Posts

மூலிகை சாம்பிராணி வீட்டில் எப்படி செய்வது

சிவசிவ 🙏💐🙏💐🙏💐🙏💐 மூலிகை சாம்பிராணி வீட்டில் எப்படி செய்வது  அசல் சாம்பிராணி மிகவும் சக்தி வாய்ந்த மூலிகை சாம்பிராணி செய்வது குறித்த குறிப்பினை தருகிறேன் அவற்றின் தன்மை மாறாமல் இருக்க சுத்தமான  எதுவும் கலக்காத அசல் சாம்பிராணி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கேட்டுவாங்கி பயன்படுத்தவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகைகளும் நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்கம். சுத்தமான அசல் மூலிகைகளா என்று கவனித்து வாங்கவும். மூலிகை சாம்பிராணி செய்ய தேவையான பொருட்கள். சுத்த சாம்பிராணி - 500 கிராம் குங்கிலியம் -150 கிராம் புணுகு - 10 கிராம் கோரோஜனை -20 கிராம் தசாங்கு பொடி - 50 கிராம் அகில் - 50 கிராம் சந்தன தூள் (ஒரிஜினல்) - 100 கிராம் வெட்டி வேர் - 50 கிராம் மட்டிப்பால் - 50 கிராம் கருந்துளசி சமூலம் - 50 கிராம் நொச்சி இலை - 50 கிராம் திருநீற்று பச்சிலை - 50 கிராம் கஸ்தூரி மஞ்சள் - 50 கிராம் மருதானி விதை - 50 கிராம் பேய்மிரட்டி இலை -50 கிராம் விஷ்ணு கிரந்தி  - 50 கிராம் குப்பை மேனி - 50 கிராம் நாட்டு மா இலை - 25 கிராம் வில்வம் இலை - 50 கிராம் 70வது ஆண்டு வேம்பு இலை, பட்டை, வேர் ...

Numbers

_______ 02,04,06,08,10,20,22,26,33,37 42,51,64,66,73,79,80,84,88,93 95,97, ------------- 0202,0204,0206.0208.0220. 0222.0226.0233.0237.0242. 0251.0266.0268.0273.0277. 0280.0284.0293.0299. -------------- 0303.0312.0314.0329.0332. 0341.0345.0352.0354.0356. 0374.0392. -------------- 0402.0404.0406.0408.0420. 0422.0426.0433.0437.0439. 0442.0451.0464.0473.0479. 0480.0484.0488.0493.0497..0499 ------------ 0606.0602.0604.0608.0620. 0622.0626.0633.0637.0642 0651.0664.0668.0673.0677. 0679.0680.0688.0695.0697.  ---------- 0802.0804.0806.0808.0820. 0822.0826.0833.0842.0851. 0866.0877.0880.0884.0893. 0895.0899 ------------ 1010.1012.1014.1016.1029. 1032.1041.1045.1052.1054. 1056.1072.1074.1085.1087. 1090.1092. --------------- 1203.1210.1212.1214.1216. 1229.1241.1245.1252.1254. 1256.1272.1274.1285.1289. 1290.1292. ----------------- 1410.1412.1414.1416.1429. 1432.1441.1454.1472.1474.. 1487.1489.1490.1492. -------------- 1610.1612.1614.1616.1632 1639.1641.1645.1651.1654. 1672.1685.1687.1690. ----...

வெந்நீர்_மகத்துவம்

#வெந்நீர்_மகத்துவம் :- அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!! தமிழில் ”வெந்நீர்” எனப்படுவது ஆங்கிலத்தில் ”ஹாட் வாட்டர்” என்றும், ஹிந்தியில் ”கரம் பானி” என்றும் ஜப்பானிய மொழியில் ”ஹை-யை-யோ” என்றும் அழைக்கப்படுகிறது. எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வெந்நீர் சுடும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும்.யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ”அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்…” என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு.உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். இதோ பாருங்கள்… வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று! #நெஞ்சு_எரிச்சல்_போகணுமா? ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு! #சதை_குறையணுமா? வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள்.  #காலையில்_சரியாக_மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா?  எடுங்கள் வெந்நீரை! குடி...

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்..

வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்.. 1) சோடா இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். 2) தக்காளி தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும். 3) மாத்திரைகள் எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும். 4) ஆல்கஹால் பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடு...

கண் பிரச்சினைகள் :-

கிட்டப்பார்வை,தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே இல்லை!  கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு! கண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா? அல்லது குறைகிறதா? கண்டிப்பாக அதிகரிக்கிறது, இதிலிருந்து என்ன புரிகிறது, கண்ணாடியின் பவர் அதிகமாகிறது என்றால் கண்ணினுடைய பவர் குறைகிறது என்று அர்த்தம். பாதி கெட்டுப்போன கண்ணை முழுவதுமாகக் கொடுப்பதற்குக் கண்ணாடி அணிய வேண்டுமா? இது என்ன மருத்துவம்? கண்ணில் நோய் வந்தால் குணப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? நோயை அதிகப்படுத்துவதற்கு வைத்தியர் தேவையா? கிட்டப்பார்வை, தூரப்பார்வை சரி செய்ய நமது உடலுக்கே தெரியும் அதற்குத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் கெட்டுப் போய் உள்ளன, இது முதல் காரணம். இரண்டாவது கண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தத் தேவையான சில பொருள்கள் இரத்தத்தில் இல்லை. மூன்று இரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. நான்கு கண் கெட்டுப்போய் விட்டது என்று, நம் மனது கெட்டுப்போய் விட்டது. ஐந்து நம் உடலிலுள்ள...

பலன் தரும் மாந்திரீக பரிகாரங்கள்

(1) சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க கூடாது. கொடுத்தால் திரும்பி வராது. கண்டிப்பாக கடனாளி ஏமாற்றி விடுவார்.  (2) கணவன் அன்பாக நடந்து கொள்ள விசாக நட்சத்த்திரத்தில் மனைவியானவர் விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும் வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும் பெருகும்.திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் அமையவும் இப்படி செய்யலாம்.  (3) நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண பயத்திற்கு பரிகாரம் மற்றும் ரகசிய ஒப்பந் தங்களில் ஈடுபட, மாந்திரீகம் கற்க கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெ டுக்கலாம்.  (4) எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய், பில்லி சூனியன்களில் இருந்து விடுபட பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய உடனடி பலன் உண்டு.   (5) அரசியலில் வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர் பதவி அடைய திருவண்ணாமலையரை தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம் வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல் பலன் கிடைக்கும்  6) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.  (7) புதிய ...

இறக்கும் நாளில் அடைப்பு மற்றும்இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும்

இறக்கும் நாளில் அடைப்பு மற்றும் இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும் இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள். தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்? தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும். • அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு. • ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு. • கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு. • மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன.  அது என்ன அடைப்பு? - அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்ப...