Posts

Showing posts from May, 2019

ஜோதிடத்தில் கர்ணம் :

பஞ்ச அங்கத்தில் கரணம் ஒரு அங்கமாகும். திதியில் இரண்டு கரணமாக வரக்கூடியது; அதாவது ஒரு திதியின் 12 பாகையில் 6 பாகைக்கு ஒரு கரணமாக 12 பாகைக்கு இரண்டு கரணமாக வரும்.கரணங்கள் மொத்தம் 11.   ஸ்திர நிலையான 4 கரணங்கள் அதாவது தேய்பிறை சதுர்த்தசி திதியில் இரண்டாவது கரணம் அமாவாசை திதியில் இரண்டு கரணம் வளர்பிறை பிரதமையில் முதல் கரணம் மட்டுமே அதாவது சகுனி,சதுஸ்பாதம்,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகியவைகள் ஸ்திர கணங்களாகும். மற்ற பவம்,பாலவம்,கெளலவம்,தைதுலம்,கரஜை,வணிஜை,பத்திரை(விஷ்டி) ஆகிய7 கரணங்கள் சர சுழற்சி முறையில் மற்ற திதிகளில் இயங்கக்கூடியவைகள். இதில் பவம்,பாலவம்,கெளலவம்,தைதுலம்,கரஜை ஆகிய 5 கரணங்கள் முழுக்க சுபதன்மைக் கொண்டவைகளாகும்.வணிஜை,சதுஷ்பாதம் ஆகிய இரண்டு கரணங்கள் மத்திமமான சுபதன்மக் கொண்டவை. பத்திரை(விஷ்டி),சகுனி,நாகவம்,கிம்ஸ்துக்னம் ஆகிய 4 கரணங்கள் அசுப தன்மை கொண்டவைகள்.ஒவ்வொரு வருடமும் தை மாத பிறப்பன்று மகர சங்ராந்தி தேவதை இந்த கரணங்களின் அடிப்படையில் தான் உருவம் கொண்டு பலன் உரைக்கப்படுகின்றன சங்கராந்தி தேவதை பலன்களை இன்னொரு பதிவில் விரிவாகப் பார்த்துக்கொள்ளலாம். இந்தப்பதிவில் சாஸ்திரம்...

அதிசய மருந்து மின்சார தைலம் !

Image
அதிசய மருந்து மின்சார தைலம் ! ************************************ 1. புதினா உப்பு  (மென்தால்- Menthol )   ----  30 கிராம் . 2.ஓம உப்பு   (தைமால்_Thymol)                   ----  30 கிராம்  3.பச்சை கற்பூரம்                            ---   30 கிராம் ( மூன்று பொருட்களும் சம எடை.) ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த முன்று பொருட்களையும் தனித்தனியாக தூள் செய்துஒன்றாக கலந்து சற்று  நேரம் வெயிலில் வைக்கவும் நீராக உருகி விடும்  பின் வடிகட்டி உபயோகிக்கலாம் . தீரும் நோய்கள் . ******************  1.சாதாரணம் சுரம்: மூன்று முதல் ஐந்து சொட்டு காபி அல்லது பாலில் கலந்து கொடுக்கவும் . 2. வயிற்று வலி: ஐந்து துளி வென்னீரில் கொடுக்கவும்.  3. வாந்தி தேனில் எலுமிச்சம்பழச் சாறு கலந்து மூன்று துளி விட்டுக் கொடுக்கவும்.  4. காலரா பழுப்பு சர்க்கரையில் மூன்று விட்டுக் கொடுக்கவும் 3 மணி நேரத்தில் நிற்காவிடில்...