகத்தியப் பெருமான் கூறியிருந்தார்.  பலரும் அது சம்பந்தமாக விசாரிக்க, தேடியும் கிடைக்கவில்லை. சமீபத்தில், நான் அகத்தியர் பெருமானின் ஜீவநாடியை எனக்கு வந்த தொகுப்பை படித்த பொழுது, அதற்கான பதில் கிடைத்தது. இன்று சித்தர்களின் குரல். வாயிலாக அனைவரும் தெரிந்து கொள்வதற்காக கீழே அதை தருகிறேன். இறந்தவர்கள் ஆன்மா நல்லகதிக்கு /மேல்நிலைக்கு.. உய்யும் பொருட்டுக் கோயிற் கோபுரத்தில்  ஏற்றும் விளக்கு தான் "மோட்சவிளக்கு" அகால மரணம், விபத்து மரணம், குழந்தை மரணம், மருத்துவரால்  சிகிச்சை மரணம், தீராதுன்பதுடன் மரணம், தீராஆசையுடன்/கவலையுடன் மரணம்.... ஆகியவற்றால்.. பூத உடலை நீங்கிய "ஆன்மாக்கள் நற்கதி அடைவதற்காக" வாரிசுகளால்/ மற்றவர்களால் "மோட்ச தீபம்" ஏற்றப்படு...

திருஷ்டி பரிகாரம் :-

உங்கள் வீடு திடீரென்று இருள் சூழ்ந்த மாதிரி இருக்கின்றதா? இந்தத் தண்ணீர் தெளித்தால் போதும்! வீடு இருள் நீங்கி, பிரகாசமாக மாறும்..... நம்முடைய வீடானது சந்தோஷமாகத்தான் இருக்கும். வீடு முழுவதும் நிம்மதி நிறைந்திருக்கும். வீட்டின் தோற்றம், மகாலட்சுமி வாசம் செய்வது போல மங்களகரமாக இருக்கும். வீட்டில் பண தட்டுப்பாடு இருக்காது. ஆரோக்கியமான வாழ்க்கை இருக்கும். சண்டை சச்சரவுகள் இருக்காது. சொந்த பந்தங்கள் வருவதும் போவதும், வீட்டில் கலகலப்பை மேலும் அதிகரித்திருக்கும். திடீரென்று ஏதோ ஒரு நாள் இவை அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் நின்றது போல் ஒரு நினைப்பு தோன்றிவிடும். தேவையில்லாத மனக்குழப்பமும், மனக் கஷ்டமும் ஏற்பட ஆரம்பித்து விடும். நமக்கே தெரியாமல் நம்முடைய வீடு இருளில் மூழ்கியது போல இருக்கும். அதாவது பகல் நேரம் சூரிய ஒளி படும் இடம் கூட, வீட்டில் விளக்கு எரியும் இடம் கூட,  நம் கண்களுக்கு இருண்ட சூழ்நிலையை காட்டும். சில பேருக்கு கெட்ட நேரத்திற்கான அறிகுறி என்று கூட இதை சொல்லலாம். யாரையும் பயமுறுத்துவதற்காக இது சொல்லப்படுவதில்லை. ஆனால், சில வீடுகளில் இது நடக்கக் கூடியதுதான். இனம்புரியாத மனவருத்தமும...