Posts

Showing posts from September, 2021

திருஷ்டி பரிகாரம் :-

உங்கள் வீடு திடீரென்று இருள் சூழ்ந்த மாதிரி இருக்கின்றதா? இந்தத் தண்ணீர் தெளித்தால் போதும்! வீடு இருள் நீங்கி, பிரகாசமாக மாறும்..... நம்முடைய வீடானது சந்தோஷமாகத்தான் இருக்கும். வீடு முழுவதும் நிம்மதி நிறைந்திருக்கும். வீட்டின் தோற்றம், மகாலட்சுமி வாசம் செய்வது போல மங்களகரமாக இருக்கும். வீட்டில் பண தட்டுப்பாடு இருக்காது. ஆரோக்கியமான வாழ்க்கை இருக்கும். சண்டை சச்சரவுகள் இருக்காது. சொந்த பந்தங்கள் வருவதும் போவதும், வீட்டில் கலகலப்பை மேலும் அதிகரித்திருக்கும். திடீரென்று ஏதோ ஒரு நாள் இவை அனைத்தும் ஸ்தம்பித்துப் போய் நின்றது போல் ஒரு நினைப்பு தோன்றிவிடும். தேவையில்லாத மனக்குழப்பமும், மனக் கஷ்டமும் ஏற்பட ஆரம்பித்து விடும். நமக்கே தெரியாமல் நம்முடைய வீடு இருளில் மூழ்கியது போல இருக்கும். அதாவது பகல் நேரம் சூரிய ஒளி படும் இடம் கூட, வீட்டில் விளக்கு எரியும் இடம் கூட,  நம் கண்களுக்கு இருண்ட சூழ்நிலையை காட்டும். சில பேருக்கு கெட்ட நேரத்திற்கான அறிகுறி என்று கூட இதை சொல்லலாம். யாரையும் பயமுறுத்துவதற்காக இது சொல்லப்படுவதில்லை. ஆனால், சில வீடுகளில் இது நடக்கக் கூடியதுதான். இனம்புரியாத மனவருத்தமும...

பரிகாரம் :-

(1) ஓடும் தண்ணீரை தீய சக்தியால் தாண்ட முடியாது. (2) நம் சிறுநீரால் போட்ட கோட்டை நம்மை தாக்க வரும் தீயசக்தி தாண்ட முடியாது. (3) கமண்டலத்தில் உரு ஏற்றி வைத்துள்ள மந்திர தண்ணீரை சிறிது வலது கை உள்ளங்கையில் ஊற்றி நமக்கு சித்தியான மந்திரத்தை மனதிற்குள் மனம் ஒன்றி கூறி நம் முன் தெளித்தால் தீயசக்தி விலகிவிடும். (4) அக்னி வளர்த்து நம் தேவதையை நினைவு கூர்ந்தாலும் தீயசக்தி விலகி ஓடிவிடும். (5) இருபக்கமும் மூச்சு காற்றை நன்கு இழுத்து வேகமாக வெளியேற்றினால் தீயசக்தி ஓடிவிடும். (6) வலது காலை அழுத்தமாக பூமியில் உதைத்தாலும் தீயசக்தி விலகிவிடும். (7) வலதுகால் இடதுகால் பெருவிரலை பூமியில் அழுத்தி நின்றாலும் தீயசக்தி விலகிவிடும். (8) வலதுகை மணிகட்டில் ஒரு கயிரினை இருக்க மந்திரம் ஓதி கட்டினாலும் தீயசக்தி விலகிவிடும். (9) பாதிக்கப்பட்டவர் முகத்தில் மந்திரம் ஓதிய நீரை தெளித்தாலும், (10) வேப்பிலை இலையை கையில் வைத்திருந்தாலும், (11) மயில் இறகை கையில் வைத்திருந்தாலும், (12) எதாவது ஒரு உலோகத்தை கையில் வைத்திருந்தாலும்ம தீயசக்தி அணுகாது. தீயது இருந்தாலும் விலகிவிடும். (13) எலுமிச்சை கனியை கையில் வைத்திருந்தாலும் ...

துன்பங்கள் விலக கடைபிடிக்கவேண்டியவைகள்:-

துன்பங்கள் விலக கடைபிடிக்கவேண்டியவைகள்.....  ************************************************* * சிவன் கோவிலில் தரிசனம் முடிந்து வெளியே வந்து கொடி மரத்திற்கு அருகில் நமஸ்காரம் செய்து விட்டு, பின் ஆலயத்தின் உள்ளே சிறிது நேரம் அமர்ந்துதான் வரவேண்டும். அதனால் நம்மை பின் தொடர்ந்து வரும் சிவகணங்கள் கோவிலில் தங்கி விடும் பிரச்சனை இல்லை. * விஷ்ணு ஆலயத்திருக்கு இந்த விதி பொருந்தாது. பொதுவாக விஷ்ணு ஆலயத்திற்கு சென்று பிரகாரம் சுற்றும் போது, மகாலட்சுமி நம் கூடவே வருவதாக சொல்வார்கள். அதனால் கொடி மரத்தில் விழுந்து நமஸ்கரித்த உடனே வீட்டிற்கு வந்து விட வேண்டும். இல்லா விட்டால் நம்மோடு வந்த மகாலட்சுமி ஆலயத்திலேயே தங்கி விடுமாம். * கர்ப்பமான பெண்ணும் சரி, அவள் கணவனும் சரி, எந்த வேண்டுதலாக இருந்தாலும் குழந்தை பிறக்கும் வரை சிதறு தேங்காய் உடைக்க வேண்டாம். * மாலையில் பெண்கள் விளக்கேற்றி வைத்த பின் வெளியே செல்லக் கூடாது. * எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அஷ்டமி, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை ஆகிய திதிகளில் குளிக்க கூடாது. * உங்கள் ஜாதகத்தில் பாதக திசை நடந்தால், அல்லது ஏழரை சனி, அஷ்டம சனி, அ...