மந்திர ஜெபம்

*மந்திர செபத்தில் வெற்றி பெற எமக்கு தெரிந்த விதிமுறைகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்*

  மந்திர செபம் வெற்றி அடைய நாம் செய்ய வேண்டியவை:-

*மந்திர செபத்தினை குறிப்பிட்ட திதி மற்றும் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும்*

*மந்திரம் செபம் செய்யும் போது நமது கவனம் மந்திர செபத்திலேயே தான் இருக்க வேண்டும்*

*மந்திர செபம் செய்யும் போது நமது உடல், மனம், வாக்கு மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும்*

*மந்திர செபம் செய்யும் காலத்தில் அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்*.

*மந்திர செபம் செய்யும் காலத்தில் மது பழக்கத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்*

*மந்திர செபம் செய்யும் காலத்தில் புகை பழக்கம் இருப்பின்  நிரந்தரமாக நிறுத்த வேண்டும*்.

*மந்திர செபம் செய்யும் காலத்தில் முறையற்ற உறவு இருப்பின் அதனை நிரந்தரமாக கைவிட வேண்டும்*

*மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பசுவிற்கு உணவளிக்க வேண்டும்*.

*மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும்*

*மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும்*

*மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பைரவரின் வாகனத்திற்கு உணவளிக்க வேண்டும்.*

*மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.*

*மந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் ஏதேனும் ஒரு வறியவருக்கு உணவளிக்க வேண்டும்.*

*பால், மோர், வெண்ணெய் மற்றும் நெய் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.*

*உணவில் தயிர் சேர்க்கக்கூடாது.  தயிர் மந்திர செபத்திற்கு தடைகளை உருவாக்கும்.*

*உணவில் பிரண்டையை சேர்த்திடல் வேண்டும்.  இது மந்திர செபத்திற்கு உண்டாகும் தடைகளை நீக்கும்.*

*செபம் செய்யும் முன்பு குவளையில் நீர், எலுமிச்சை சாறு, பனை வெல்லம் கலந்து வைக்க வேண்டும்.*

*ஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு சங்கினை வைத்து அதில் இளநீரினை ஊற்ற வேண்டும்.*

*மந்திர செபம் செய்வதற்கு முன் பால் அருந்த வேண்டும்.*

*பால் அருந்திய பின்பு சங்கல்பம் என்னும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.*

*சங்கல்பம் செய்த பின்பு 6 – 12 சுற்றுகள் பிராணாயாமம் செய்திடல் வேண்டும்.*

*12 சுற்றுகளுக்கு அதிகமாக பிராணாயாமம் அதிகமாக செய்தால் பெரும் தடைகள் உண்டாகும்.*

*பிராணாயாமம் செய்த பின்பு மந்திர செபம் செய்திடல் வேண்டும்.*

*மந்திர செபம் செய்வதை யாரிடமும் கூறக்கூடாது.*

*முதல் நாளிலேயே அதிகமாக செபம் செய்ய கூடாது.*

*படிப்படியாக செபம் செய்யும் நேரத்தினை அதிகரிக்க வேண்டும்.*

*ஒரே இடத்தில் தான் செபத்தினை செய்ய வேண்டும்.  அடிக்கடி இடத்தினை மாற்றுதல் கூடாது.*

*வெறும் தரையில் உட்கார்ந்து செபம் செய்தல் கூடாது.*

*உயரமான இடங்கள், கோவில்கள், பசு இருக்கும் இடங்களில் செபம் செய்ய வேண்டும்.*

 

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-